உங்க கண்ண சுத்தி கருப்பு துணி கட்டின மாதிரி கருவளையம் படிந்து போய் இருக்கா. இந்த ஒரு பொருளை வைத்தே, நாளே நாளில் கருவளையம் இருந்த தடம் இல்லாம செஞ்சிடலாம். அது எப்படின்னு பாக்கலாமா?

- Advertisement -

இன்றைய கால கட்டத்தில் அழகு சார்ந்த பெரிய பிரச்சனை எதுவென்றால் கண்களின் மேல்படிந்து விடும் இந்த கருவளையம் தான். முகத்தை நிறமூட்ட நிறைய கிரீம் போன்றவை வந்து விட்டது. ஆனால் இந்த கண்களுக்கு எத்தனை கிரீம்கள் இருந்தாலும், கண் என்பது மிகவும் ஒரு நுட்பமான இடம். இதில் நாம் எந்த கீரிமையும் அவசரப்பட்டு போட்டு விடவும் முடியாது. வேறு ஏதும் இதனால் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் மிகப் பெரிய பிரச்சனையாகி விடும். எனவே இதை இயற்கை முறையில் எந்த கெமிக்கலும் கலக்காமல் நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து சுலபமாக சரி செய்து விடலாம் என்றால் முதலில் இந்த பதிவை படித்து அதை சரி செய்வதை விட வேறு என்ன வேலை இருக்கப் போகிறது. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

இந்த கிரீம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், விட்டமின் இ கேப்ஸ்யூல், ஆலுவேரா ஜெல், கிரீன் டீ பவுடர் அவ்வளவுதாங்க. இந்த பொருள்கள் தான் உங்க கண் கருவளையத்தை நீக்க போகுது.

- Advertisement -

முதலில் வெள்ளரிக்காயை நன்றாக சீவி அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் உருளைக்கிழங்கையும் சீவி அதையும் வடிகட்டி சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது இதில் சேர்க்கப்படும் முக்கியமான பொருள்தான் இந்த கிரீன் டீ பவுடர். இதை நீங்கள் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் இந்த கிரீன் டீ பவுடரில் சிறிதளவு எடுத்து கால் டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைத்தாலே போதும். அதில் உள்ள சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி விடும் இதையும் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ஒரு ஸ்பூன் வெள்ளரி சாறு, ஒரு ஸ்பூன் கிரீன் டீ சாறு, இரண்டு ஸ்பூன் ஆலுவேரா ஜெல் (முடிந்த வரையில் ஆலுவேரா ஜெல் இயற்கையானதாக இருந்தால் நல்லது) இத்துடன் ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் அனைத்தையும் சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் கலக்கினாலே போதும் ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும்.

- Advertisement -

இதை தினமும் இரவில் நீங்கள் தூங்க செல்லும் முன் உங்கள் முகத்தை நன்றாக அலம்பி விட்டு, துடைத்த பிறகு உங்கள் கண்களை சுற்றி இந்த கிரீமை தடவி லேசாக ஒரு மசாஜ் கொடுத்து விட்டு அப்படியே கூட உறங்கி விடலாம். இதை தொடர்ந்து நான்கு நாட்கள் தடவி வந்தாலே போதும் உங்கள் கண்களைச் சுற்றி இருந்த கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு செலவு செய்தும் முகத்தில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லையா? ஹைபர் பிக்மென்டேஷனை 7 நாட்களில் குறைக்கும் குங்கிலியம்.

இவ்வளவு எளிமையாக உங்கள் கருவளைய பிரச்சனைக்கு தீர்வு இருக்கும் போது தேவையற்ற இந்த கெமிக்கல் கலந்த கிரீம் இனி எதற்கு?. இந்த அனைத்து பொருட்களிலும் இருந்து ஒரு ஸ்பூன் சாறு மட்டுமே சேர்த்து தயார் செய்த இந்த பேஸ்டை ஒரு வாரம் வரை நீங்கள் பிரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.

- Advertisement -