கணவரின் ஆயுள் பலம் கூட, வீட்டில் மங்கல காரியங்கள் தடைபடாமல் ஒவ்வொன்றாக தொடர்ந்து நடக்க, நிலை வாசலில் இந்த 1 பொருளை கட்டி வையுங்க.

mangalyam
- Advertisement -

ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கக்கூடிய முதல் வேண்டுதல் இதுவாகத்தான் இருக்கும். தன்னுடைய கணவர் ஆயுள் பலத்தோடு இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தில் அடுத்தடுத்து மங்களகரமான காரியங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த வேண்டுதலை இறைவனிடம் வைக்காத பெண்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது.

இவ்வளவு பெரிய வரங்கள் எல்லாம் சுலபமாக கிடைக்க, ஆன்மீகத்தில் ஒரு எளிமையான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. இந்த 1 பொருளை நிலை வாசலில் கட்டி வைத்தால், கணவர் ஆரோக்கியத்துடன் இருப்பார். நீண்ட நாள் ஆயுளுடன் இருப்பார். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம். வீட்டில் சுபகாரியத்தடை இருக்கவே இருக்காது. நிலை வாசலில் கட்டக்கூடிய அந்த ஒரு பொருள் என்ன பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கணவர் ஆயுள் பலத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்:
நிலை வாசலில் கட்ட வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன தெரியுமா. 3 குண்டு மஞ்சள். சில பேர் இதை கிழங்கு மஞ்சள் என்றும் சொல்லுவார்கள். புதுசாக 3 மஞ்சள் வாங்கிக் கொள்ளுங்கள். மஞ்சள் துணியில் மூன்று கிழங்கு மஞ்சள் வைத்து ஒரு நூல் போட்டு முடிச்சாக கட்டி இதை நிலை வாசலில் மாட்ட வேண்டும்.

வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டி, மஞ்சள் துணியை எடுத்து, 3 மஞ்சளை எடுத்து அந்த துணியில் வைத்து, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். மாலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். பூஜை அறையில் இந்த மஞ்சள் முடிச்சை வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனமுருகி வேண்டி குடும்ப நன்மைக்காக இந்த முடிச்சை எடுத்து நிலை வாசலில் கட்டி தொங்க விட்டு விடுங்கள். நிலை வாசலில் மஞ்சள் முடிச்சு கட்டும்போது குலதெய்வத்தின் பெயரை மனதோடு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான். பரிகாரம் முடிந்தது.

- Advertisement -

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது ஒரு ஊதுவத்தியை கொண்டு போய் அந்த மஞ்சள் முடிச்சுக்கு காண்பித்து, குலதெய்வத்தை வேண்டினால் போதும். உங்கள் குடும்பத்தில் சகல சௌகரியமும், ஐஸ்வர்யமும் சந்தோஷமும் பெருகும். சில பேர் வீட்டில் கணவருக்கு சரியான வருமானம் இருக்காது. கணவருக்கு தீர்க்க முடியாத வியாதி ஏதாவது இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வீட்டில் இந்த பரிகாரத்தை செய்தால், கணவரால் வரக்கூடிய கஷ்டத்திற்கு உடனடியாக விமோசனம் கிடைக்கும்.

சில பேர் வீடுகளில் கணவருக்கு தவிர்க்க முடியாத கெட்ட பழக்கங்கள் இருக்கும். தவறான பாதையை நோக்கி கணவர் செல்வார். அப்படிப்பட்ட வர்கள் கணவராக இருந்தாலும், அவர்களுடைய மனைவிமார்கள் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்கள் கணவரின் நன்மைக்காக என்ன வரம் வேண்டுமோ, அதற்கு குல தெய்வத்திடம் மனம் உருகி வேண்டி மஞ்சள் முடிச்சை கட்டுங்கள். நிச்சயமாக இந்த வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: மேஷத்தில் உதயம் ஆன குரு பகவான். இதனால் அதிஷ்டம் பெரும் 5 ராசிக்காரர்கள்

ஆனால் நிலை வாசலில் மஞ்சளை கட்டிய பிறகு, மூன்று மஞ்சலிலும் ஒரு வண்டு கூட வரக்கூடாது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை முடிச்சை அவிழ்த்து பார்க்க வேண்டும். ஒரு மஞ்சளில் வண்டு வந்திருந்தால் கூட, மூன்று மஞ்சளையும் செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு, புதிய மஞ்சளை மீண்டும் பூஜை அறையில் வைத்து, வேண்டி நிலை வாசலில் கட்டி வைக்க வேண்டும். இந்த மூன்று மஞ்சள், நிலை வாசலில் இருக்கும் வரை உங்களுடைய வீடு கோவில் தான். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -