இந்த 1 விஷயத்தை மட்டும் கடைபிடிப்பவர்கள் குடும்பத்திற்கு கண் திருஷ்டி படாது, எந்த கெட்டதும் நடக்காது. குடும்பம் பல தலைமுறைக்கு சுபிட்சம் பெறும்.

vinayagar
- Advertisement -

முதலிலேயே இந்த கேள்விக்கு உண்டான பதிலை தெரிந்து கொள்வோம். எந்த ஒரு விஷயத்தை கடைப்பிடித்தால் குடும்பத்திற்கு கண் திருஷ்டி படாது? நம் குடும்பத்திற்கு கண் திருஷ்டி படக்கூடாது, நம்முடைய குடும்பம் அடுத்தவர்களின் பொறாமை பார்ப்பணியினால் சீரழியக்கூடாது, நம்முடைய குடும்பத்திற்கு ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகளால் பாதிப்புகள் வரக்கூடாது, என்றால் முதலில் நாம் செய்ய வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?

நாம் அடுத்தவர்களின் மீது பொறாமைப்படக்கூடாது. நாம் அடுத்தவர்களின் மீது கண் திருஷ்டி வைக்கக் கூடாது. நாம் அடுத்தவர்களை கெட்ட கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. அடுத்தவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்று ஏவல் பில்லி சூனியத்தை ஏவி விடக்கூடாது. நாம் அடுத்தவர்களுக்கு நல்லதை நினைக்க வேண்டும். இதை செய்தாலே நம்முடைய குடும்பத்திற்கு எந்த கெட்டதும் வராது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றோம். பத்தில் இரண்டு பேர் கூட இதை செய்வது கிடையாது.

- Advertisement -

எதிராளியின் குடும்பத்தில் ஆயிரம் கஷ்டம் இருக்கும். அவன் வட்டிக்கு பணம் வாங்கி, இ.எம்.ஐ கட்ட முடியாமல் கட்டி ஒரு வீட்டை கட்டி வைத்திருப்பான். அந்த வீட்டை பார்த்து நாம் பொறாமை படுவோம். நம்மால் இப்படி ஒரு வீடு கட்ட முடியவில்லை. இவன் மட்டும் இப்படி ஒரு வீடு கட்டி விட்டானே என்று. நாம் அடுத்தவனை பார்த்து இப்படி பொறாமைப்படும் போது நம்மை பார்த்து மற்றொருவன் பொறாமை படத்தானே செய்வான். நம் குடும்பத்திற்கு பிரச்சினை ஆரம்பிப்பது இந்த எண்ணத்தின் மூலமாகத்தான்.

கண் திருஷ்டி படாமல் இருக்க பரிகாரம்:
சரி, இப்படிப்பட்ட நல்ல குணநலன்களை நாம் கொண்டு இருந்ததாலும், பரிகாரம் செய்தால் தானே மனிதர்களுக்கு மனம் திருப்தி அடையும். வீட்டிற்குள் நுழைப்பவர்கள் கண்கள் முதலில் பார்க்கும்படி இந்த பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை மாட்டி வையுங்கள். அது எல்லாமே மங்களகரமான பொருட்களாக தான் நாம் பார்க்கப் போகின்றோம். கருட கிழங்கு, மாயிலை தோரணம், கற்றாழை, கண்ணாடி, மஞ்சள் குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம், எருக்கன் கட்டை, இப்படி இதில் உங்களுடைய மனதிற்கு எது ரொம்பவும் திருப்தியை கொடுக்கிறதோ எது சுலபமாக கிடைக்குமோ அந்த பொருட்களை நிலை வாசலில் மாட்டி வையுங்கள்.

- Advertisement -

சில பேருக்கு கற்றாழையை நிலை வாசலில் வைத்தால் ராசி இருக்காது. அப்படிப்பட்டவர்கள் அதை நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம். அழகழகான பூக்களினால் செய்யப்பட்ட தோரணங்கள் கூட மாட்டலாம். பிளாஸ்டிக் பூக்களை வாசலில் வைக்காதீங்க.

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில் இந்த சிலைகளை மட்டும் மறந்தும் கூட வைத்து வழிபடாதீர்கள். குடும்பத்திற்கு துன்பம் வந்து சேரும்.

சரி இது எதுவுமே எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு கடவுள் மீது மட்டும்தான் நம்பிக்கை இருக்கிறது என்றால், ஒரு அழகான பிள்ளையாரை வாங்கி நிலை வாசலுக்கு வெளிப்பக்கம் மாட்டி வைத்து விடுங்கள். உங்கள் வீட்டிற்குள் வருபவர்கள் என்னதான் கோபத்தோடு பொறாமை குணத்தோடு கெட்ட எண்ணத்தோடு வந்தாலும் இந்த பிள்ளையாரை பார்த்தவுடன் மனம் திருந்தி விடுவார்கள். வீட்டிற்குள் வரும்போது நல்ல குணத்தோடு வருவார்கள் என்பது நம்பிக்கை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -