கணவரை சொல் பேச்சு கேட்க வைக்க பரிகாரம்

maruthani
- Advertisement -

உங்க கணவர் நீங்க சொல்ற பேச்சை கேட்டு நடக்கணும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குதா. அப்ப மனைவியாகிய நீங்கள் கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். ஒரு நல்லது சொன்னாலும் காது கொடுத்து கேட்காத கணவரை, மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்க வைக்க இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும்.

ஆமாங்க, நிறைய பேர் குடும்பத்தில் மனைவிக்கு உண்டான மதிப்பும் இருக்காது மரியாதையும் இருக்காது. எல்லா விஷயத்தையும் ஆண்கள் தான் முடிவு செய்வார்கள். ஒரு பேச்சுக்கு கூட மனைவியின் கருத்தை கேட்க மாட்டாங்க. இப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களின் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கும். உங்க வீட்லயும் ஆண் ஆதிக்கம் நடக்குதா. அது அளவில்லாமல் பிரச்சனைகளை கொடுக்குதா. இந்த எளிமையான பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். பிறகு மனைவிக்கும் சரிசமமான மரியாதை கிடைக்கும்.

- Advertisement -

கணவர் சொல் பேச்சை கேட்க மனைவி செய்ய வேண்டிய பரிகாரம்

பொதுவாகவே மருதாணி என்பது மகாலட்சுமி அம்சம் பொருந்திய ஒரு பொருள். இதை பெண்கள் கையில் இட்டுக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இந்த மருதாணியில் நாம் சேர்க்கக்கூடிய இரண்டு பொருள், உங்களுடைய கணவரை வசியம் செய்யக்கூடிய பொருளாக இருக்கப் போகின்றது.

என்னென்ன பொருள் தெரியுமா 1 வெற்றிலை, 1 கிராம்பு. தேவையான மருதாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலைக்கு நடுவே கிராம்பை வைத்து மடித்து சுருட்டி, வலது உள்ளங்கைகளில் இந்த இரண்டு பொருளையும் வைத்துக்கொண்டு ‘என் கணவர், நான் சொல்லக்கூடிய பேச்சை கேட்க வேண்டும். தவறான பாதைக்கு போகக்கூடாது’ என்று குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இது தவிர உங்கள் கணவருக்கு வேறு ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கு அதிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்றாலும் இதே போல பிரார்த்தனை செய்யவும். பிறகு மருதாணி இலையோடு நீங்கள் கையில் வைத்திருக்கும் வெற்றிலை கிராம்பையும் சேர்த்து மிக்ஸி ஜாரிலேயே அரைத்து உங்களுடைய கையில் நீங்கள் இட்டுக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் பரிகாரம். உங்கள் கையில் இருக்கும் மருதாணியில் இருந்து வெளிவரும் இந்த வாசம் உங்கள் கணவரை வசியம் செய்யும். வசியம் என்றால் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்யூனயமே இல்லாமல் வாழ்கிறார்கள் எனும் போது இந்த பரிகாரத்தை செய்வதில் தவறு கிடையாது. தொடர்ந்து வாரத்தில் ஒரு முறை இப்படி மருதாணியை அரைத்து உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் கணவர் உங்கள் வசமாகிவிடுவார்.

இதையும் படிக்கலாமே: வீண் விரயம் குறைந்து பணவரவு அதிகரிக்க பரிகாரம்

அதுக்காக கணவர், மனைவி சொல்லக்கூடிய பேச்சுக்கு எல்லாம் வெறும் தலையாட்டி பொம்மை போல இருக்க வேண்டும் என்று நினைப்பது ரொம்ப ரொம்ப தவறு. தவறான விஷயங்களுக்காக, தவறான எண்ணத்தில் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் தராது. நல்லதுக்காக மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பயனடையலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -