குடும்பத்தில் பண மழை பொழிய, சந்தோஷம் நிலைத்திருக்க செய்ய வேண்டிய பரிகாரம்

vialkku1
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஓடி ஓடி வேலை செய்கின்றோம். அதில் நம்முடைய வாழ்க்கையை வாழவே மறந்து விடுகின்றோம். குடும்பத்தில் இருக்கும் சந்தோஷமே தொலைந்து போகின்றது. குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்தே வெகு நாட்கள் ஆகி இருக்கும். நீங்களே யோசித்துப் பாருங்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு, கடைசியாக எப்போது நேரத்தை செலவு செய்தீர்கள் என்று. பணம் சம்பாதிப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதோடு சேர்த்து உங்களுடைய வாழ்க்கையையும் சந்தோஷமாக அனுபவித்து வாழனும். வாழ்க்கையும் வயசும் போனால் திரும்பாது. உயிர் பிரியும் நேரத்தில், ‘எவ்வளவோ பணம் சம்பாதித்தோம்.

- Advertisement -

ஆனால், நாம் நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழாமல் விட்டு விட்டோமே’ என்ற சின்ன ஏக்கம் உங்களுக்கு வந்தால் கூட நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இருக்காது. ஆக பணமும் இருக்கணும், சந்தோஷமும் இருக்கணும், இதற்கு என்ன செய்யணும். இதோ ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாடு உங்களுக்காக.

வீட்டில் பணத்துடன் சேர்ந்து சந்தோஷம் இருக்க வழிபாடு

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் புங்கை எண்ணெய். அந்த காலத்தில் இந்த எண்ணெயை விளக்கு போடுவதற்காக பயன்படுத்தி வந்தார்கள். இந்த எண்ணெயில் விளக்கு போட்டால் வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். அடுத்து பரிகாரத்திற்கு நாம் அடுத்த பயன்படுத்த போகும் பொருள், வசம்பு. பணத்தை வசியம் செய்வதற்கு உண்டான ஒரு தாந்திரீக பொருள்.

- Advertisement -

வசம்பை நன்றாக இடித்து மிக்ஸியில் போட்டு அரைத்து தூள் செய்து கொள்ளவும். வசம்பு பொடியாக கிடைத்தால் இன்னும் சிறப்பு. புங்கை எண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் கொஞ்சம் வசம்பு பொடி போட்டு, நன்றாக சூடு செய்தால் சூப்பரான வாசம் நிறைந்த வசிய எண்ணெய் தயார்.

வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது காலை அல்லது மாலை நேரத்தில் பூஜையறையில் ஒரு மண் அகல் விளக்கில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த எண்ணெயை ஊற்றி திரி போட்டு, உங்களுடைய வீட்டில் சந்தோஷமும் குறையக்கூடாது. பணமும் குறைய கூடாது என்று குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து வேண்டுதல் வைத்தால், உங்கள் குடும்பம் செல்வ செழிப்பிலும் உயர்ந்த நிலையில் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் அதிகமாக சேர திலகம்

மகிழ்ச்சியிலும் நிறைவாக இருக்கும். இந்த விளக்கை தொடர்ந்து ஐந்து வாரம் பூஜை அறையில் ஏற்றிப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கும். பிரச்சனைகள் குறைவது, வருமானம் அதிகரிப்பது, போன்ற நல்ல மாற்றங்கள் தெரியவரும் பட்சத்தில் இந்த வழிபாட்டை தொடர்ந்து உங்களுடைய வீட்டில் மேற்கொள்ளும் போது குடும்பத்தின் வளர்ச்சி உச்சகட்டத்தை தொடும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -