கணவன் மனைவியின் பேச்சை கேட்க இந்த மூன்று மந்திர வார்த்தைகள் போதும்

husband
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இவர்கள் இருவரை வைத்து தான் அவர்களின் குடும்ப வாழ்க்கை நகர்ந்து செல்லும். இதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் அக்கறையுடன் இருக்கவேண்டும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு கணவன் மனைவி இருவரும் நல்ல மன ஒற்றுமையுடன் நடந்து கொண்டால் அவர்களின் வாழ்வு சுகமாக அமையும். இவ்வாறு ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியை பார்ப்பவர்கள் இவள் என்ன தலையணை மந்திரம் செய்தாலோ இவர்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றும் கூறுவார்கள். இவ்வாறு கணவன் மனைவி பேச்சைக் கேட்டு இருவரும் ஒற்றுமையாக வாழ இந்த மூன்று மந்திர வார்த்தைகளை தெரிந்து கொண்டால் போதும். அவை என்ன என்பதனை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kanavan manaivi

நாம் இறைவனை தொழுவதற்காக கோவிலுக்கு செல்வோம். அந்த கோவிலில் முக்கியமான இடங்கள் பல இருக்கின்றன. கோவின் மண்டபம், கொடிமரம், தண்ணீர் குளம், விளக்கேற்றும் இடம் இவ்வாறு பல இடங்கள இருக்கும். ஆனால் கோவிலில் மிகவும் முக்கியமான இடம் எது என்றால் கடவுள் இருக்கும் கருவறை தான். கோவிலை சுற்றி எல்லா இடத்திலும் எவ்வளவு சத்தங்கள், இரைச்சல்கள் இருந்தாலும் கடவுள் இருக்கும் கருவூலத்திற்கு அருகே செல்லும் போது அனைவரும் அமைதியாக இறைவனை மட்டும் தான் தொழுவார்கள் இவ்வாறு அமைதி நிறைந்ததும், சத்து நிறைந்ததுமான இடம் கோவிலின் கருவறை ஆகும்.

- Advertisement -

அவ்வாறு ஒவ்வொரு வீட்டினுள்ளும் இருக்கும் கருவறை என்பது அந்த வீட்டின் படுக்கை அறைதான். கடவுளின் கருவறையிலீ எவ்வளவு புனிதமான சக்திகள் இருக்கின்றதோ, அவ்வாற நமது குடும்பத்தின் இனிமையான வாழ்க்கைக்கு சக்தி அளிக்கும் இடம் படுக்கை அறை ஆகும்.

bedroom

கணவன் மனைவி இருவரும் எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அதனை உங்கள் வீட்டில் மற்ற பகுதிகளில் அமர்ந்து சத்தமாக பேசிக் கொள்ளலாம். ஆனால் படுக்கை அறைக்கு வரும் பொழுது அங்கு எந்தவித சத்தமும் இருக்கக் கூடாது. அந்த இடம் எப்பொழுதும் அமைதியாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் கணவன் மனைவி இருவரின் உறவும் பலப்படும்.

- Advertisement -

தலையணை மந்திரம் என்ற வார்த்தையை அனைவரும் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் இதற்கு அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அவ்வாறு தலையணை மந்திரம் என்பது மூன்று வார்த்தைகள் தான் அதில் முதல் வார்த்தை அன்பு கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்க வேண்டும்.

Love kavithai

இரண்டாவதாக நேசம் கணவன்-மனைவிக்குள் எந்தவித பிரச்சனை இருந்தாலும் மன குறை இருந்தாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் அதிகமாக நேசிக்க வேண்டும். எப்பொழுதும் விட்டுக் கொடுக்க கூடாது எந்த அளவிற்கு ஒருவர் மீது ஒருவருக்கு நேசம் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் உறவும் பலமாக இருக்கும்.

அடுத்ததாக காமம் நமது இலக்கியங்களிலும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என காமம் என்பதை மிகவும் அடிப்படையாக கூறியிருப்பார்கள். அவ்வாறு கணவன் மனைவிக்குள் வரும் சண்டைகள் அனைத்தும் சரி செய்யக் கூடியவையாக தான் இருக்கும். அந்த சண்டைகளை மனதில் வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் இன்றே பிரிந்து விடுவோம் என்ற அர்த்தத்தில் பகைமை உணர்வை வளர்க்க கூடாது.

fight2

எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் அன்பின் மூலம் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும். அவ்வாறு பெண்கள் கணவரிடம் அன்பாக நேசத்துடன் நடந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். பெண்கள் இதனை தெளிவாக புரிந்து கொண்டால் உங்களின் இல்லற வாழ்க்கை எப்பொழுதும் வளமாக இருக்கும்.

- Advertisement -