கண்விழித்த உடன் இந்த 2 எழுத்து மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும். கனவிலும் கூட உங்களுக்கு நடக்காத நல்லது அன்றைய நாள் நடந்து விடும்.

amman2
- Advertisement -

கனவிலாவது ஏதாவது ஒரு நல்லது நடக்காதா என்று ஏங்கி காத்துக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள். இவர்கள் எதைத் தொட்டாலும் அதில் பிரச்சனை தான் வரும். எந்த ஒரு வேலையும் சரியாக நடக்காது. எந்த ஒரு வேலையை தொடங்கினாலும் அது பாதியிலேயே நின்று விடும். வெற்றியை இவர்கள் கனவில் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரச்சினைகளை தலையில் தூக்கி சுமந்து நடப்பவர்களுக்காக இந்த பிரத்தியேக பதிவு.

நீங்கள் தினமும் காலையில் எழுந்து உங்கள் பாதங்களை பூமியில் வைப்பதற்கு முன்பு, கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து இந்த இரண்டு எழுத்து மந்திரத்தை மூன்று முறை சொன்னால் போதும். அன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக மாறிவிடும். அது மட்டுமில்லாமல் நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்காத நல்லது தினம் தினம் உங்கள் வாழ்வில் நடக்க தொடங்கி விடும். துரதிஷ்டத்தை துரத்தி அடிக்கும் சக்தி கொண்ட அந்த மந்திரத்தை முறைப்படி எப்படி சொல்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

அதிர்ஷ்டம் பெற காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரம்:
ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம். காலையில் கண்விழித்த உடன் பல் தேய்க்க வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. அப்படியே கிழக்கு பார்த்தவாறு சமணம் போட்டு அமர்ந்து உங்களுடைய வலது கட்டை விரலை, நெற்றி பொட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு புருவத்திற்கும் நடுவில் லேசாக அழுத்தம் கொடுத்தபடி வைத்துக் கொண்டு ‘க்லீம்’ மந்திரத்தை மூன்று முறை சொல்ல வேண்டும்.

குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லுங்கள் ‘ஓம்’ என்ற மந்திரத்தை இழுத்து சொன்னால் எப்படி சொல்லுவோம். அதேபோல ‘கிலீம்’ என்ற மந்திரத்தை ‘க்லீலீலீம்ம்’ என்றபடி கொஞ்சம் ராகத்தோடு மனதில் உச்சரிக்கும் போது இந்த சத்தம் பிரபஞ்சத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றலை இழுத்து உங்களுக்கு கொடுத்து விடும். (இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி முடிக்கும் வரை உங்களின் வலது கை கட்டை விரல் நெற்றி பொட்டுக்கு நடுவில் தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)

- Advertisement -

மனதார இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு அதன் பிறகு எழுந்து தினசரி உங்களுடைய வேலையை செய்யலாம். அவ்வளவுதான். இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு உங்களுடைய தினசரி நாட்களில் நிகழும் நிகழ்வுகளுக்கும், இந்த மந்திரத்தை உச்சரித்த பின்பு தினசரி நாட்களில் நிகழக்கூடிய நிகழ்வுகளுக்கும் நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள். தொடர்ந்து இதை தினமும் செய்து வந்தால் உங்களுக்கான நல்லது தானாக நடக்கும். அதேபோல இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது எந்த ஒரு எதிர்மறையான எண்ணங்களையும் மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது.

இதையும் படிக்கலாமே: கடுமையான கடன் பிரச்சனை, கஷ்டங்கள் தீர இன்று அங்காராக பிரதோஷ நாளில் இப்படி வழிபாடு செய்தால் போதும். வாழ்நாளில் கடன் இல்லாத நிம்மதியான வாழக்கையை வாழலாம்.

எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புங்கள். எல்லாம் உங்களுக்கு வெற்றியைத் தான் கொடுக்கும் என்று நம்புங்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுபவர்களுக்கு இந்த மந்திரம் இன்னும் கொஞ்சம் ஊக்கத்தை கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை பெறுவீர்கள்.

- Advertisement -