வீட்டில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளுக்கு வாஸ்து தோஷம் கூட காரணமாக இருக்கலாம் அதை சரி செய்ய உதவும் வாஸ்து பரிகாரங்கள்

vastu pariharam
- Advertisement -

வாஸ்து சாஸ்திரம் என்பது பண்டைக்காலம் முதலே நம் நாட்டில் வீடுகள், பிற வகையான கட்டிடங்கள் கட்ட கடைபிடிக்கப்படுகின்ற ஒரு சாஸ்திர விதியாகும். தற்காலத்தில் பலரும் வாஸ்து சாஸ்திரம் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் புதிதாக தாங்கள் கட்டும் வீடுகள் அல்லது ஏற்கனவே இருக்கின்ற வீடுகளுக்கு செய்ய வேண்டிய சில எளிய வாஸ்து பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வாஸ்து பரிகாரங்கள்

தற்காலத்தில் பலரும் தங்கள் வீடுகளில் வண்ண மீன் தொட்டிகளை வைக்கின்றனர். இந்த வந்த மீன்களை வீட்டில் வளர்ப்பதால் பல நேர்மறையான சக்திகளை அவை வீட்டிற்குள் ஈர்க்கும். வீட்டை தாக்குகின்ற எதிர்மறை சக்திகளின் தாக்கத்தை அந்த மீன்கள் ஏற்றுகொண்டு இறந்துவிடும் எனவும், இதன் மூலம் வீட்டில் இருப்பவர்களை அந்த மீன்கள் காக்கின்றன என கூறப்படுகின்றது. வண்ண மீன் தொட்டிகளை எப்பொழுதும் வீட்டில் வரவேற்பறையில் வைப்பது தான் சிறந்தது என பல வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வரவேற்பறையிலும் வடக்கு அல்லது கிழக்கு திசையில் மட்டுமே அந்த வண்ண மீன் தொட்டிகளை வைக்க வேண்டும்.

- Advertisement -

பொதுவாக தங்கள் வீட்டின் தலை வாசலுக்கு மேல் இருக்கின்ற சுவர் பகுதிகளிலோ அல்லது வெளிப்புற வாயில் சுவர்களின் மேற்பகுதியிலோ ஏதேனும் ஒரு கடவுளின் படத்தை மாற்றி வைக்க வேண்டும். குறிப்பாக விநாயகர், லட்சுமி சமேத பெருமாள் ஆகிய தெய்வங்களின் படங்களை மாட்டி வைக்கலாம். மேற்சொன்ன பகுதிகளை காலியாக விடுவதால் அந்த வீட்டில் பொருளாதார ரீதியிலான சிக்கல்கள் அடிக்கடி ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

பெரிய கட்டி கற்பூரங்கள் இறை வழிபாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டிக் கற்பூரங்களை வாங்கி வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் ஒரு இடத்தில் வைப்பதன் மூலம் அங்கு இருக்கின்ற எதிர்மறை ஆற்றல்கள் விலகி, வீட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். இந்த கட்டி கற்பூரங்கள் கரைந்த பிறகு புதிதாக கட்டிக் கற்பூரங்களை வாங்கி மீண்டும் அந்த இடங்களில் வைக்க வேண்டும் என்பதை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடிகளை சரியாக வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க முடியும். வீட்டின் கதவை திறந்ததும் பார்க்கும் வகையிலோ அல்லது படுக்கை அறையிலோ தங்களின் பிம்பத்தை பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடிகளை வைக்கக் கூடாது. அதேபோன்று தெற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடிகளை வைப்பதையும் தவிர்க்க வேண்டும். உடைந்த, விரிசல் விழுந்த கண்ணாடிகளை அவ்வப்பொழுது அப்புறப்படுத்தி புதிய கண்ணாடிகளை வாங்கி வைக்க வேண்டும்.

பலரும் தங்கள் வீடுகளில் மண் தொட்டிகளில் பலவிதமான செடிகளை வளர்ப்பார்கள். இந்த மண் தொட்டிகளில் விரிசல் இருந்தாலும் அல்லது உடைந்து போனாலும் உடனுக்குடன் அந்தத் தொட்டியை அப்புறப்படுத்தி புத்தம் புதிய மண் தொட்டியை வாங்கி, அதில் அந்த செடிகளை வைத்து வளர்க்க வேண்டும். விரிசல் விழுந்த. உடைந்த மண் தொட்டிகளை வீட்டிலேயே வைத்திருப்பதன் மூலம் அவை எதிர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் ஈர்க்கும் என (Vastu pariharam in Tamil) கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: சனி பரிகாரம்
வீட்டில் சமையல் அறையில் சமையல் அடுப்பை கிழக்கத்திசையை நோக்கியவாறு நின்று பயன்படுத்தும் வகையிலேயே அமைக்க வேண்டும். வீட்டில் சுவர்களுக்கு அல்லது வேறு ஏதேனும் பொருட்களுக்கோ அடர் கருப்பு, அடர் சிவப்பு நிற வண்ணங்களை பயன்படுத்துவதையும் அறவே தவிர்க்க வேண்டும்.

- Advertisement -