காரிய சித்தி உண்டாக மந்திரம்

god
- Advertisement -

சில பேர் தொட்ட காரியத்தில் உடனடியாக வெற்றி காண்பார்கள். சில பேருக்கு அந்த வெற்றி எட்டாக்கனியாக இருக்கும்.  தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே வருவார்கள். 90% சதவீதம் அந்த காரியம் சக்சஸ். ஆனால் கடைசி 10% வரும்போது தோற்றுப் போய் விடுவார்கள். இது அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய கஷ்டத்தை கொடுத்து விடும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய நம்பிக்கையை இழந்து வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். நம் வாழ்வில் நம்பிக்கை இருந்தால் மட்டும்தான் வெற்றி அடைய வேண்டும். ஆனால் அந்த நம்பிக்கையை சோதித்து பார்க்கும் அளவுக்கு காரியத்தடை, தோல்வி இருந்தால் வாழ்க்கையில் முன்னேறுவது ரொம்ப ரொம்ப கஷ்டம்.

- Advertisement -

உங்களுக்கும் இதுபோல பிரச்சனைகள் இருக்கா. காரியத்தடை உள்ளதா. எந்த விஷயத்திலும் உடனடியாக வெற்றி காண முடியவில்லையா ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் எளிதில் வெற்றி அடையலாம். காரிய தடை விலகும்.

காரிய சித்தி உண்டாக மந்திரம்

தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடுங்கள். பூஜை அறையில் இருக்கும் குலதெய்வத்தை நமஸ்காரம் செய்து கொண்டு, பின் சொல்ல கூடிய இந்த 2 வரி மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். ‘ஓம் சர்வ லோக வசிகரி, ஓம் ஸர்வ மோக வசீகரி’ இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இன்று எடுக்கக்கூடிய முயற்சிகளில் காரிய தடை வரக்கூடாது வெற்றி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு வீட்டில் இருந்து கிளம்புங்கள்.

- Advertisement -

தினமும் இந்த மந்திரத்தை சொல்ல நேரமில்லை என்பவர்கள் முக்கியமான வேலைகளுக்காக வெளியில் செல்லும்போது இந்த மந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் 100% வெற்றி அடையும். வேலை கிடைக்க இன்டர்வியூக்கு போறீங்க, தொழிலில் காண்ட்ராக்ட் உங்க பக்கம் கையெழுத்தாகனும் அல்லது பிடித்த கல்லூரியில் சீட்டு கிடைக்க முயற்சி செய்றீங்க அல்லது நடக்காத சுப காரியங்கள் ஏதேனும் நடப்பதற்காக வெளியில் போறீங்க அப்படிங்கற போதும் இந்த மந்திரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சர்வ லோகத்தில் இருக்கும் நல்லதும் உங்களுக்கு வசியம் ஆகிவிடும். பிறகு காரிய தடை என்பதே இருக்காது. நல்ல தேவதைகளின் ஆசிர்வாதத்தை பெற அந்த காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த எளிமையான மந்திரம் இது.

- Advertisement -

தினமும் தொடர்ந்து 48 நாள் குளித்து முடித்தவுடன் இந்த மந்திரத்தை சொல்லுபவற்கு உங்களை அறியாமலேயே ஒரு வசீகரத்தன்மை ஏற்பட்டு விடும். இந்த மந்திரம் நிரந்தரமாக உங்களுக்கு சித்தியாகிவிடும். நீங்கள் செய்யக்கூடிய செயல்பாடுகளில் அடுத்தவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

இதையும் படிக்கலாமே: நோய்நொடி பிரச்சனையை தீர்க்கும் எலுமிச்சம் பழம்

இந்த வசீகரத் தன்மை உங்களை வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்த்த உதவும். ஆண்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம். பெண்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -