கண் திருஷ்டி நீங்க உருளி பரிகாரம்

uruli
- Advertisement -

தினமும் நாம நம்மளோட வேலையை பார்க்கிறோமோ இல்லையோ, அடுத்தவர்கள் என்ன வேலை செய்கிறார்கள், அடுத்தவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று நோட்டம் விடுவதை மட்டும் தவற மாட்டோம். ஒருவேளை சாப்பிடாமல் கூட இருப்போம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி புறம் பேசாமல் நம்மால் இருக்க முடியாது.

இப்படி நாம் அடுத்தவர்களை பார்த்து, அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று ஆராய தொடங்கி விட்டால், நம்மை பார்த்து நம் குடும்பத்தை பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு நிச்சயம் நான்கு பேர் வர தான் செய்வார்கள். நீங்க அடுத்தவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடாதீங்க. அடுத்தவர்களுடைய குடும்ப விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டாதீங்க.

- Advertisement -

உங்கள் குடும்ப விஷயத்தை தெரிந்து கொள்ள உங்கள் குடும்ப விஷயத்தில் மூக்கை நுழைக்க அடுத்தவர்கள் வர மாட்டார்கள். இதுதான் உண்மை. என்னதான் அடுத்தவர்களிடம் ஒதுங்கி இருந்தாலும் சரி, நம் வீட்டைத் தேடி வரக்கூடிய ஒரு சிலரை நம்மால் தவிர்க்கவே முடியாது. இவர்களுடைய கெட்ட எண்ணமும் கண் திருஷ்டியும் நம் குடும்பத்தையும், நம் வீட்டையும் தாக்காமல் இருக்க வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்யலாம்.

கண் திருஷ்டி நீக்கும் உருளி பரிகாரம்

பெரும்பாலும் இப்போது எல்லோர் வீடுகளிலும் அழகுக்காக உருளியில் தண்ணீர் ஊற்றி பூவை அலங்காரம் செய்து வைக்கும் வழக்கம் இருக்கிறது. அந்த உருளியை எடுத்துக்கோங்க. சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி அதில் கொஞ்சம் பச்சை கற்பூரம் போட்டு இதில் சிவப்பு நிற செம்பருத்திப் பூவை போட்டு நிலை வாசலுக்கு வெளியில் வச்சிருங்க.

- Advertisement -

வீட்டுக்குள் கெட்ட எண்ணத்தோடு யாரேனும் நுழைந்தால் கூட, அந்த எதிர்மறை ஆற்றலை, பச்சைக் கற்பூரம் சேர்த்த தண்ணீரும் இந்த பூவும் தன்னகத்தே ஈர்த்துக்கொள்ளும். தினமும் இந்த உருளியில் இருக்கும் தண்ணீரையும் பூவையும் மாற்றி வைக்க வேண்டும். இதே போல ஒரு உருளியை தயார் செய்து தொழில் செய்யும் இடத்தில், கடையில் கூட எல்லோர் கண்களிலும் படும்படி வரவேற்பு அறையில் ஒரு டேபிளின் மீது வைக்கலாம்.

இந்த சிவப்பு நிற செம்பருத்தி பூ கண் திருஷ்டியை நீக்கக்கூடியது. உருளி இல்லை என்றால், ஒரு கண்ணாடி டம்ளரிலோ, அல்லது அகலமான ஒரு கிண்ணத்திலோ தண்ணீர் ஊற்றி இந்த பூவை போட்டு வையுங்கள். கடையில் ஆயிரம் பேர் வியாபாரத்துக்கு வருவாங்க. ஒருவர் கண் போல இன்னொருவர் கண் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. இவ்வளவு சரக்கு கடையில் இருக்கிறதா, இவ்வளவு வியாபாரம் தினமும் நடக்கிறதா, என்று யாராவது ஒருவர் பெருமூச்சு விட்டாலும் முடிந்தது.

இதையும் படிக்கலாமே: தீராத பழி சொல் கெட்ட பெயர் நீங்க முருகன் வழிபாடு

அடுத்த நாளிலிருந்து வியாபாரம் ஓடாது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கவும் இந்த சிவப்பு நிற செம்பருத்திப்பூ உதவி செய்யும். அதுவும் அந்த செம்பருத்தி பூவை, பச்சைக் கற்பூரம் வாசம் நிறைந்த தண்ணீரில், இந்த பூவை போட்டு வைக்கும் போது அதனுடைய சக்தி பல மடங்காக பெருகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கண் திஷியால் கஷ்டப்படுபவர்கள் டக்குனு இந்த பரிகாரத்தை செஞ்சு பாருங்க. குடும்ப கஷ்டத்திற்கு உடனடியாக ஒரு விடிவு காலம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -