இந்த எண்ணெயை மட்டும் தலையில் தடவி வந்தால் நரைமுடியே வராது. உங்களுக்கு ஒன்னு ரெண்டு நரைமுடி ஆங்காங்கே எட்டிப் பார்க்கும்போதே இதை தலையில் தடவ ஆரம்பிச்சுடுங்க.

hair-oil
- Advertisement -

இன்றைக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நரைமுடி பிரச்சனை இருக்கு. முன்பெல்லாம் 45 வயதை கடந்தவர்களுக்கு கூட நரைமுடி கொஞ்சம் கொஞ்சமாகத் தான் எட்டி பார்க்கும். இப்போது சிறுவயதிலேயே ஆங்காங்கே நரைமுடி வளர தொடங்கி விடுகிறது. இது நமக்கான அழகை கொஞ்சம் குறைத்துக் காட்டும். நரைமுடி வந்து விட்டாலே ஏதோ மனதில் ஒரு பயம் வந்துவிடும். ஆஹா, இதற்குள் வயதாகி விட்டதா, என்ன இது நரைமுடி எட்டிப் பார்க்கிறது என்று. ஆனால் இந்த நரைமுடியை பார்த்து பயப்படாதீங்க. வயது என்பது நம்பருக்கு மட்டும்தான். ஆனால் மனதை என்றைக்குமே 20 வயது போல இளமையாக வைத்துக் கொண்டால் போதும். அழகாகவும் சந்தோஷமாக வாழ முடியும். சரி சரி என்னதான் சொன்னாலும் நரைமுடி வந்தவர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும் அதற்கான ரெமிடியை சொல்லுங்கள் என்று கேட்பவர்களுக்கு இந்த அழகு குறிப்பு.

நரைமுடி கருப்பாக எண்ணெய் தயார் செய்யும் முறை:
இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் வெள்ளை கரிசலாங்கண்ணி இலை, சுத்தமான மர செக்கு தேங்காய் எண்ணெய். அவ்வளவு தாங்க. இந்த இரண்டு பொருட்கள் போதும். இந்த கரிசலாங்கண்ணி இலையை வாங்கி நிழலிலேயே காய வைக்க வேண்டியது உங்களுடைய வேலை. கீரை காரரிடம் சொல்லி வைத்தாலோ அல்லது நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்தாலோ இந்த கீரை உங்களுக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

அதை வாங்கி முதலில் தண்ணீரில் போட்டு கழுவி தண்ணீரை வடிய வைத்து ஒரு வெள்ளை துணியில் பரப்பி போட்டு வீட்டுக்குள்ளேயே காய வைத்துக் கொள்ளுங்கள். இந்த கீரை மொறு மொறுப்பாக காய்ந்து வர வேண்டும். அந்த சமயத்தில் இந்த கீரையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொண்டாலும் சரி, இல்லை என்றால் உங்கள் கையாலேயே நொறுக்கிக் கொண்டாலும் சரிதான். இந்த கீரை பொடியாகி வந்தவுடன் இதை மெல்லிசான காட்டன் துணியில் போட்டு சின்ன முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். வெள்ளை காட்டன் துணியாக இருந்தால் நல்லது.

இந்த முச்சை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்ச போகின்றோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி இந்த முடிச்சை அப்படியே அந்த எண்ணெயில் போட்டு காய்ச்சிக் கொள்ளுங்கள். எண்ணெயின் நிறம் மாறி வந்த உடன் அடுப்பை அணைத்து விடுங்கள். பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் என்னை மிதமான தீயில் சூடு ஆகட்டும்.

- Advertisement -

காய்ந்த எண்ணெய் நன்றாக ஆறட்டும். இந்த முடிச்சை எண்ணெயில் இருந்து எடுக்க வேண்டாம். முடிச்சு எண்ணெயில் அப்படியே இருக்கட்டும். இந்த தேங்காய் எண்ணெயை மட்டும் எடுத்து தினமும் உங்களுடைய தலையில் தேய்த்து வர நரைமுடி பிரச்சனை படிப்படியாக குறையும். வந்த நரை முடி கூட ஒரு சில நாட்களில் கருப்பாக மாறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. 1/2 லிட்டர் அளவு தேங்காய் எண்ணெய்க்கு மூன்று கைப்பிடி அளவு கீரையாவது நமக்கு தேவைப்படும். இந்த எண்ணெயை எப்படி எல்லாம் தலைக்கு பயன்படுத்தலாம். அது உங்களுடைய சௌகரியம்தான்.

இதையும் படிக்கலாமே: முகம் எப்போதுமே இளமையாகவும், வசீகரமாகவும் இருக்க இரவு தூங்கும் முன் இந்த ஆயிலை மட்டும் முகத்தில் தேய்த்தாலே போதும். அப்புறம் ஆயுள் முழுவதும் நீங்க பியூட்டி குயினாகவே இருக்கலாம்.

தினமும் தேங்காய் எண்ணெய் வைப்பது போல தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் எண்ணெய் வைக்க பிடிக்காதா, வாரத்தில் இரண்டு நாள் இந்த எண்ணெயை இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தலையில் வைத்துக்கொண்டு, மறுநாள் காலை தலைக்கு குளித்து விடுங்கள். எப்படியாக இருந்தாலும் இந்த எண்ணெயை தொடர்ந்து மூன்று மாதம் பயன்படுத்தி வர நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்களுக்கு இந்த அழகு குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -