ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்து இப்படி சுற்றி போட்டால், கடுமையான கண் திருஷ்டியும் கழிந்து போகும். எந்த விதத்திலும் உங்கள் சந்தோஷம் கெட்டுப் போகவே போகாது.

sudam
- Advertisement -

சில நேரங்களில் நமக்கு எல்லாம் இருந்தும், மன நிம்மதி இல்லாமல் அவதிப்படுவோம். அந்த சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுவதற்கு என்னதான் காரணம் என்றே புரியாது. யாருக்குமே தெரியாமல், எந்தக் காரணமும் இல்லாமல் நம்முடைய மன நிம்மதி கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் இந்த கண் திருஷ்டியும் அடங்கும். நன்றாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென அழும். நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை திடீரென சாப்பிடாது. சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் அடிதடி சண்டை வந்துவிடும். ஆரோக்கியமாக இருந்த ஒரு மனிதன் திடீரென உடல் சோர்வு, வாந்தி எடுத்து, வயிற்றுப்போக்கு உண்டாகி ஹாஸ்பிடலில் அட்மிஷன் ஆகி ரொம்பவும் கஷ்டமாகிவிடும். இப்படி ஏதோ ஒரு துன்பம் வந்து அந்த குடும்பத்தில் இருக்கும் நிம்மதியை நிலை குலைத்து விடும்.

எதிர்பாராத சமயத்தில் இத்தனை துன்பங்களையும் கொடுக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த கண் திருஷ்டியில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள நிறைய பரிகாரங்கள் உள்ளது. அதிலிருந்து ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். திருஷ்டியை கழிப்பதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தேவை. அடுப்புக்கரி, இன்னொன்று பச்சை கற்பூரம், இந்த இரண்டு பொருட்களுமே கடைகளில் சுலபமாக கிடைக்கும். வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பொதுவாகவே திருஷ்டி கழிக்கும் போது வெறும் சாதாரண சூடம் ஏற்றி சுற்றிப் போடுவது தான் நம்முடைய வழக்கத்தில் இருக்கின்றது. ஆனால் அதற்கு பதில் இந்த பச்சை கற்பூரத்தையும் கரித்துண்டையும் சேர்த்து திருஷ்டி கழித்தால், அது இன்னும் இரண்டு மடங்கு பலனை கொடுக்கும். உடம்பில் இருக்கக்கூடிய கண் திருஷ்டியுடன் சேர்த்து, கெட்ட சக்தியை எல்லாம் கூட இழுத்து வெளியே தள்ளிவிடும். உதாரணத்திற்கு அந்த காலத்தில் வயது வந்த பெண்கள், மாதவிடாய் நாட்களில் வெளியே செல்வதாக இருந்தாலும், நேரம் கெட்ட நேரத்தில் வெளியில் செல்வதாக இருந்தாலும், அவர்களுடைய கையில் ஒரு கரித்துண்டை கொடுத்து அனுப்புவார்கள். காரணம் இந்த சின்ன கரி துண்டு கண்ணுக்குத் தெரியாத எந்த கட்ட சக்தியும் அவர்கள் உடம்பை நெருங்காமல் இருக்கும் என்பதற்காக. அந்த அளவுக்கு அந்த கரி துண்டுக்கு ஒரு மகத்துவம் உண்டு.

ஒரு தட்டில் பச்சைக் கற்பூரத்தை வைத்து அதை பற்றவைத்து விடுங்கள். எரிந்து கொண்டிருக்கும் அந்த பச்சை கற்பூரத்துக்கு பக்கத்தில் 1 சின்ன துண்டு கரி துண்டையும் வைத்து விடுங்கள். கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்ட நபரை கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து, வழக்கம் போல, அந்த கற்பூர தட்டை சுற்றி விடுங்கள். எரிகின்ற இந்த சூடத்தை கொண்டு போய் நிலை வாசலுக்கு வெளியில் வைத்து விட வேண்டும். இப்போது தட்டில் இருக்கும் கரித்துண்டை அந்த பச்சை கற்பூரம் எரியக்கூடிய நெருப்பில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்தால் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருக்கும் கண் திருஷ்டி கெட்ட சக்தி அனைத்தும் உடனடியாக வெளியேற்றப்படும். கண் திருஷ்டியால் உடல் உபாதைகள் இருந்தால் கூட, அதை இந்த ஒரு சின்ன பரிகாரம் எளிதாக சரி செய்து விடும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை போட்டு தினமும் குளித்தால், நீங்கள் எவ்வளவு வேலை செய்தாலும் சோர்வடையவே மாட்டீங்க. உங்கள் உடம்பில் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியும் தாங்காது.

ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து அப்படியே விட்டுவிடக்கூடாது. கண் திருஷ்டி என்பது மீண்டும் மீண்டும் நம்மில் விழக்கூடிய விஷயம். வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை என்றால் மாதத்தில் ஒரு நாள் அமாவாசை நாளன்று இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -