வீட்டில் கண்ணாடி உடைந்தால் துரதிர்ஷ்டமா? அதிர்ஷ்டமா? கண்ணாடி உடைந்தால் இதெல்லாம் கூடவா நடக்கும்?

broken-mirror-murugan
- Advertisement -

நாம் பயன்படுத்தி வந்த ஒவ்வொரு பழங்கால பொருட்களும் ஒவ்வொரு விதமான ஆற்றல்களை பிரதிபலிக்கின்றன என்பது நம் முன்னோர்களுடைய கருத்தாக இருந்து வருகிறது. அந்த வகையில் கண்ணாடி என்னும் பொருள் பல நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைய பட்டுள்ளன. அத்தகைய கண்ணாடி வீட்டில் தானாக உடைந்தால் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? கண்ணாடி உடைந்தால் என்ன பலன்கள்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சாதாரணமாக கண்ணாடி தானாக தவறி உடைந்து விட்டால் பெரும் துரதிர்ஷ்டம் வரும் என்கிற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. இந்த துரதிருஷ்டம் 7 ஆண்டுகள் வரை கூட தொடருமாம்! இதற்கு முந்தைய காலங்களில் விலை உயர்ந்த பொருளாக இருந்த இந்த கண்ணாடி பெரிய பெரிய அரண்மனைகளிலும், அலுவலகங்களிலும் மட்டுமே வைத்திருப்பார்கள். அங்கு வேலை செய்யும் யாராவது கைத்தவறி கவனக் குறைவால் கண்ணாடிப் பொருட்களை போட்டு உடைத்து விட்டால் அரசரோ அல்லது அரசு அதிகாரிகளோ அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம். எனவே கண்ணாடியை பொருத்தவரை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டது. காலப்போக்கில் இது மருவி கண்ணாடி உடைந்தால் 7 வருடம் துரதிஷ்டம் தொடரும் என்றாகிவிட்டது.

- Advertisement -

கண்ணாடி திடீரென கீழே விழுந்து உடைந்தால் அந்த வீட்டில் துர் சம்பவங்கள் அல்லது துர் மரணங்கள் நிகழும் என்கிற கருத்தும் நிலவுகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டில் ஒருவர் இறந்து போய்விட்டால் அவருடைய அறையில் இருந்த கண்ணாடியில் அவருடைய ஆத்மா நுழைந்து விடும், இதனால் அதனை மூடி வைக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள். அந்த கண்ணாடியில் நாம் நம் முகத்தை பார்த்தால் நாமும் இறந்துவிடக் கூடும் என்கிற மூடநம்பிக்கையும் இருந்தது.

அந்தக் காலத்தில் எல்லாம் அவ்வளவாக தொழில் நுட்ப வளர்ச்சி கிடையாது. திடீரென ஏற்படும் நில அதிர்வுகள் மூலம் கண்ணாடிகள் உடைந்தும் அதனால் மக்கள் இறப்பதும் நடந்தேறியிருக்க கூடும். இதனால் கண்ணாடி உடைந்தால் மரணம் நிகழும் என்கிற பயம் உருவாகி இருக்கக்கூடும். கண்ணாடியினால் ஒளியை பிரதிபலிக்க செய்ய முடியுமே தவிர அதனை உள்வாங்க முடியாது எனவே கண்ணாடிக்குள் மனித ஆத்மா நுழைவது என்பது சாத்தியமில்லாதது. இறந்தவர்களுடைய இல்லத்தில் திடீரென காற்றில் அசைந்து உடையும் கண்ணாடிக் கூட இறந்தவரின் ஆத்மா வந்து உடைக்கிறது என்று நம்பியுள்ளனர். காலப்போக்கில் இவை வெவ்வேறு விதமாக பரவி கண்ணாடியின் மீதான நம்பிக்கைகளுடன் இவற்றை தொடர்புபடுத்திக் இவ்வாறான பலன்கள் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒரு வருடம் வரை பிறந்த குழந்தைக்கு கண்ணாடி காண்பிக்க கூடாது என்கிற ஒரு நம்பிக்கை மக்களிடையே இருந்து வந்தது. இன்றும் பிறந்த குழந்தையை புகைப்படம் எடுக்கக் கூடாது. கண்ணாடி காண்பிக்க கூடாது என்றெல்லாம் கூறக் கேட்டிருப்போம். உடையும் பொருட்களை பொதுவாக குழந்தைகளிடம் இருந்து தள்ளி வைப்பது தான் நல்லது எனவே இத்தகைய நம்பிக்கைகள் மூட நம்பிக்கையாக இருந்தாலும் அதனை வரவேற்பது உசிதமானது.

பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களின் கண்ணாடி உடைந்தால் வீட்டில் ஏதோ கெடுதல் நடக்கப் போகிறது என்று கூறுவார்கள். அதிலும் செவ்வாய், வெள்ளி கிழமை என்றால் அவ்வளவு தான். கண்ணாடி உடைந்தால் பரிகாரகமாக அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விளக்கு போடலாம். அடிக்கடி இதுபோல நடந்தால் குல தெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள், மனம் அமைதியடையும். கண்ணாடி உடைவது எதார்த்தமானதோ அல்லது ஏதோ ஒன்றை நமக்கு அறிவுறுத்தும் சகுனமாக இருக்கின்றதோ நமக்கு தெரிவதில்லை! ஆனால் கண்ணாடிகள் உடைவது என்பது பாதுகாப்பற்றது. எனவே அவற்றை கூடுமானவரை கவனமாக கையாளுவது நல்லது.

- Advertisement -