கணவன் மனைவி ஒற்றுமை பலப்பட

vinayagar husband wife
- Advertisement -

குடும்பம் எப்பொழுது சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும் என்றால் அந்த குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏதும் இல்லாமல் கணவன் மனைவி நல்ல புரிதலோடு இருக்க போது தான். இப்பொழுது பெரும்பாலான குடும்பங்களில் தினம் சண்டை தான். இதன் மூலம் கணவன் மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் பிரிவு போன்றவை ஏற்படுகிறது. இதற்கு பல வகையான காரணங்கள் சொல்லப்பட்டாலும் கிரக கோளாறுகள் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

அப்படி கிரக கோளாறு அல்லது சூழ்நிலை காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த சூழ்நிலை மாற்றி இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் அது என்ன பரிகாரம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ
இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக கணவன் மனைவி இருவருக்குள்ளும் தாங்கள் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் நல்லபடியாக இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது கணவன் தனியாக மனைவி தனியாக இருந்தாலும் செய்யலாம் அல்லது ஒரே வீட்டில் இருந்து கொண்டு ஏதேனும் மனஸ்தாபம் வந்து கொண்டே இருப்பவர்களும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்யலாம்.

இதற்கு ஒரு விரல் அளவிற்கு வேப்பங்குச்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு விரல் அளவிற்கு அரசன் குச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அரசன் கொச்சி ஆணாகவும் வேப்பங்குச்சி பெண்ணாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு குச்சியின் நடுவிலும் லேசாக சீவி விட்டு அந்த இடத்தில் தேன் தேய்த்து இரண்டு குச்சியும் ஒன்றாக இணைத்து கொள்ளுங்கள். இதை ஒரு மஞ்சள் நிற நூலால் நன்றாக கட்டி விநாயகர் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதையே ஆலயத்திற்கு கொண்டு சென்று விநாயகர் பாதத்தில் வைத்து விட்டு வந்தாலும் தவறில்லை. இதை வைத்த 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்து விட்டு வேறு புதிதாக மாற்ற வேண்டும் ஆலயத்தில் வைப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறை வைத்து வணங்க வேண்டும். அத்துடன் தினம் தினம் விநாயகருக்கு முன்பாக நின்று எங்களுடைய இந்த மனஸ்தாபம் நீங்கி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:

இதை செய்து வைத்த முதல் பதினைந்து நாட்களுக்குள்ளாகவே நல்ல மாற்றங்கள் தெரியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல் அரசமரம் வேப்பமரம் ஒன்றாக இணைந்திருக்கும் இடத்திற்கு சென்று மரத்தினை தீபம் ஏற்றி வழிபட்டு வருவது மேலும் சிறந்த பலன்களை தரும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீர சிறந்த அதே நேரத்தில் சக்தி வாய்ந்த பரிகாரமாக இதை கருதப்படுகிறது. நம்பிக்கை உள்ள தம்பதியினர் இதை நம்பிக்கையுடன் செய்து தங்கள் வாழ்க்கையில் வசந்தமாக வாழ வழி தேடி கொள்ளலாம்.

- Advertisement -