இந்த ஒரு வார்த்தையை உங்கள் வீட்டு நிலை வாசலில் எழுதி வைத்து விட்டால் போதும். இதைத் தாண்டி எந்த ஒரு கெட்ட சக்தியும் உங்களை நெருங்கவே முடியாது.

- Advertisement -

நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதர்களை பார்த்து சந்தோஷப்படும் சக மனிதர்களை பார்ப்பது இன்றைய கால சூழ்நிலையில் மிகவும் அரிது. ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தால் அவன் மட்டும் நன்றாக இருக்கிறானே என்று வயிற்றுச் எரிச்சல் படும் மனிதர்கள் தான் இன்று பெரும்பாலும் இருக்கிறார்கள். இந்த வயிற்று எரிச்சல் நிச்சயம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படி எண்ணுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கையை கெடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அனைத்தையும் செய்கிறார்கள். இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக கண்காணித்து நாம் சரி செய்து கொண்டிருக்க முடியாது. அவர்களின் இந்த சூழ்ச்சி எல்லாம் நம்மை நெருங்காமல் இருக்க நமக்கு நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும். அப்படியான ஒரு எளிய வழிமுறை தான் இந்த செந்தூர பரிகாரம். அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கண் திருஷ்டி நீங்க நிலைவாசலில் செய்ய வேண்டியது
செந்தூரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ஆஞ்சநேயர் தான். ஆஞ்சநேயர் தீய சக்திகளை அழிப்பதில் முதன்மையான தெய்வம் என்றே அவரை சொல்லலாம். அது கண் திருஷ்டி போன்ற சக்திகளாக இருந்தாலும் சரி, நாம் வாழக் கூடாது என்று பிறரால் செய்யப்படும் எந்த தீவினைகளாக இருந்தாலும் சரி அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சக்தி கொண்ட வல்லமை படைத்த தெய்வம் எனில் அவர் ஆஞ்சநேயர் தான்.

இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று காலையில் குளித்து முடித்து வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வணங்கிய பிறகு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு துளசி மாலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஆஞ்சநேயர் மேலே பூசி இருக்கும் செந்தூரத்தை கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதற்கு ஆஞ்சநேயர் மேலே இருக்கும் செந்தூரம் தான் வேண்டும். கோவிலில் கொடுக்கும் செந்தூரத்தை வாங்கி பயன்படுத்தக் கூடாது. அந்த செந்தூரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டிற்குள் கொண்டு செல்வதற்கு முன்பாகவே உங்கள் நிலை வாசலுக்கு வெளியே இந்த செந்தூரத்தை வைத்து ஸ்ரீ ராம் என்ற வார்த்தையை எழுதி விட்டால் போதும்.

இதையும் படிக்கலாமே: சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள் தரித்திரம் பிடிக்கும் தெரியுமா? தெரியாமல் கூட இனி இந்த தவறை செய்து அன்னபூரணியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் வறுமை உண்டாகும்!

செந்தூரத்தால் எழுதிய இந்த வார்த்தையை தாண்டி எந்த தீய சக்தியும் வராததோடு, உங்களுக்கான எல்லா காரிய தடைகளையும் இது தகர்த்தெறிந்து விடும். இந்த செந்தூரம் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காக்கும் பாதுகாப்பு வளையம் ஆகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆன்மீக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தோன்றினால் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -