கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் எல்லாமே தீர நீங்கள் படுக்கும் அறையில் உப்பை இப்படி செய்யுங்கள்.

fight-salt
- Advertisement -

கணவன் மனைவி எனும் புனிதமான இந்த பந்தத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தால் உங்களுடைய அடுத்த தலைமுறை வரை அந்த பாதிப்புகள் தொடரும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ! அதே போல தான் உங்கள் பிள்ளைகளும் நடந்து கொள்வார்கள். உங்களைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு நீங்கள் எதைச் சொல்லிக் கொடுக்க விரும்புகிறீர்கள்? யாருமே வேண்டும் என்று யாரையும் குற்றம் சாட்டுவது கிடையாது. எனினும் திருமண பந்தத்தில் கோபத்தை அடக்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் இறைவனுடைய அருளையும் பெற்றுக் கொள்ளலாம். அது எப்படி? கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க படுக்கை அறையில் உப்பைக் கொண்டு என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிய மேலும் இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

sad-crying4

மனம் என்பது ஒரு குரங்கு போல தாவிக் கொண்டே இருக்கும். இன்று சரியென்று தோன்றும் நமக்கு, நாளை அதுவே சரி இல்லை என்று தோன்றுகிறது. இப்படி இருக்க கணவன்-மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகளை மற்றவர்களிடம் வரை கொண்டு போய் விடும் பொழுது அது பூதாகரமாக வெடிக்கிறது. தனியாக இருக்கும் கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகளை விட, கூட்டு குடும்பமாக இருக்கும் பொழுது இது தீவிரமாகிறது. சிறு சிறு விஷயங்களில் கூட பெரியவர்கள் வந்து மூக்கை நுழைக்கும் போது ஒன்றுமில்லாத விஷயங்கள் கூட கை, கால் முளைத்து உருவமாக உருப்பெறுகிறது.

- Advertisement -

உங்களுடைய பிரச்சினைகளை கூடுமானவரை உங்களுக்குள் உங்கள் இருவருக்குள் மட்டுமே தீர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மூன்றாம் நபர்களுக்கு தெரியும்படி சண்டையிட்டால் அங்கு நிச்சயம் பிரிவு உண்டாக வாய்ப்புகள் பன்மடங்கு பெருகுகிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. நல்லது, கெட்டது என எல்லோருக்குள்ளும் எல்லாமுமே இருக்கும். உங்கள் துணையிடம் இருக்கும் நல்லவற்றை மட்டும் பட்டியலிடுங்கள்.

fight

எப்பொழுதும் குறையை கண்டு பிடித்துக் கொண்டிருந்தால் இருக்கும் நிறை கூட குறையாக தெரிய ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனை எப்பொழுது வழக்கமாக மாறுகிறதோ! அப்பொழுது உங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களின் ஆதிக்கம் வலு பெற்று உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த எதிர்மறை ஆற்றல்களை நீக்கி உங்களை சுற்றி இருக்கும் நேர்மறை ஆற்றல்களை பெருக செய்ய நீங்கள் படுக்கும் அறையில் உப்பைக் கொண்டு இதை ஒன்பது நாட்கள் மட்டும் செய்யுங்கள்.

- Advertisement -

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நீங்கள் படுக்க செல்லும் முன்பு படுக்கை அறையில் நீங்கள் தூங்கும் இடத்திற்கு அருகில் ஒரு வாளியில் கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் உப்பு கரையுமாறு தண்ணீரையும் ஊற்றி கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை கணவன் மனைவி இருவரில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். யாராவது ஒருவர் செய்தால் போதும். பின்னர் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அந்த தண்ணீரை யாருடைய கால்களிலும் படாதவாறு ஒரு இடத்தில் ஊற்றிவிட்டு வந்து விடுங்கள். கண்டிப்பாக உங்கள் வீட்டில் இருக்கும் செடி, கொடிகளுக்கு ஊற்றக் கூடாது. வேறு எங்காவது விடலாம் அல்லது சிங்கிள் கரைத்து ஊற்றி விடுங்கள்.

epsam-salt

இது போல ஒவ்வொரு முறையும் புதிதாக உப்பை கரைத்து தூங்கும் பொழுது அருகில் வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் ஊற்றி வந்தால், உங்களிடம் இருக்கும் எல்லா விதமான எதிர்மறை சக்திகளும் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் செய்யக்கூடாது. உங்கள் துணைக்கு தெரிந்தது தான் நீங்கள் செய்ய வேண்டும். அப்போது தான் பூரண பலன் அளிக்கும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -