கணவன் மனைவிக்குள் இந்த 1 விஷயம் இருந்து விட்டால் போதுமே. ஆயுசுக்கும் பிரிவு என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது.

- Advertisement -

கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. பிரச்சினை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளை தாண்டி சந்தோஷமாக வாழ்வது எப்படி. இந்த ஒரு சூட்சுமத்தை மட்டும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால், கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வந்தாலும், பிரச்சனைகள் வந்தாலும் சண்டை வந்தாலும், அதிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். நிச்சயமாக பிரிவு வராது. அந்த வித்தையை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வம் உள்ளதா? கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுக்கும் சுபாவம் இருக்கவேண்டுமா? அல்லது கணவன் சொல்லும் பேச்சை மனைவி தட்டாமல் கேட்க வேண்டுமா.

Hindu Marriage

கணவன் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்து விட்டால் பிரச்சினைக்கு இடமிருக்காதா! கணவன்-மனைவிக்குள் காதல் இருக்க வேண்டுமா? அந்நியோன்யம் இருக்க வேண்டுமா? என்ன தான் அந்த ஒரு விஷயம்? இதில் எதுவுமே கிடையாது. ‘பாராட்டு!’ பாராட்டு என்ற ஒரு வார்த்தை கணவன் மனைவிக்கு இடையே நல்லதொரு பாலமாக அமையும்.

- Advertisement -

மனைவி, தன்னுடைய கணவருக்காக பார்த்து பார்த்து செய்யக்கூடிய ஒவ்வொரு வேலைக்கும் கணவன் தன்னுடைய பாராட்டை மனதார வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மனைவி செய்யக்கூடிய சாப்பாடு நன்றாக இருந்தால் அதைப் பாராட்ட வேண்டும். உங்கள் கையில் பணம் காசு இருக்குதோ இல்லையோ ‘காசு இருந்திருந்தால் தங்க வளையல் மோதிரம் உன் கைக்கு போட்டுவிட்டு இருப்பேன்!’ என்று பாராட்டு வார்த்தைகளை மட்டும் சொல்லிப் பாருங்கள். வேறு என்ன வேணும் மனைவிக்கு. ஆயுள் முழுவதும் கணவனுடன் சந்தோஷமாக வாழ தயாராக இருப்பார்கள்.

husbund-and-wife1

பொதுவாகவே பெண்கள் பிறந்த வீட்டில் ஆரவாரத்துடன் வளர்ப்பவர்கள். வீட்டிலிருக்கும் பெண் குழந்தைகள், வயதுக்கு வந்த பெண்கள், அழகாக அலங்காரம் செய்து கொண்டால், அந்த வீட்டில் இருக்கும் மற்ற உறவுகள் அப்பா, அண்ணன், தம்பி, மாமா, அம்மா, அக்கா, தங்கை என்று அந்த பெண்ணை பாராட்டி கொண்டே இருப்பார்கள். அந்தப் பாராட்டை அவர்கள் புகுந்த வீட்டில் வந்தவுடன் இழக்கும் போது, அவர்களுக்கு ஒரு மன வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

- Advertisement -

பிறந்த வீட்டில் பெண்களை பாராட்டும் அளவிற்கு இல்லை என்றாலும், மனைவி ஒரு அழகான புடவை உடுத்திக் கொண்டால் அதை பார்க்கும் கணவன், இந்த புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க என்று மட்டும் சொல்லி பாருங்க! உங்க வாழ்க்கை வேற லெவல். பின்னாடி கணவன்மார்கள் பெரிய தப்பு பண்ணி மாட்டிக் கொண்டாலும், அதில் வரும் பிரச்சனைகளில் இருந்து சுலபமாகத் தப்பித்துக் கொள்வீர்கள்.

husbund-and-wife2

இது மனைவிக்காக. சில பேர் வீடுகளில் கணவருக்கு மனைவியை கவனிக்க நேரமே இருக்காது. வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரமே குறைவாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது என்றாவது ஒருநாள் கணவர், மனைவிக்காக நேரத்தை ஒதுக்கி, உங்களுடன் நேரம் செலவழித்து உங்களுக்கு ஒரு முழம் மல்லிகைப் பூவை வாங்கி கொடுத்தாலும் அதனை பாராட்டுங்கள். அதை விட்டுவிட்டு ‘இன்னைக்கு தான் உங்களுக்கு கண்ணு தெரிஞ்சுதா, வீட்டில் நான் இருப்பது. இத்தனை நாட்களாக இந்த பாசம் எங்கே போனது’ அப்படி இப்படின்னு அவர்களை மனைவி திட்டி விட வேண்டாம்.

husbund-and-wife3

கணவர் உங்களுக்காக ஆசையாக ஒரு கைக்குட்டை வாங்கி கொடுத்தாலும் அதற்கான பாராட்டை தெரிவியுங்கள். கணவர் வீட்டில் ஆசையாக ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாலும், அதாவது வீட்டில் சிறு உதவியை மனைவிக்கு செய்ய வரும்போது, அதற்காக அவரை பாராட்டுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை அவர் செய்துவிட்டால், அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் படி பேசினாலே போதும். கணவன்மார்கள் ஆயுசுக்கும் மனைவிமார்களின் பாசத்திற்கு கட்டுப்பட்டு குடும்பத்தை நடத்திச் செல்வார்கள். பிரச்சனைகள் வராது. நீங்கள் இந்த டிப்ஸை ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

- Advertisement -