வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டை வருகிறதா? அப்படியானால் வீட்டில் இந்த ஒரு விளக்கை மட்டும் தவறாமல் ஏற்றினால் போதும். போர்க்களமாக இருக்கும் இல்லம் கூட அமைதி பூங்காவாக மாறி விடும்.

husband wife god
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் உலகமே வீடு தான். வீடு எந்த அளவிற்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருகிறதோ அந்த அளவு அவன் வெளி உலகில் சாதிக்க முடியும்.வீடு தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம். அந்த வீட்டில் என்ன நேரமும் சண்டை சச்சரமும், அமைதியின்மையும் நிலவில் கொண்டு இருந்தால் அந்த குடும்பத்தில் நிம்மதி இருக்காது. அதை சரி செய்வதற்காக ஒரு எளிய தீபமுறையை தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நம் வீட்டு பெரியவர்கள் வீட்டை கோவில் போல வைத்திருக்க வேண்டும் என்று சொல்ல நான் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு காரணம் ஒரு கோவிலுக்குள் செல்லும் பொழுது நம்முடைய துன்பமெல்லாம் கரைந்து மன நிம்மதி அடைந்து ஒரு அமைதியை தரும். அத்தகைய சூழ்நிலை வீட்டிற்குள்ளும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அந்த வார்த்தையை சொல்லி வைத்தார்கள்.

- Advertisement -

சில இடங்களில் கணவன் மனைவி எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டை, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டால் எரிச்சல் இப்படியான சூழ்நிலைகள் இருந்தால் அதை மாற்ற குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இந்த தீபத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் தான் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை உங்கள் வீட்டில் சமையல் அறையில் தென்கிழக்கு மூளையில் குலதெய்வத்தின் படத்தை வைத்து ஒரே ஒரு தீபத்தை தினமும் ஏற்ற வேண்டும். இந்த தீபம் காலை சூரிய உதயத்தின் போதும் மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த விளக்கை சமையலறையில் வைத்து ஏற்றுவதால் அசைவம் சமைக்கும் போது எந்த பாதிப்பும் ஏற்படாது. குலதெய்வத்திற்கு சைவம் அசைவம் என்ற இந்த விதிமுறைகள் எதுவும் கிடையாது. எனவே தாராளமாக சமையல் அறையில் வைத்து விளக்கேற்றலாம். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அந்த தெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு ஒரு அகல் விளக்கை மட்டும் ஏற்றினால் கூட போதும். அந்த இடத்தில் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள், மாந்திரீக சக்திகள், அல்லது நாம் தெரியாமல் செய்த தவறு, நம்முடைய கர்மா, குலதெய்வத்தின் கோபம், கண் திருஷ்டி இப்படி ஏதாவது ஒன்றின் காரணமாகத் தான் இது போன்ற பிரச்சனைகள் எழும் இந்த தீபத்தை நாம் தொடர்ந்து ஏற்றி வரும் பொழுது மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த 2 செடிகளை வீட்டில் ஒன்றாக நட்டு வைத்து வளர்தால் போதும். உங்கள் அடுத்தடுத்த சந்ததிக்கு கூட கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்பதே இருக்காது.

வீட்டில் என்றும் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்து இருந்தாலே அனைத்து செல்வங்களும் நம்மை தேடி வருவதற்கான வழி கிடைக்கும் இந்த தீபத்தை நம்பிக்கையுடன் ஏற்றி சந்தோஷமான வாழ்க்கையை வாழ தொடங்குங்கள்.

- Advertisement -