வாஸ்து படி வீட்டில் அதிக பணம் சேர எந்தெந்த பொருட்கள் இருக்கணும்னு தெரியுமா? இதெல்லாம் உங்க வீட்டில் இருக்கா?

muthumani-horse-vastu
- Advertisement -

வாஸ்து ரீதியாக சில பொருட்கள் நமக்கு அதிர்ஷ்டத்தையும், சில பொருட்கள் நமது துரதிர்ஷ்டத்தையும் கொடுப்பவையாக இருக்கின்றன. குறிப்பாக பலவித சிலைகள் வீட்டில் அலங்கரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எல்லா சிலைகளும் நேர்மறை ஆற்றல்களை வெளியிடாது. சிலவை எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் தன்மை கொண்டதாக இருக்கும். அந்த வகையில் வீட்டில் வாஸ்துபடி பணம் அதிகரிக்க இருக்க வேண்டிய பொருட்கள் மற்றும் சிலைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த வாஸ்து குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் வீட்டை அழகாக வைப்பதற்கு பல விதமான பொருட்களைக் கொண்டு அலங்கரிப்போம். அதில் யானை சிலையும் ஒன்று! யானையை பித்தளை அல்லது வெள்ளை நிறம் கொண்ட யானை சிலை அல்லது படங்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டம் வரும். யானையை இந்து மதத்தில் விநாயக கடவுகளாக வழிபடுகிறோம். வெற்றியின் அடையாளமாக இருக்கக்கூடிய இந்த யானை சிலை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டம். அதனால் தான் வீட்டு வாசலில் விநாயகர் சிலை பலரும் வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

வலம்புரி சங்கு மற்றும் முத்துமணி மாலை! கடலிலிருந்து கிடைக்கும் இந்த பொருட்கள் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. புதன் கிழமைகளில் சங்கை பூஜை செய்து பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் என்கிற ஒரு ஐதீகம் உண்டு. வாஸ்துபடி செல்வ செழிப்பு உண்டாக இந்த பொருட்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவையாக கருதப்படுகிறது.

ஓடும் குதிரை சிலை அல்லது படம் எது வீட்டில் வைத்திருந்தாலும், அதுவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய ஒரு வாஸ்து பொருளாக கருதப்படுகிறது. சிலையின் வேகம் நம் வாழ்க்கையிலும் வேகமான வளர்ச்சியை கொடுப்பதாக நம்பப்படுகிறது. இந்த குதிரை சிலையை வீட்டின் வடக்கு திசையில் பார்த்தபடி அமைப்பது அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருக்கும். மேலும் பண வரவும் அதிகரிக்கும் என்பதால் குதிரை சிலை வீட்டில் வையுங்கள்.

- Advertisement -

பொதுவாக ஆமையை துரதிஷ்டத்தின் அடையாளமாக கூறுவார்கள். ‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்கிற ஒரு பழமொழி உண்டு. இது முற்றிலும் திரிக்கப்பட்ட பழமொழியின் விளக்கமாக இருக்கிறது. உண்மையில் ஆமை அவதாரம், விஷ்ணு பகவானுடைய அம்சமாக இருக்கிறது. இதனால் ஆமை சிலை வீட்டில் இருந்தால் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டில் ஆமை சிலை வடக்கு திசையில் வைத்திருந்தால் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் அதிகரிக்குமாம்.

இதையும் படிக்கலாமே:
வீட்டைக் கூட்டினால் இந்த இடத்தில் மட்டும் தெரியாமல் கூட இனி குப்பையை குவிக்காதீர்கள் பணம் சேரவே சேராது!

இப்படி வாஸ்துவில் நிறைய சிலைகள் அதிர்ஷ்டம் தருபவையாக இருக்கின்றன. அதில் பசுவும் ஒன்றாக இருக்கிறது. பசுவின் சிலை அல்லது கன்றுடன் கூடிய பசுவின் படத்தை வீட்டில் ஒட்டி வைத்தால் அதிர்ஷ்டம் வந்து குவியும். குழந்தை இல்லாத இல்லங்களில் கன்றுடன் கூடிய பசுவின் சிலையை வைக்கலாம். குறிப்பாக பூஜை அறையில் கோமாதா சிலை வைத்து வழிபட்டு வந்தால், சகல செல்வ பாக்கியங்களும் கிடைக்கும். வறுமை நீங்கும், அதிர்ஷ்டம் வரும், பொருளாதாரம் பெருகும் என்பது நம்பிக்கை. பசுவின் சிலை வாஸ்து தோஷத்தை கூட போக்குபவையாக இருக்கிறது. இது மங்களகரமான விலங்கு என்பதால் எல்லா தெய்வங்களுடைய ஆசிர்வாதமும் கிடைத்து, நிதி நிலையானது மேம்படும். செல்வ வளம் அதிகரிக்க துவங்கும். துன்பம் நீங்கும், வறுமை ஒழியும், தன தானியத்திற்கு பஞ்சமே இருக்காது.

- Advertisement -