பெண் தெய்வத்தின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற பரிகாரம்

amman
- Advertisement -

ஒரு குடும்பத்திற்கு அம்பாளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் போதும். அந்த வீட்டில் சுபகாரியத் தடை இருக்காது. நோய்நொடி பிரச்சனை இருக்காது. செல்வ கடாட்சத்திற்கும் எந்த ஒரு குறைபாடும் வராது. சில வீடுகளில் பெண் தெய்வம், குலதெய்வம் ஆக இருக்கும். ஆனால் அந்த குலதெய்வம் ஆனது வீட்டில் தங்காமல் இருக்கும். இதனால் அந்த வீட்டிற்கு குலதெய்வ ஆசீர்வாதம் கிடைக்காமலே இருக்கும்.

கன்னிப்பெண்களின் கையால் இந்த ஒரு பொருளை கொண்டு வந்து பூஜை அறையில் வழிபாடு செய்யும்போது, அம்பாளின் ஆசிர்வாதத்தை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது நடக்க, பெண் தெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பெண் தெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற பரிகாரம்.

வேப்பமரம். நம் வீட்டு பக்கத்தில் கட்டாயம் இருக்கும். அந்த வேப்ப மரத்தில் இருந்து கொஞ்சம் தடிமனாக இருக்கும் குச்சியை உடைத்துக் கொள்ளுங்கள். அதை வீட்டிற்கு கொண்டு வந்து மஞ்சள் தண்ணீரால் கழுவி, காய வைத்து விடுங்கள். பிறகு அந்த வேப்பங்குச்சியை உங்கள் வீட்டு கன்னிப்பெண் கையில் கொடுக்க வேண்டும்.

திருமணம் ஆகாத பெண் பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா. அவர்களுடைய கையில் இந்த வேப்பங் குச்சியை கொடுத்து அதில் ஒரு மஞ்சள் நூலை கட்டச் சொல்லுங்கள். ஒரு மஞ்சள் நூலை எடுத்து வேப்பங்குச்சியை சுற்றி கட்டி மூன்று முடிச்சு போட்டு விட்டால் அவ்வளவுதான். அது அப்படியே இருக்கும். அந்த வேப்பங்குச்சுக்கு ஒரு காப்பு கட்டுறீங்க அவ்வளவுதான்.

- Advertisement -

அந்த கன்னிப் பெண்ணின் கையாலேயே அந்த வேப்பங்குச்சுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, உங்கள் வீட்டு குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி, இந்த குச்சியை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். கூடவே உங்களுடைய வீட்டில் பெண் பிள்ளைகள் யாராவது சின்ன வயதிலேயே இறந்து இருந்தால், அவர்களையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. வெள்ளிக்கிழமை காலை 6 – 7, இல்லையென்றால் மாலை 6 – 7, இந்த நேரத்திற்குள் இந்த வேப்பம் குச்சியை பூஜை அறையில் கன்னிப் பெண்ணின் கையால் வைத்து விடுங்கள். பிறகு விளக்கு ஏற்றி அம்பாளை நினைத்து வழிபாடு செய்யுங்கள். உங்க வீட்டிற்குள் குலதெய்வம் நிரந்தரமாக தங்க வேண்டும் அம்பாள் நிரந்தரமாக தங்க வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள்.

- Advertisement -

வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை இந்த வேப்ப குச்சுக்கு வீட்டில் பூஜை செய்து வர, அந்த அம்பாளின் அனுகிரகம் கிடைக்கும். உங்கள் பெண் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால் வேப்ப மரத்தில் சக்தி தேவி குடி இருப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

உங்க வீட்டில் சுபகாரிய தடை இருக்கிறது. தேவையில்லாத பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுடைய வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது எனும் பட்சத்தில் இந்த வழிபாட்டை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பணம் தங்குவதற்கு பரிகாரம்

எங்க வீட்ல பெண் பிள்ளைகளே இல்லை என்றால் என்ன செய்வது. உங்கள் சொந்தக்காரங்க யாராவது இருப்பாங்க. அந்த குழந்தையை அழைத்து வந்து இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம் தவறு ஒன்றும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -