குரு பார்வை உங்கள் மேல் விழ செல்ல வேண்டிய கோவில்

guru
- Advertisement -

ஒரு மனிதனின் ஜாதக கட்டத்தில் குரு பார்வை ரொம்ப ரொம்ப முக்கியம். குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்லுவார்கள். சில பேருடைய ஜாதக கட்டத்தில் இந்த குரு பார்வை சுத்தமாக இருக்காது. குரு திசை நடப்பவர்கள், குரு வக்கிர நிலையில் இருப்பவர்கள், குரு தோஷத்தால் திருமணமாகாமல் இருப்பவர்கள், பணக்கஷ்டத்தில் அவதிப்படுபவர்கள் எல்லாம் ஒரு முறை இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க.

குருவின் பார்வை உங்கள் மேல் விழும். கஷ்ட காலத்தில் இருக்கும் உங்களை குரு பகவான் கை கொடுத்து தூக்கி காப்பாற்றி விடுவார். குறிப்பாக நீங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கான பிரத்தியேக கோயில் இது. உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தன்று இந்த கோவிலுக்கு சென்று ஒரு முறை குரு பகவானை வழிபாடு செய்து விட்டால் போதும்.

- Advertisement -

குரு பார்க்க கோடி நன்மைகளை நீங்கள் பெற்றுவிடலாம். சரி அந்த கோவில் எங்கு இருக்கிறது. எந்த கிழமையில் இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

குரு தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த கோவில் காஞ்சிபுரத்தில் கோவிந்தவாடியில் உள்ளது. ‘காஞ்சிபுரம் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி’ கோவில். இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தி மூலவராக பக்தர்களுக்கு அருள் பாவிக்கின்றார். ஜாதகத்தில் குருவால் பிரச்சினை உள்ளவர்கள் வியாழக்கிழமை அன்று இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

எல்லா சிவன் கோவில்களிலும் தட்சிணாமூர்த்தி சன்னதி கருவறையை சுற்றி இருக்கும் சுவற்றில் தான் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் மூலவராகவே தக்ஷிணாமூர்த்தி இருப்பதால், இது குரு பகவானுக்கு உரிய ஸ்தலமாக சொல்லப்பட்டுள்ளது. சில பேருக்கு ஜாதகத்தில் குரு தோஷம் இருக்கும். இதனால் வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதும் நடக்காமல் கஷ்டப்பட்டு வருவார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த கோவில் ஒருமுறை சென்று வரவும்.

மேலே குறிப்பிட்டது போல புனர்பூசம் விசாகம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கட்டாயமாக இந்த குரு பகவானை தரிசனம் செய்வது சிறப்பான பலனை தரும். இந்த மூன்று நட்சத்திரத்தைக் கொண்டவர்கள், உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தன்று இந்த குரு பகவான் கோவிலுக்கு போங்கணும். மற்றபடி ஜாதகத்தில் குரு திசை நடப்பவர்கள் குரு வக்கிர நிலையில் இருப்பவர்கள்  எல்லாம் வியாழக்கிழமை சென்று குருபகவானை வழிபடுவது நல்லது.

- Advertisement -

குரு பகவானுக்கு உங்கள் கையால் கொண்டைக்கடலையில் மாலை கட்டிக் கொண்டு போய் சாத்தலாம். இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். அதேபோல இந்த குரு பகவான் கோவிலில் தேங்காய் தீபம் ஏற்றுவது மிக மிக விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது.

திருமணம் நடக்காதவர்கள், இந்த கோவிலில் இருக்கும் அம்பாளை வழிபாடு செய்தால் கூடிய சீக்கிரம் திருமணம் பாக்கியம் கிடைக்கும். திருமணம் நடந்து முடிந்த பிறகு வந்து இந்த கோவிலில் தேங்காய் தீபம் ஏற்றி தங்களுடைய வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றி செல்வார்கள்.

இதையும் படிக்கலாமே: பூஜை அறையை சுத்தம் செய்யும் முறை

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக, காஞ்சிபுரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலின் வழியாகத்தான் செல்லும். காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. அகரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கிவிட்டால் போதும். அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்வது மிக மிக சுலபம். முகவரியை நீங்கள் கூகுள் மேப்பில் போட்டாலே சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாய்ப்பு கிடைத்தவர்கள் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

- Advertisement -