கண் திருஷ்டி நீங்க சிதறு தேங்காய் பரிகாரம்.

pillaiyar4
- Advertisement -

உங்களுக்கு ஏதாவது நல்ல காரியம் நடக்க போகுது என்றால், அந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பாகவே ஊர் முழுவதும் தம்பட்டம் அடிக்காதீங்க. எனக்கு புது வேலை கிடைச்சிடுச்சு, வெளிநாட்டில் வேலை கிடைச்சிருச்சு, சம்பளம் ரொம்ப அதிகம், அடுத்த வாரம் வேலையில் சேரப் போகின்றேன் என்று, வேலைக்கு சேர்வதற்கு முன்பே இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது.

இதே போல தான் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கப் போகும் நல்ல விஷயங்களை முன்கூட்டியே, சக உறவினர்களுக்கும், சக நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியின் மூலம் அந்த நல்ல காரியம் உங்களுக்கு நடக்காமல் போக வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களை குறை சொல்லவில்லை.

- Advertisement -

இதேபோல நல்ல வாய்ப்பு நமக்கு கிடைக்கல, நம் பிள்ளைக்கு கிடைக்கல, என்ற வருத்தம் அவர்களுக்கு நிச்சயம் வரும். அந்த வருத்தமே உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாகும். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க எளிமையான ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

கண் திருஷ்டி நீங்க விநாயகர் வழிபாடு

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிதறு தேங்காய் விட்டால் சங்கடங்கள் தீரும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதே போலத்தான் இந்த நாளில் விநாயகருக்கு சிதறு தேங்கா உடைத்தால் உங்கள் மீது பட்ட கண் திருஷ்டி நீங்கும். அது என்ன நாள். உங்களுடைய ஜென்ம நட்சத்திரம். நீங்கள் பிறந்த நட்சத்திரம் இருக்கும் அல்லவா. அது மாதத்தில் ஒரு நாள் வரும்.

- Advertisement -

அந்த நட்சத்திரத்தன்று விநாயகர் கோவிலுக்கு சென்று ஒரு தேங்காயை சிதறு தேங்காய் உடைத்தீர்கள் என்றால், உங்களை பிடித்திருக்கும் ஒட்டுமொத்த கண் திருஷ்டியும் நீங்கிவிடும். சில பேருக்கு பிறந்த தேதி தெரியாது, பிறந்த நட்சத்திரம் தெரியாது, ஜாதகமும் இருக்காது, இப்படிப்பட்டவர்கள் என்ன செய்வது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விநாயகர் கோவிலில் சிதற தேங்காய் உடைத்தால், உங்களை பிடித்த கண் திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து செவ்வாய் கிழமைகள் இதை செய்யுங்கள். நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

- Advertisement -

சில பேருக்கு வேறு விதமான பிரச்சனைகள் இருக்கும். சோம்பேறித்தனத்தோடு இருப்பார்கள். இதை செய்யணும், அதை செய்யணும், என்று மனதில் பெரிய கோட்டையை கட்டுவார்கள். ஆனால் அதை நிஜத்தில் செயல்படுத்தி காட்ட மாட்டாங்க. ஏதோ ஒரு தடை வந்து அவர்களை முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

நல்லது நடப்பது போல தெரிந்தாலும், அந்த நல்லதை நம்மால் நடத்திக் காட்ட முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கி இருப்பவர்களும் மேல் சொன்ன இதே பரிகாரத்தை செய்யலாம். பிள்ளையார் பாதத்தை பற்றிக் கொண்டால், எவ்வளவு பெரிய கடினமான கஷ்டங்களும் துன்பங்களும் கூட ரொம்ப ரொம்ப சுலபமாக நீங்கிவிடும். பிள்ளையாருக்கு அப்படி ஒரு பவர் இருக்குங்க.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் ஜெயிக்க முத்தான 3 பரிகாரம்

எங்கெங்கயோ போய் நிறைய செலவு செய்து பெரிய பெரிய பரிகாரம் செய்வதை விட, உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும், உங்கள் தெருமுனையில் இருக்கும் இந்தப் பிள்ளையாரை வழிபாடு செய்யுங்கள் போதும். எல்லா நன்மையும் உங்களை தேடி வரும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -