கண் திருஷ்டி கெட்ட சக்தி விலக அம்பாள் வழிபாடு

amman5
- Advertisement -

நம்முடைய வீட்டில் பணக்கஷ்டமும் மண கஷ்டமும் வருவதற்கு முதல் காரணம் கண் திருஷ்டி தான். இந்த கண் திருஷ்டியில் இருந்து விடுபடுவதற்கு எத்தனையோ ஆன்மீக பரிகாரங்கள் இருந்தாலும், இந்த அம்பாள் வழிபாடு ரொம்ப ரொம்ப மகத்துவம் வாய்ந்தது. உங்களுடைய வீட்டு பூஜை அறையில் அம்பாளின் திரு உருவப்படம் இருக்கிறதா, அந்த அம்பாளை எந்த கிழமையில், எந்த பூவை வைத்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி விலகும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கண் திருஷ்டி விலக அம்பாள் வழிபாடு

முதலில் உங்க வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அம்பாள் திருவுருவப்படத்தை வரவேற்பு அறையில் வைக்கலாம். அதாவது வீட்டிற்குள் நுழைபவர்கள் எல்லோர் கண்களுக்கும் படும்படி அம்பாளின் திருவுருவப்படம் இருக்கலாம். பூஜை அறையில் இருக்கும் படத்தை எடுத்து வெளியில் வைப்பதற்கு உங்களுக்கு மனசு சங்கடம் கொடுத்தாலும், புதுசாக ஒரு அம்பாளின் திரு உருவப்படத்தை வாங்கி வரவேற்பு அறையில் வையுங்கள்.

- Advertisement -

வீட்டிற்குள் நுழைப்பவர்களின் கண்களில் இந்த அம்பாளின் திருவுருவப்படம் நன்றாக தெரிய வேண்டும். அந்த அம்பாளுக்கு எப்போதுமே மஞ்சள் நிற பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் எந்த பூ கடைத்தாலும் சரி, சாமந்திப்பூ கிடைத்தாலும் வைக்கலாம். அம்பாளை பார்க்கும்போது அந்த மஞ்சள் நிற பூவும் நம்முடைய கண்களுக்கு பளிச்சென தெரிய வேண்டும்.

கெட்ட எண்ணத்தோடு நம் வீட்டிற்குள் நுழைப்பவர்கள், பொறாமை எண்ணத்தோடு நம் வீட்டிற்குள் நுழைப்பவர்கள், நமக்கு ஏதாவது தீமையை செய்ய வேண்டும் என்பதற்காக வீட்டில் நுழையும் எதிரிகளுக்கு எல்லாம் இந்த திரு உருவப் படத்தை பார்த்த உடனேயே மனசு மாறிடும். மனதிற்குள் அம்பாளின் மேல் பயமும் பக்தியும் வந்துவிடும் நமக்கு கெட்டது செய்ய மாட்டாங்க.

- Advertisement -

வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று அம்பாளுக்கு மஞ்சள் நிறத்தில் ஏதாவது ஒரு பிரசாதம் செய்து, நிவேதியம் வைக்கணும். மஞ்சள் நிறத்தில் கேசரி, எலுமிச்ச பழ சாதம், நெல்லிக்காய் சாதம் என்று உங்கள் விருப்பம் போல மஞ்சள் நிற சாதத்தை செய்து அம்பாளுக்கு படைத்து வேண்டிக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை அம்பாள் கும்பிட்டால் செய்வினை கூட உங்கள் பக்கம் வர பயப்படும்.

இப்படி வரவேற்பு அறையில் மஞ்சள் நிறத்தோடு மங்களகரமாக அமர்ந்திருக்கும் அம்பாள் உங்களுடைய குடும்பத்திற்கு பாதுகாப்பு கவசமாக இருப்பாள். இந்த அம்பாளை பார்த்த கண்கள் வேறு எந்த இடத்தை பார்த்தாலும் அந்த எதிர்மறை ஆற்றல் ஆனது தாக்கவே தாக்காது. பெரும்பாலும் கண் திருஷ்டி என்பது கண்களில் இருந்து வெளிப்படக்கூடிய விஷயம் தான்.

இதையும் படிக்கலாமே: அம்பாளின் படத்தை வீட்டில் இப்படி வைத்தால், கண் திருஷ்டி என்பதே நம் குடும்பத்திற்கு வராது.

அந்த கண்களே அம்பாளை பார்த்த பிறகு நேர்மறை ஆற்றல் கொண்டதாக மாறிவிடும். பிறகு இந்த கண்களில் இருந்து விழக்கூடிய பார்வையினால் உங்கள் வீட்டிற்கு எந்த பிரச்சனையும் வராது. எளிமையான பரிகாரம் தான். எந்த வீட்டு வரவேற்பு அறையில் அம்பாள் மஞ்சள் நிற பூக்களோடு அழகாக அமர்ந்திருக்கிறாளோ, அந்த வீடு மங்களகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -