தொட்டா சிணுங்கி செடியை இப்படி செய்த பிறகு வீட்டில் வைத்து பாருங்க எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவி கூட ராசியானவர்களாக மாறி விடுவார்கள். பிரிந்து வாழும் கணவன் மனைவியை கூட சேர்த்து வைக்க கூடிய சக்தி வாய்ந்த செடி.

- Advertisement -

இன்றைய காலத்தில் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து வாழும் கணவன் மனைவிகளே அதிகம். இப்படி எந்த நேரமும் சண்டை போட்டுக் கொண்டே இருக்க  அவர்களுடைய மனநிலை ஒரு புறமாக இருந்தாலும், கிரக நிலையும், தோஷங்களும் கூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. இப்படியான தோஷங்களும் கிரக நிலைகளும் மாற இந்த ஒரு செடியை வீட்டில் வளர்த்தால் நல்லது என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன செடி என்பதை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய இந்த ஆன்மீக பரிகாரங்களில் விருச்சகங்களுக்கு என தனியான ஒரு மகத்துவம் உண்டு. ஒவ்வொரு மரம் கொடி இலை இவற்றிற்கெல்லாம் இருக்கும் தனிப்பட்ட சக்திகளை நாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் சரியாக பயன்படுத்தினோம் என்றால் நிச்சயம் நம் நல்ல முறையில் வாழலாம். அந்த வகையில் எப்போதும் ஒரு சில செடிகளை வீட்டில் வளர்த்துக் கொண்டிருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகி வீட்டில் நிம்மதி நிலவும்.

- Advertisement -

அப்படியான செடி வகைகளில் மணி பிளான்ட், துளசி, மல்லி, மாதுளை போன்ற செடிகள் வீட்டில் வளர்க்கும் போது தெய்வீகத் தன்மையுடன் பணவரவையும் அதிகரிக்கும். அந்த வகையில் தொட்டாச்சிணுங்கி செடியை வீட்டில் வளர்த்து வரும் போது அது கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரித்து அவர்களுக்குள் ஒரு அன்னோனியத்தை எப்போதும் வளர செய்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க
முதலில் இந்தச் செடியை ஒரு சிறிய மண் தொட்டியில் வைத்து அந்த தொட்டிக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வீட்டில் தென் கிழக்கு அல்லது தெற்கு திசையில் வைக்க வேண்டும். அது மட்டும் இன்றி அந்தத் தொட்டியின் நான்கு பக்கமும் 520741 என்ற எண்ணை எழுதி வைக்க வேண்டும். இந்த தொட்டியில் உள்ள செடிக்கு தினந்தோறும் ஊதுபத்தி காட்டி குடும்பம் நல்ல முறையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு வேளை கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் சமயத்தில் மீண்டும் சேர வேண்டும் என நினைத்து இந்த பரிகாரத்தை செய்தாலும் அதற்குரிய பலன் உடனடியாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் நம்முடைய தாந்திரீக பரிகாரத்துடன் ஏஞ்சல் எண் குறியிடும் சேர்ந்து இருப்பதால் இதற்கான பலன் அபரிதமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் வைத்து வழிபட கூடாத தெய்வங்கள் யார்

குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் சண்டை சச்சரவு உடனே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த நிலை மாற வேண்டும் என நினைத்தால் இந்த பரிகாரத்தை செய்து நிச்சயம் பலன் அடையலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ முற்படுங்கள்.

- Advertisement -