வாழ்க்கையில் ஜெயிக்க முத்தான 3 பரிகாரம்

mahalashmi3
- Advertisement -

எல்லோராலும், எல்லா விஷயத்திலும் வாழ்க்கையில் ஜெயித்து விட முடியாது. சில பேருக்கு சிலது கிடைக்கும். சில பேருக்கு சிலது கிடைக்காமல் இருக்கும். உதாரணத்திற்கு, சிலருக்கு கணவன் மனைவி அன்பான குழந்தை குடும்பம் கிடைத்திருக்கும். ஆனால் பணம் கிடைத்திருக்காது. சிலர் கையில் நல்ல பணம் இருக்கும். ஆனால் இல்லற வாழ்க்கை ரொம்ப ரொம்ப மோசமாக அமைந்துவிடும்.

வாழ்க்கையில் நிம்மதி என்பதை இல்லாமல் போய்விடும். சில பேருக்கு தொழிலில் தொடர் தோல்விகள் இருக்கும். அப்பா பெரிய பணக்காரரா இருப்பாரு. ஆனா பிள்ளையால் ஜெயிக்கவே முடியாது. சில பேருக்கு வேலையில் நிறைய பிரச்சனை இருக்கும். கை நிறைய சம்பாத்தியம் வாங்கினாலும், வேலையில் நிம்மதி இருக்காது. வேலையில் நிம்மதி இருந்தால், கை நிறைய சம்பாத்தியம் இருக்காது.

- Advertisement -

இப்படி வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை மனிதர்கள் இழுந்து தான் ஆக வேண்டும். எல்லா நன்மையும் நமக்கே கிடைக்க வேண்டும், என்றால் அது சாத்தியம் கிடையாது. சரி இதையெல்லாம் தாண்டி வாழ்க்கையை சுமூகமாக நடத்திச் செல்ல வேண்டும் என்றால் நாம் என்ன செய்வது. இதற்கும் ஆன்மீகத்தில் ஒரு சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து எளிமையான சுலபமான சில பரிகாரங்களை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வாழ்க்கையில் ஜெயிக்க ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரம்

வாழ்க்கையில் ஜெயிக்கனும் சந்தோஷமாக வாழனும், காதல், கல்யாணம், இவைகளில் மனதிருப்தி அடைய வேண்டும் என்பவர்கள் தினமும் காகத்திற்கு சாப்பிடு வையுங்கள். சாதம் வடித்த உடன், சூடான அந்த சாதத்தில் கொஞ்சமாக பசு நெய் விட்டு, உப்பு போட்டு கலந்து, அந்த சாதத்தை கொண்டு போய் குடும்ப தலைவன் கையாளோ, குடும்ப தலைவிக்கையாலோ காகத்திற்கு வைத்து வந்தால் உங்கள் இல்லற வாழ்க்கை இனிக்கும்.

- Advertisement -

சொந்த காலில் நிற்கணும். தொழிலில் ஜெயிக்கணும். அப்பா காசில் உட்கார்ந்து சாப்பிட கூடாது என்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் பெண் எருமையின் புகைப்படத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இதை உங்களுடைய பெட்ரூமில், நீங்கள் மட்டும் பார்க்கும்படி ஒரு இடத்தில் மாட்டி வைத்தாலும் சரி, அல்லது பர்ஸில் யாருக்கும் தெரியாமல் சின்ன புகைப்படமாக வைத்துக் கொண்டாலும் சரி, பெண் எருமையை நீங்கள் பார்க்க பார்க்க உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சொந்தக் காலில் நிற்கக்கூடிய பாக்கியம் கிடைக்கும். சொந்தத் தொழில் மட்டுமல்லாமல் நீங்கள் செய்யும் வேலையிலும் உங்களுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதையெல்லாம் தாண்டி வந்தாச்சுங்க. வாழ்க்கையில் ஜெயிச்சுட்டோம் பணமும் கொஞ்சம் சம்பாதிக்க தொடங்கி விட்டோம். ஆனால், அந்த பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும் ஒரு வழிபாடு தேவை அல்லவா.

இதையும் படிக்கலாமே: குடும்ப பிரச்சினைகள் தீர பரிகாரம்

தினமும் மகாலட்சுமியை நினைத்து வீட்டில் விளக்கி ஏற்றி வைக்கவும். விளக்கு ஏற்றும் போது மனதிற்குள் ‘ஸ்ரீம்’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள். உங்களுக்கு சம்பளம் வரும்போது, அந்த சம்பளத்தை செலவு செய்யும்போது, பணம் சம்பந்தப்பட்ட எந்த பரிவர்த்தனையை மேற்கொண்டாலும் சரி, மகாலட்சுமியை நினைத்து ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை சொல்லிக் கொண்டே இருந்தால் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு நல்லதே நடக்கும். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -