கண்திருஷ்டி நீங்க கல் உப்பு பரிகாரம்

sad man salt
- Advertisement -

அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஒரு மனிதனை வாழ விடாமல் செய்வதில் முதலாக இருப்பது கண் திருஷ்டி தான். ஆகையால் தான் நம் முன்னோர்கள் அப்பொழுது கல்லடியில் இருந்து கூட தப்பித்து விடலாம் கண்ணாடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று கூறி அதற்கான பல பரிகார முறைகளை சொல்லி வைத்தார்கள்.

இந்த பரிகாரங்களை அவர்கள் இருக்கும் வரையில் முறையாக செய்து வாழ்க்கையில் செம்மையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றைய கால சூழ்நிலையில் நாம் பலவற்றை மறந்து விட்டோம் அல்லது மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விட்டோம். ஆனால் இன்றளவும் கண் திருஷ்டியால் துன்பப்படுவதை அனைவரும் அனுபவிக்க தான் செய்கிறார்கள். சரி அப்படியானால் இதை எப்படி சரி செய்து கொள்வது.

- Advertisement -

இந்த கேள்விக்கான ஒரு பதிலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த எளிய பரிகாரத்தை நாம் தொடர்ந்து செய்யும் பொழுது நம்முடைய குடும்பத்தை கண் திருஷ்டி தீய சக்தி எதிர்மறையாற்றல் என அனைத்திலிருந்தும் காப்பாற்றி நல்ல முறையில் வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கண் திருஷ்டி விலக பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பெரியதாக பொருட் செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரு கருப்பு நிற துணி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கைப்பிடி அளவு உப்பை மட்டும் வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் திருஷ்டி கழிப்பது போல சுற்றிக் எடுத்து கொண்டு ஓடும் நீரில் போட்டு விட்டு வந்து விடுங்கள்.

- Advertisement -

இது ஒரு முறை ஒரு வேளை உங்கள் வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி அதிகமாக இருப்பதைப் போல் உணர்கிறீர்கள் அல்லது ஒரு சில இடத்தில் வந்தால் மட்டும் அதிகமாக இருக்கிறது என உணர்ந்தால் அந்த இடத்தில் இந்த முடிச்சை 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை வைக்கலாம் அல்லது வீட்டில் ஒவ்வொரு அறையிலுமே கூட இப்படி வைக்கலாம். அதன் பிறகு இந்த முடிச்சை எடுத்து ஓடும் நீரில் விட்டு விடுங்கள்.

இதை முடிந்த வரையில் ஓடும் நீரில் விட பாருங்கள். கால் படாத இடத்தில் கூட போட வேண்டாம். இதை தண்ணீரில் போட்டுவிட்டு திரும்ப வீட்டிற்கு வரும்போது வெளியில் நின்று கைகால் முகம் அனைத்தையும் அலம்பி தலையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்த பிறகு தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும். இந்த ஒரு எளிய பரிகாரத்தை வார வாரம் செய்து வரும் பொழுது குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி தீய சக்திகளின் தாக்குதல் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர குலதெய்வ வழிபாடு

இந்த கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் சோர்வு மனசோர்வு அனைத்தும் நீங்கி நல்ல முறையில் சுறுசுறுப்புடன் வேலைகள் செய்து முன்னுக்கு வர முடியும். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -