நோய்நொடி பிரச்சனையை தீர்க்கும் எலுமிச்சம் பழம்

amman6
- Advertisement -

எப்பவாவது ஒரு சமயம் வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகுது, மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டால் குணமாகிவிடுகிறது. இதனால், எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் ஒரு சில பேர் வீடுகளில், ஒரு சில நேரங்களில் நோய்நொடி பிரச்சனை ஒருத்தரை கூட விட்டு வைக்காது. இன்று கைவலி, கால் வலி, நாளை காய்ச்சல், அதற்கு மறுநாள் தலைவலி, அதற்கு மறுநாள் சொல்லவே முடியாத உடல் ஆரோக்கிய பிரச்சனை.

என்னன்னே தெரியல இன்று ஒருத்தருக்கு பிரச்சினை ஆரம்பிக்குது. அந்த ஒரு நபருக்கு பிரச்சினை சரியாவதற்குள், இன்னொருவருக்கு வேறு ஒரு வியாதி வந்து விடுகிறது. இப்படி தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை. என்னதான் செய்வது. இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சில ஆன்மீகம் சொல்லும் எளிய வழிபாட்டு முறைகள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

தீராத நோய் நொடி தீர பரிகாரம்

முதலில் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த நோய்நொடி பிரச்சனை எதனால் வருகிறது என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், வீட்டில் வாஸ்து கோளாறு இருக்கும், அல்லது அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நேரம் சரியில்லாமல் இருக்கும். இந்த இரண்டு பிரச்சனை முதலில் கவனிக்கணும். அடுத்தபடியாக மேற்கு பார்த்த வாசல், தெற்கு பார்த்த வாசல் இந்த இரண்டு வாசலைக் கொண்ட வீடுகளில் நோய்நொடி பிரச்சனைகள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மேற்கு வாசல் படியில் உள்ளவர்களும், தெற்கு வாசல் படியில் உள்ளவர்களும் உங்கள் நிலைவாசல் படியில் கட்டாயமாக கற்பக விநாயகர் படத்தை மாட்டி வையுங்க. எந்த ஒரு தோஷமும் உங்களுக்கு தாக்காது. நோய்நொடி பிரச்சனை இருந்தாலும் அதை சரி செய்ய இந்த விநாயகர் படம் உங்களுக்கு உதவி செய்வார். இதோடு சேர்த்து இன்னொரு சின்ன வேலையையும் செஞ்சிருங்க.

- Advertisement -

சின்ன தொட்டியில் துளசி செடியை உங்களுடைய வீட்டில் வையுங்கள். இந்த துளசி செடியும் தோஷங்களை விளக்கக் கூடியது. எந்த திசையில் உங்கள் வீடு இருந்தாலும் சரி, வீட்டில் நோய் நொடி பிரச்சனை தீர வேண்டும் என்றால் ஒரு தொட்டியில் உங்கள் வீட்டில் துளசி செடி வைக்கணும்.

அடுத்தபடியாக வீட்டுக்குள் சூரிய பகவான் வெளிச்சம் பட வேண்டும். சூரியனின் கதிர்கள் எந்த வீட்டுக்குள் நுழைகிறதோ, அந்த வீட்டிற்குள் நோய்நொடி பிரச்சனை இருக்காது. இருண்ட வீட்டில் நோய் நொடி பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எல்லா விஷயத்தையும் செஞ்சு பார்த்தாச்சு ஆனாலும் எங்களுக்கு இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.

- Advertisement -

வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக மாறி மாறி ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், செவ்வாய்க்கிழமை ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கிக்கோங்க. கொண்டு போய் நேரா ஒரு அம்மன் கோவில் திருசூலத்தில் குத்திடுங்க. அம்மா தாயே எங்கள் வீட்டை பிடித்த பிரச்சினை தீரனும். நோய்நொடி பிரச்சனை தீரனும். நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று அம்பாள் பாதங்களை பிடிச்சுக்கோங்க.

அடுத்து அதே திரிசூலத்தில் இன்னொரு எலுமிச்சம் பழத்தை லேசாக குத்தியபடி வைத்துவிட்டு, மனம் உருகி வேண்டிக்கோங்க. எங்க வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கணும் வீட்டில் இருக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனை எல்லாம் ஓடிவிட வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் மருந்து மாத்திரை சாப்பிடாமல் இருக்க வேண்டும் அதற்கு நீ தான் வழி காட்ட வேண்டும் என்று பிராத்தனை செய்து கொண்டு, அந்த எலுமிச்சம்பழத்தை அப்படியே வீட்டுக்கு எடுத்து வந்து சாறு பிழிந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக குடித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணத்தட்டுப்பாடு வராமல் இருக்க பரிகாரம்

குறிப்பாக மாரியம்மன் கோவிலில் இந்த வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. செஞ்சு பாருங்க இந்த வழிபாடுகளில் ஏதாவது ஒரு வழிபாடு நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -