ஒரு வெற்றிலையும் ஒரு ரூபாயும் இருந்தா இதை செய்யுங்க நீண்ட நாட்களாக நீங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் நடக்காத காரியம் கூட உடனே நடந்து விடும்.

hanuman vetrilai coin
- Advertisement -

விநாயகரும், ஆஞ்சநேயரும் தங்களை நம்பி வரும் பக்தர்களுக்கு சோதனைகள் தராமல் அவர்கள் விரும்பியதை நிறைவேற்றுவார். ஆதலால் தான் சனிபகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வணங்க வேண்டும் என்று கூறுவது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் ஆஞ்சநேயரை தொடர்ந்து 11 நாட்கள் எப்படி வழிபட்டால் காரிய சித்தி ஏற்படும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நமக்கு ஏற்படத் தான் செய்கிறது. அந்தப் பிரச்சினைகளில் இருந்து வெளி வருவதற்கு நாம் பரிகாரங்களை மேற்கொள்கிறோம். எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த தடங்கலாக இருந்தாலும் அல்லது நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடத்த வேண்டும் என்று நினைத்தாலும் ஆஞ்சநேயரை நாம் வழிபடலாம். அவரை நம்பிக்கையுடன் வழிபடுவதன் மூலம் அனைத்து பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -

காரிய சித்தி ஏற்பட பரிகார முறை:
இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமையில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 நாட்கள் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் வெற்றிலையும், ஒரு ரூபாய் நாணயமும் தான். இந்த பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது அசைவம் சாப்பிடுவதை தவிர்த்தால் பலன் விரைவில் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை மாலை நேரம் விளக்கேற்றி வைத்து செய்ய வேண்டும். முதலில் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி, தூபம் காட்டி வீடு முழுவதும் சாம்பிராணி போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலையில் நம்முடைய கோரிக்கை என்னவோ அதை ஒரு பேனாவால் எழுதிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்த நாணயத்தின் நடுவில் ஆஞ்சநேயருக்கு பிடித்தமான செந்தூரத்தை வைக்க வேண்டும். பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வெற்றிலையின் நடுவில் வைக்க வேண்டும். இப்பொழுது அந்த வெற்றிலையை நம்முடைய இடது கையில் வைத்து அதன் மேல் நம்முடைய வலது கையை வைத்து (அதாவது வெற்றிலையை மூடியவாறு கையை வைத்து) ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

- Advertisement -

இதை குறைந்தது 15 நிமிடமாவது நம் கையில் வைத்து கோரிக்கையை ஆஞ்சநேரிடம் தெரிவித்து, அவரை வணங்க வேண்டும். பிறகு அந்த வெற்றிலையை மடித்தோ அல்லது சுற்றியோ ஆஞ்சநேயர் புகைப்படத்தில் கீழ் வைத்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் மாலையில் விளக்கேற்றி ஒரே கோரிக்கையை ஆஞ்சநேயர் இடம் வைக்க வேண்டும். 12வது நாள் காலையில் அந்த வெற்றிலைகள் அனைத்தையும் எடுத்து கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அந்த 11 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவருக்கு காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாராகி அம்மனை நினைத்து இந்த பொருளை நிலை வாசலில் கட்டி விட்டால் போதும். உங்களைஅழிக்க நினைக்கும் எந்த ஒரு கெட்ட சக்தியும் உங்க கிட்ட கூட நெருங்க முடியாது.

பிறருக்கு தீங்கு விளைவிக்காத எந்த கோரிக்கையாக இருந்தாலும் ஆஞ்சநேயர் அந்த கோரிக்கையை நிறைவேற்றுவார். மேலும் அவருக்கு பிடித்தமான ஸ்ரீ ராம ஜெயம் என்ற மந்திரத்தை 108 முறை தினமும் எழுதி வர, ஆஞ்சநேயர் மனமகிழ்ந்து நமக்கு காரிய சித்தி வழங்குவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -