குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை போட்டு தினமும் குளித்தால், நீங்கள் எவ்வளவு வேலை செய்தாலும் சோர்வடையவே மாட்டீங்க. உங்கள் உடம்பில் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியும் தாங்காது.

bathing
- Advertisement -

முதல் நாள் எவ்வளவு தான் வேலை இருந்தாலும், இரவு தூங்கி மறுநாள் காலை கண் விழிக்கும் போது நம்முடைய உடல் சோர்வடைய கூடாது. அடுத்த நாளுக்கு உண்டான வேலையை பார்ப்பதற்கு தேவையான தெம்பு நம் உடம்பில் கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்யணும். முதலில் காலையில் எழுந்த உடனேயே எல்லோரும் குளிக்க வேண்டும். இன்று அந்த பழக்கத்தையே நாம் மறந்து விட்டோம். எழுந்து பல் கூட தேய்ப்பதில்லை. அப்படியே முகம் கழுவி வெறும் தண்ணீரில் வாய் கொப்பளித்து, அப்படியே சமையலறைக்குள் சென்று சமைக்கக் கூடிய பழக்கம் தான் நிறைய பெண்களுக்கு உள்ளது. நிறைய ஆண்கள் படுக்கையிலேயே எழுந்த அமர்ந்து பல் கூட தேய்க்காமல், காபி டீ குடிக்கக்கூடிய பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இது ரொம்ப ரொம்ப தவறு. இப்படி செய்தால் உடல் அசதியும் சோம்பேறித்தனமும் உடம்போடு நாள் முழுவதும் ஒட்டி இருக்கும்.

காலையில் எழுந்து முதலில் தண்ணீரை நம் மேலே ஊற்றும் போது நம் உடம்பில் இருக்கக்கூடிய எல்லா விதமான அசத்தியம், கண் திருஷ்டியும் நம் உடம்பை விட்டு நீங்கும். உடல் உறுப்புகள் சுறுசுறுப்பை பெறும். கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தி நம் உடம்பை விட்டு நீங்கிவிடும். தண்ணீரை தெளித்தாலே தோஷம் விலகும் என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த தீர்த்தத்தை நாம் நம் உடலின் மீது ஊற்றும்போது, நம்முடைய உடலும் மனமும் சேர்ந்து சுத்தம் ஆகிவிடும். அது மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்திற்கும் காலையில் குளிப்பது தான் நல்லது. உங்களிடம் இது நாள் வரை காலையில் எழுந்தவுடன் குளிக்கின்ற பழக்கம் இல்லை என்றால் அதை இனிமேல் பின்பற்றி பாருங்கள். உங்களுக்கே தெரியாத நிறைய நல்ல மாற்றங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கத் தொடங்கிவிடும்.

- Advertisement -

சில பேர் மன வலிமையோடு மன உறுதியோடு இருப்பார்கள். அவர்களை எந்த ஒரு கண் திருஷ்டியும் எந்த ஒரு கெட்ட சக்தியும் நெருங்க முடியாது. எவ்வளவுதான் வேலை செய்தாலும் இப்படிப்பட்டவர்களுக்கு உடல் அசதியாகாது. இரவு 12 மணிக்கு வந்து தூங்கினாலும், காலை 6 மணிக்கு, மணி அடித்தது போல கண் விழித்து விடுவார்கள். ஆனால் சில பேர் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பலவீனமானவர்களாக இருப்பார்கள். ஒரு நாள் அழகாக அலங்காரம் செய்து கொண்டு, ஒரு சின்ன வேலையை செய்து விட்டு, வீட்டிற்கு வந்தால் கூட, உடல் முழுவதும் அடித்துப் போட்டது போல வலிக்கும். ஒரு திருமணத்திற்கு, ஒரு கோவில் குளங்களுக்கு சென்று வந்தால் கூட மறுநாள் காலை எழுந்து வேலை பார்க்க முடியாது. காரணம் இவர்களுக்கு உடம்பிலும் தெம்பில்லை. மனதிலும் தெம்பில்லை.

பார்ப்பவர்களுடைய பொறாமை பார்வை, கண் திருஷ்டி எல்லாம் வலிமை இல்லாதவர்களை சீக்கிரம் தாக்கும். இப்படிப்பட்டவர்கள் தினமும் காலையில் எழுந்து தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு, அந்த உப்பு கலந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். உப்பை நீங்களே உங்கள் கையால் எடுத்து தண்ணீரில் போட்டு கலந்து குளிங்க. யார் கையால் தண்ணீரில் உப்பு போடுறீங்களோ, அவங்களே தான் அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.

- Advertisement -

தினமும் இப்படி செய்து வாருங்கள். அன்றாடம் உங்களை அறியாமல் உங்களின் மீது விழும் கண்திருஷ்டி, கெட்ட சக்தி, இப்படி எதுவாக இருந்தாலும் தினம் தினம் அது உங்கள் உடம்பை விட்டு நீங்கிவிடும். நாளடைவில் நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள். உங்களை அறியாமலேயே உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டத்தை இந்த கல்லுப்பு குளியல் கொடுத்து விடும். உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. எந்த ஒரு நோயாக இருந்தாலும் பொசுக்கென உங்களை வந்து தொற்றுகிறது என்றால் கூட, உங்கள் உடம்பின் மேல் இந்த உப்பு ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு, உங்களுக்கு வரக்கூடிய நோயிலிருந்து காக்கவும் செய்யும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் ஒரு முறை மட்டும், அதுவும் இன்றே இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால், உங்கள் வாழ்க்கையில் இனி எதுவும் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவிற்கு செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள் என்பது உறுதி.

தொடர்ந்து 90 நாட்கள் இப்படி உப்பு கலந்த தண்ணீரில் குளித்து வந்தால், நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உணருவீர்கள். எவ்வளவு வேலை செய்தாலும் உடல் அசதி ஆகாது. ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரம் உங்களுக்கு பிடித்திருந்தால், நம்பிக்கை இருந்தால் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -