உப்பு ஜாடிக்கு அடியில் இந்த பொருள் இருந்தால், உங்களுடைய கணவரின் முன்னேற்றம் தடைபடாது. சம்பாத்தியமே இல்லாத கணவருக்கும், பணம் சம்பாதிக்க வழி கிடைக்கும்.

lakshmi-salt-jaadi
- Advertisement -

நமக்கான இணையான துணை கிடைத்து விட்டால், சுமை இல்லாமல் வாழலாம். ஆனால் இணையான துணை கிடைப்பதில் தான் பிரச்சனை. எல்லோருக்கும் வாழ்க்கையில் விரும்பியபடி கணவர் அமைவது கிடையாது. ஒரு சிலருக்கு இணையான மனைவியும் அமைவது கிடையாது. உங்களுடைய வாழ்க்கை துணை நீங்கள் விரும்பியபடி இருக்கவில்லையா. உங்கள் கணவருக்கு வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்களா. குடும்பத்தை நடத்துவதில் சிரமம் இருக்கிறதா. உங்களுக்காக தாந்திரீக ரீதியான ஒரு சின்ன பரிகாரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பொருத்தம் இல்லாத வாழ்க்கை துணை அமைந்திருந்தால் கூட, அந்த வாழ்க்கை துணையை உங்களுக்கு இணையான வாழ்க்கை துணையாக மாற்ற இந்த பரிகாரம் கை கொடுக்கும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு சமையலறையில் உப்பு ஜாடி இருக்க வேண்டும். அதாவது உப்பை பிளாஸ்டிக் டப்பாவில் கொட்டி பயன்படுத்தக் கூடாது. உப்பு ஜாடியில் கொட்டி இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லையென்றால் சிறிய மண்பானையில் கொட்டி இந்த பரிகாரத்தை செய்யலாம். உப்பு பிளாஸ்டிக் டப்பாவில் இருந்து இந்த பரிகாரத்தை செய்தால் பலன் கொடுக்காது.

- Advertisement -

உங்களுடைய கணவர் பயன்படுத்திய எதாவது ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த துணியாக இருந்தாலும் சரி. அவர் பயன்படுத்திய கைகுட்டையாக இருந்தாலும் சரி, அந்த துணியை நன்றாக துவைத்து விட வேண்டும். துவைத்து காயவைத்த துணியை நன்றாக மடித்து அதை சமையலறையில் வைத்து, அதன் மேலே உப்பு ஜாடியை வைக்க வேண்டும். (உப்பு ஜாடியை நீங்கள் எங்கு வைப்பீர்களோ அதே இடத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். உப்பு ஜாடியை தூக்கி விட்டு அடியில் அந்த துணியை வைத்து விடுங்கள்.)

மூன்று நாட்கள் உப்பு ஜாடி கணவரின் துணி மேல் இருக்கட்டும். நீங்கள் அப்படியே சமையலுக்கு அந்த உப்பை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மூன்று நாட்கள் கழித்து அந்தத் துணியை எடுத்து அப்படியே உங்களுடைய கணவரை பயன்படுத்த சொல்ல வேண்டும். கணவர் அணியும் சட்டை, பனியன் இப்படி அவர் வழக்கமாக உடுத்தும் எந்த ஆடையை வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த மாதிரி பரிகாரத்திற்கு எடுத்து பயன்படுத்தலாம். தவறு கிடையாது. உடுத்தியை ஆடையை சுத்தமாக துவைத்து விட்டு பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள்.

- Advertisement -

இப்படி செய்யும் போது உப்பில் இருக்கும் மகாலட்சுமியின் தன்மையானது நீங்கள் அடியில் வைத்திருக்கும் ஆடையில் நன்றாக இறங்கி இருக்கும். அதாவது அந்த உப்பில் இருக்கும் நேர்மறை ஆற்றல். உங்களுடைய கணவர் அந்த ஆடையை எடுத்து உடுத்திக் கொள்ளும் போது மகாலட்சுமி அம்சம் அவரையும் நிச்சயம் போய் சேரும். கிரக கோளாறு காரணமாகவோ, கெட்ட நேரம் காரணமாகவோ, அல்லது சோம்பேறித்தனத்தின் காரணமாகவோ உங்களுடைய கணவர் சரியான வேலைக்கு செல்லாமல், சரியான வருமானத்தை சம்பாதிக்காமல் இருந்தால், அந்த நிலைமை அத்தனையும் தலைகீழாக மாறி உங்களுடைய கணவருக்கு நல்ல நேரம் பிறக்கும்.

உங்கள் கணவரின் உடம்பை பிடித்திருக்கும் பீடை தரித்திரம் சோம்பேறித்தனம் அனைத்தும் உங்கள் கணவர் உடம்பை விட்டு நீங்கிவிடும். மாதம் ஒரு முறை இப்படி இந்த பரிகாரத்தை செய்து அந்த ஆடையை எடுத்து உங்களுடைய கணவரிடம் போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள். வாழ்க்கையில் சரியாக பாதையில் செல்லாத கணவன்மார்கள் கூட இந்த பரிகாரத்தை சேர்த்த பிறகு, நல்ல வழியில் செல்வார்கள் என்பது நம்பிக்கை. (உங்கள் கணவர் உடுத்திய ஆடையை துவைத்த பின்பு தான், உப்பு ஜாடிக்கு கீழே வைக்க வேண்டும். உப்பு ஜாடிக்கு கீழே வைத்த ஆடையை துவைக்காமல் எடுத்து கணவர் அணிந்து கொள்ள வேண்டும்.) முழு மன நிறைவோடு இந்த சிறிய பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -