கடுமையான கடன் பிரச்சனை, கஷ்டங்கள் தீர இன்று அங்காராக பிரதோஷ நாளில் இப்படி வழிபாடு செய்தால் போதும். வாழ்நாளில் கடன் இல்லாத நிம்மதியான வாழக்கையை வாழலாம்.

sivan
- Advertisement -

இந்தப் பிரதோஷ தினமானது எந்த நாளில் வந்தாலும் அது விசேஷமானது தான் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கான இந்த நாளில் பிரதோஷம் வந்திருப்பது தனி பெரும் பலனை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.இன்றைய தினத்தில் நாம் செய்யும் ஒரு சிறிய வழிபாடு நம்முடைய பெருமளவு கடன் சுமையையும், மனசுமையையும் தீர்த்து வைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கடன் பிரச்சனை கஷ்டங்கள் தீர வழிபாடு
செவ்வாய்க்கிழமையானது கடன் பிரச்சனை தீர்வதற்காக வழிபடக் கூடிய ஒரு முக்கியமான நாள் என்றே சொல்லலாம். இந்த செவ்வாய்க்கிழமையில் நாம் நிறைய வழிபாடுகளை செய்யலாம். அங்காரகனை வணங்குவது, முருகப்பெருமானை வணங்குவது, துர்க்கை அம்மனை வணங்குவது என செவ்வாய்க்கிழமைக்கென இத்தனை சிறப்பு அம்சங்கள் உள்ளது. அன்றைய நாளில் வந்திருக்கும் இந்த பிரதோஷம் ஆனது அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

- Advertisement -

பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை அணிவித்து எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபடுவது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீருவதற்கான சிறந்த வழியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல் நான்கிலிருந்து ஆறு முப்பது மணி வரை பிரதோஷ காலமாக சொல்லப்படுகிறது. இவை இரண்டும் ஒன்றாக இணைந்து வரும் இந்த நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாற்றி தீபம் ஏற்றி வணங்குவது பல வகையில் சிறப்பை தரும்.

இந்த வழிபாட்டை முடித்த பிறகு அப்படியே சிவபெருமானுக்குரிய பிரதோஷ வழிபாட்டையும் தொடர வேண்டும். இன்றைய பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்கள் காலையிலிருந்து மாலை வரை உண்ணாமல் விரதம் இருந்து பிரதோஷ கால பூஜையை பார்த்த பின்பு உணவு உண்பது மிகவும் சிறந்தது. இதே போல தொடர்ந்து 16 வாரங்கள் ஒருவர் தொடர்ந்து பிரதோச வழிபாட்டை மேற்கொண்டால் அவருடைய துன்பங்கள் அனைத்தும் நிச்சயம் தூரப் போகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அப்படியான இந்த வழிபாட்டில் அவருக்கு வில்வ இலையும், ஊமத்தம் பூவையும் வாங்கி வைத்து வணங்குவது உங்களுடைய தீராத கடன் பிரச்சனைகள் தீருவதற்கான சுலப வழியாக சொல்லப்படுகிறது. வில்வ இலை எப்படி சிவனுக்குரியதாக சொல்லப்படுகிறதோ, அதைப் போல் ஊமத்தம் இலையும் சிவபெருமானுக்கு முக்கியமானதாகவே சொல்லப்படுகிறது. ஆகையால் இன்றைய நாளில் இந்த வழிபாட்டை தவறாமல் செய்து விடுங்கள். ஒரு வேளை ஆலயங்களில் இந்த ஊமத்தம் பூவை வைத்து அர்ச்சனை செய்யவோ அல்லது தெய்வத்திற்கு சாற்றவோ முடியாது என்று சொன்னால் நீங்கள் வீட்டிலேயே கூட சிவபெருமானுக்கு வைப்பதாக நினைத்து பூஜை அறையில் இந்த பூவை வைத்து வணங்கலாம்.

இதையும் படிக்கலாமே: அனைத்து சுகங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ தேவையான பண வரவை பெறுவதற்கு இந்த ஒரு பொருளை வருடத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு தந்தாலே போதும்.

இன்றைய விசேஷமான இந்த பிரதோஷ நாளில் இந்த இரண்டு தெய்வங்களையும் மனதார நினைத்து அவர்களுக்கான முறையான இந்த வழிபாட்டை செய்யும் பொழுது உங்களுடைய பெருமளவு கடன் பிரச்சனை, மனப்பிரச்சனை அனைத்தும் தீர்ந்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்று தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -