காலை எழும் போது தவறி கூட இதை பார்க்க கூடாது. ஒரு வேளை பார்த்து விட்டால் அந்த நாள் முழுவதும் பெரிய போராட்டம் தான். இந்த தவறை நீங்கள் செய்வதாக இருந்தால் இன்றே மாற்றி கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தூங்கி மறுநாள் காலையில் கண் விழிப்பது மறுபிறவியை போன்றது. நாம் ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழிக்கும் போதும் அன்றைய நாளை ஒரு புதிய விடியல் போலவும், உற்சாகமான நாளாகவும் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். இப்படி நாம் நினைப்பதோடு அன்றைய நாளில் நாம் பார்க்க கூடியவை தான் அன்றைய நாளை தீர்மானிக்கிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு மனிதனும் சராசரியாக குறைந்தது ஆறு மணி நேரம் நல்ல ஒரு ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். அப்படி யொரு தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் பொழுது தான் நம்முடைய மனநிலையை உற்சாகமாக இருக்கும். இத்துடன் அந்த நாளை சிறப்பாக மாற்றக் கூடிய சக்தி நாம் காணும் காட்சிகளுக்கு உண்டு. அதே போல சில பொருட்களை காணும் போது அன்றைய நாள் மிகவும் சோர்வானதாகவும், துன்பமானதாகவும் மாற்றி விடுவதாக சொல்லப்படுகிறது அதையெல்லாம் பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் நாம் தூங்கி எழுந்ததும் பார்க்கக் கூடியவைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். காலையில் கண் விழிக்கும் போது சாந்தமாக இருக்கும் தெய்வ படங்களை தரிசிக்கலாம். இதில் உக்கிரமாக இருக்கும் படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதே போல அருவியில் இருந்து நீர் விழுவதைப் போல உள்ள படங்களை பார்க்கலாம். ஆனால் கடல் ஆர்ப்பரிப்பதை போலவும் கொந்தளிப்பது போலவும் உள்ள படங்களை பார்க்க கூடாது. அதை போல் மலர்களின் படங்கள், இயற்கை காட்சிகள், சூரியன் உதிக்கும் காட்சி போன்றவற்றை பார்க்கலாம். இதையே இயற்கை சீற்றங்களாக இருக்கும் படங்களை பார்க்க கூடாது.

சிலருக்கு அவர்களிடம் இருக்கும் பொருட்கள் சிலவற்றில் இது நமக்கு ராசியானவை என்ற எண்ணம் இருக்கும். அது போன்ற பொருட்களை தூங்கி எழுந்தவுடன் பார்க்கலாம். அதே போல் தூங்கி எழுந்தவுடன் பணக்கட்டு, சில்லறைகள் போன்றவற்றை பார்க்கலாம். இவை எதையும் பார்க்க முடியாத சந்தர்ப்பங்களில் எழுந்ததும் உள்ளங்கைகளை மட்டும் பார்த்தாலே போதும். உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. இந்த உள்ளம் கையை பார்ப்பது என்பது ஐஸ்வர்யம் மிக்க பொருட்களை பார்ப்பதற்கு ஈடான பலனை கொடுக்கும்.

- Advertisement -

தூங்கி எழுந்ததும் பார்க்க கூடாதவைகள்:
இன்றைய காலக்கட்டத்தில் தூங்கி எழுந்தவுடன் அனைவரும் முதலில் தேடுவது செல்போனை தான். இதைத் தான் நாம் எழுந்தவுடன் பார்க்கவே கூடாத, அதே சமயம் தவிர்க்க வேண்டிய ஒன்று. இது ஆரோக்கியத்திற்கு கேடானது என்பது ஒரு புறம் இருந்தாலும், ஆன்மீக ரீதியாக பார்க்கும் போது இந்த சாதனத்தை பார்ப்பதே அபசகுணம் என்று சொல்லப்படுகிறது.

அதிலும் நாம் காலையில் இதை எடுத்துப் பார்ப்பது ஏதேனும் நமக்கு தகவல் வந்திருக்கிறதா என்று பார்க்க தான். அபசுகுணமான வார்த்தைகள் கெட்ட செய்திகள் போன்றவை இருந்தால் விழிக்கும் நேரத்திலே இதெல்லாம் அன்றைய நாளை நமக்கு மிகவும் மோசமானதாக மாற்றக் கூடியவைகளாக இருக்கும். அப்படி கண் விழிக்கும் பொழுது இதை தான் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அதில் தெய்வத்தின் புகைப்படங்கள் அல்லது குழந்தை, இயற்கை காட்சி போன்றவற்றை வைத்து பார்க்கலாம். இதை தவிர்ப்பது தான் மிகவும் சிறந்த வழி.

இதையும் படிக்கலாமே: வாஸ்து படி வீட்டில் அதிக பணம் சேர எந்தெந்த பொருட்கள் இருக்கணும்னு தெரியுமா? இதெல்லாம் உங்க வீட்டில் இருக்கா?

அது மட்டும் இன்றி சண்டை போடுவது போன்ற படங்களை வைப்பதும், சண்டை போடுவதை பார்ப்பது, கொழுந்து விட்டு எரியும் தீ இது போன்ற படங்கள் பார்ப்பதையும் அறவே தவிர்த்து விட வேண்டும். ஒவ்வொரு நாளையும் இனிமையான நாளாக தொடங்க இந்த தகவல்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -