வீட்டில் 1 குண்டு மஞ்சள் இருந்தால் போதும். சுபகாரியங்கள் கைகூடி வர நேரமும் காலமும் நமக்கு சாதகமாக இயங்கும்.

manjal
- Advertisement -

நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை நாம் மனதில் நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அந்த விஷயத்தை செயல்படுத்தும் நேரமும் காலமும் நமக்கு கைகூடி வராது. நீண்ட நாட்களாக மனதில் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் அந்த தொழில் தொடங்குவதற்கான நேரமும் காலமும் சரியாக நமக்கு அமையாது. நல்ல சம்பளத்தோடு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருவோம். ஆனால் நல்ல வேலையும் கிடைக்காது. அப்படியே கிடைத்தால் நல்ல சம்பளமும் கைக்கு வராது.

manjal-kizhangu

சில பேர் நீண்ட நாட்களாக அவர்கள் வீட்டில் ஒரு நல்லதை நடத்தி பார்க்க வேண்டுமென்று நினைப்பார்கள். தன்னுடைய மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் நடைபெற வேண்டும் அல்லது திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அதாவது இது சுபகாரியங்கள் வரிசையில் வந்துவிடும்.

- Advertisement -

சில பேருக்கு நீண்டநாட்களாக பணம் சேர்த்து நிலம் வாங்க வேண்டும். வீடு கட்ட வேண்டும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க வேண்டும். தங்கம் வாங்க வேண்டும் என்று இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். சரி, உங்கள் மனதில் நீங்கள் எதை நினைத்து வைத்திருந்தாலும் சரி, நினைத்ததை நடத்திக் காட்ட நேரமும் காலமும் உங்களுக்கு சாதகமாக கைகூடி வர மிக மிக சுலபமான பரிகாரம் உள்ளது. அதை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

thazhambu

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் ஒரே ஒரு குண்டு மஞ்சள், தாழம்பூ சாரு, தாழம்பூ அவ்வளவு சுலபமாக நமக்கு இப்போது கிடைக்காது. ஆனால் தாழம்பு எசன்ஸ் நாட்டு மருந்து கடைகளில் விற்கிறது. அதை நாம் பரிகாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வோம்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு செல்ல வேண்டும். மஞ்சள் இழைக்கும் கல்லில் ஒரு சொட்டு தாழம்பூ எசன்ஸ் விட்டு, இந்த மஞ்சளை எசன்சில் லேசாக குழைத்தால், மஞ்சள் விழுது நமக்கு கிடைத்துவிடும். அந்த விழுதை தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

praying-vilakku

உங்களுடைய மனதில் நீங்கள் நினைத்து இருக்கும் எந்த ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமோ, அந்த ஒரு நல்ல காரியத்தை தினமும் இந்த பிரபஞ்சத்திடம் வரமாக கேளுங்கள். நவக்கிரகங்களையும், பஞ்சபூதங்களையும், குல தெய்வத்தையும் மனதில் நினைத்துக்கொண்டு நீங்கள் மனதில் நினைத்த அந்த ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தால் 48 நாட்களில் நிச்சயமாக உங்களுக்கு நல்லதொரு வழி கிடைக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -