கணவர் வெளியே கிளம்பும்போது, மனைவியின் கையால் இந்த 1 பொருளை வாங்கிக் கொண்டால், அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென கொட்டும்.

hand
- Advertisement -

கணவர் வீட்டை விட்டு கிளம்பும்போது, மனநிறைவோடு சிரித்த மலர்ந்த முகத்தோடு இருக்கும் மனைவி கையால், ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கி குடித்தாலே கணவருக்கு அந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக தான் அமையும். நிறைய சினிமா திரைப்படங்களில் கூட நாம் இதை பார்த்திருப்போம். அது உண்மையும் கூட. வீட்டில் இருக்கும் தன் மனைவியை மகாலட்சுமியாக நினைத்து, வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, அவள் கையால் தண்ணீர் வாங்கி பருகுவது என்பது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் தான். இதோடு சேர்த்து இன்னும் ஒரு சில நன்மை தரக்கூடிய விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய விஷயங்களை குடும்பத் தலைவனும் தலைவியும் பின்பற்றி வர குடும்பத்தில் சந்தோஷமும் செல்வ கடாட்சமும் கூடும்.

இந்த விஷயங்களை எல்லாம் செய்தே ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இதை செய்தால் நன்மை நடக்கும். முதலில் கணவனுக்கும் மனைவிக்கும் முந்தைய நாள் எவ்வளவு தான் சண்டை இருந்தாலும், மறுநாள் காலை கண் விழிக்கும் போது அந்த சண்டையை மறந்துதான் கண்விழிக்க வேண்டும். முந்தைய நாள் போட்ட சண்டையை மனதில் வைத்துக் கொண்டு காலையில் எழுந்தவுடன்  முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளக் கூடாது.

- Advertisement -

காலையில் எழுந்து எப்போதும் செய்வது போல எல்லா வேலையும் முடிந்தாகி விட்டது. லஞ்ச் பேக் பண்ணியாச்சு. கணவர் வந்து உங்களிடம் வேலைக்கு கிளம்புவதாக சொன்னால் பதிலுக்கு பாய் சொல்லுவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் போயிட்டு வாங்க என்ற வார்த்தையை சொல்லி கணவரை வழி அனுப்புவது சிறந்தது.

கணவருக்கு அதிர்ஷ்டம் தரும் பரிகாரம்:
அப்படியே மனைவி கையால் கணவருக்கு பின் சொல்லக்கூடிய இந்த பொருட்களை கொடுக்கலாம். இதில் எந்த பொருள் உங்களுடைய வீட்டில் இருக்கிறதோ அதிலிருந்து எடுத்து இரண்டு கொடுங்க போதும். மன நிறைவோடு உங்கள் கணவர் செல்லும் வேலை நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு, இந்த சின்ன பரிகாரத்தை செய்தால் கணவருக்கு வெற்றி மேல் வெற்றி குவியும். சரி அந்த பொருட்கள் என்னென்ன.

- Advertisement -

இரண்டு துளசி இலைகளை கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் இரண்டு ஏலக்காய்கள் கொடுக்கலாம். அல்லது இரண்டு டைமண்ட் கற்கண்டுகளை கணவர் கையில் கொடுத்து வாயில் போட்டுக்கொள்ள சொல்லலாம். வாசம் நிறைந்த பூ உங்கள் வீட்டில் ஏதாவது இருந்தால் அதில் ஒன்றை எடுத்து கணவர் கையில் கொடுத்து அனுப்பலாம். இதனால் என்ன அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. மனைவி நேர்மறை ஆற்றல் நிறைந்த இப்படிப்பட்ட பொருட்களை, கணவர் கையில் கொடுக்கும் போது ஏற்படக்கூடிய மன நிறைவு எல்லா பிரச்சனைகளையும் சரி செய்யும் என்பது தான் நம்பிக்கை.

தினமும் இப்படி செய்ய முடியவில்லை என்றாலும் உங்கள் கணவர் முக்கியமான வேலைக்காக வெளியே கிளம்புவார் அல்லவா அப்போது இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே: இன்று தேய்பிறை பஞ்சமியில் வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை அணிவித்து வழிபட்டால், தன ஆகர்சனம் உங்கள் வீடு தேடி வரும். இந்த வழிபாட்டின் பலன் இரட்டிப்பாக இதையும் தவறாமல் செய்து விடுங்கள்.

சில பேருக்கு வெளியில் சென்று வந்தாலே உடல் அசதி அதிகமாக இருக்கும். அந்த உடல் அசதி கண் திருஷ்டியின் மூலமாக கூட வரலாம். உங்க கணவரோ பிள்ளைகளோ இப்படி கண் திருஷ்டியால் அவதிப்பட்டு வந்தால் அவர்களிடம் 2 பச்சை மிளகாய்களை பேப்பரில் மடித்து கொடுத்து அனுப்புங்கள். அவர்களுடைய பையில் அதை வைத்துக் கொள்ளலாம். அல்லது லஞ்ச் பேகில் கூட வைக்கலாம். வீட்டிற்கு அவர்கள் திரும்பி வரும்போது அந்த பச்சை மிளகாய் காயை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்திலேயே குப்பையில் போட்டுவிட்டு அதன் பின்பு வீட்டிற்கு வரவேண்டும். இப்படி செய்தால் அவர்களை பிடித்த திருஷ்டி நீங்கும் என்பது நம்பிக்கை. மேல் சொன்ன பரிகாரங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -