காஞ்சி பெரியவர் பரிகாரம் | Kanchi periyava pariharam in Tamil

kanchi periyava pariharam in tamil
- Advertisement -

காஞ்சி பெரியவர் பரிகாரம்

பாரத நாட்டிலுள்ள மிகப் பழமையான ஆன்மீக புண்ணிய தலங்களில் ஒன்றாக காஞ்சி மாநகரம் திகழ்கிறது. அந்த காஞ்சி மாநகரத்தில் எண்ணற்ற யோகிகளும், மகான்களும் வாழ்ந்து மக்களின் துயர்களை தீர்த்து வந்துள்ளனர். அத்தகைய மகான்களில் ஒருவர் தான் நூறாண்டுகள் வாழ்ந்தவரும், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியுமாகவும் இருந்த “ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்” ஆவார். இவரை தான் எண்ணற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் “காஞ்சி மகா பெரியவர்” என அன்போடு அழைக்கின்றனர். அந்தக் காஞ்சி மகா பெரியவர் (Kanchi periyava pariharam in Tamil) பக்தர்களின் பொருளாதார கஷ்டங்கள் தீர கூறியருளிய ஒரு எளிய பரிகாரம் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

kanchi-periyava

காஞ்சி பெரியவர் பரிகாரம்

தனது பொருளாதார ரீதியிலான கஷ்ட நிலையை கூறி, அதற்கான பரிகாரத்தை வேண்டிய பக்தருக்கு காஞ்சி மகா பெரியவர் நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஏலக்காய் எனும் அற்புத மூலிகை பொருளின் தெய்வீகத் தன்மை குறித்தும், அதற்கு இருக்கின்ற பணம் ஈர்க்கும் தன்மை பற்றியும் எடுத்துக் கூறி, பின்வரும் பரிகாரத்தை அந்த பக்தருக்கு கூறிய அருளினார்.

- Advertisement -

தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார சிக்கல்கள் தீர வேண்டும் என நினைப்பவர்கள். எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அல்லது மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினத்தன்று இந்த பரிகாரத்தை தொடங்கி செய்ய வேண்டும். இப்பதிகாரத்திற்கு 3 ஏலக்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கின்ற சாமி படத்திற்கு முன்பாக அந்த 3 ஏலக்காய்களையும் வைத்து, சுவாமிக்கு விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு உங்களின் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

lakshmi-yelakkai-cardamom

3 ஏலக்காய்கள்

பின்பு சுவாமி படம் முன்பு இருக்கின்ற அந்த 3 ஏலக்காய்களையும் எடுத்து, உங்களின் வலது உள்ளங்கையில் வைத்து, கையை மூடிக்கொண்டு உங்களின் மனதில் “எனக்கு அதிக அளவில் பணம் வந்து சேருகிறது. எனக்கு இருக்கின்ற பணக்கஷ்டங்கள் தீருகிறது. வருகின்ற அந்த அளவில்லா பணத்தை கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வேன்” என திடமான நம்பிக்கையுடன் மனதிற்குள்ளாக சொல்ல வேண்டும்.

- Advertisement -

இதன் பிறகு கையில் இருக்கின்ற அந்த 3 ஏலக்காய்களையும் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு செய்ய வேண்டும். இடையில் இந்த பரிகாரத்தை செய்ய முடியாமல் போனால் அந்த நாட்களை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் புதிதாக தொடங்கி தொடர்ந்து 11 நாட்களுக்கு செய்ய வேண்டும்.

river

பணவரவு ஏற்பட

ஒரு நாளைக்கு மூன்று ஏலக்காய்கள் என்றால், 11 நாட்களுக்கு 33 ஏலக்காய்கள் அந்த டப்பாவில் சேர்ந்து விடும். 11 நாட்கள் கழித்து இந்த 33 ஏலக்காய்களையும் எடுத்து ஒரு சுத்தமான துணியில் போட்டு முடிச்சாக கட்டி, அலமாரியில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மூன்று மாதத்திற்கு பிறகு இந்த ஏலக்காய் முடிச்சை ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும்.

இதன் பிறகு மீண்டும் பதினோரு நாட்களுக்கு தொடர்ச்சியாக மேற் சொன்ன முறையில் பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து பணவரத்து அதிகரிக்கும் என காஞ்சி பெரியவர் (Kanchi periyava pariharam in Tamil) அனைவருக்கும் பயன்படும் விதமாக இந்த பரிகாரத்தை கூறியருளினார்.

- Advertisement -