பரம ஏழையையும் பணக்காரனாக மற்றும் பஞ்சமி தீப வழிபாடு

varahi five rupee coin
- Advertisement -

சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி வழிபாடு மிகவும் உகந்த ஒன்று. இது அனைவரும் அறிந்தது தான். இந்த பஞ்சமி திதியானது நாளை ஞாயிற்றுக்கிழமை மார்கழி ஒன்றாம் தேதி வந்திருப்பது மேலும் நல்ல பலன்களை தருவதாக அமைந்துள்ளது.

அத்தகைய பஞ்சமி திதி வழிபாட்டை நம்முடைய செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ள எப்படி செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பண வரவை அதிகரிக்கும் பஞ்சமி திதி வழிபாடு

இந்த வழிபாட்டை நாளை பகல் முழுவதும் பஞ்சமி திதி இருந்தாலும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்வது நல்ல பலனை தரும். நாளை பஞ்சமி திதி இரவு 9 மணி வரை உள்ளது. ஆகையால் ஏழு மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது.

அதுமட்டுமின்றி இந்த பரிகாரத்தை விரதம் இருந்து செய்வது விசேஷமான பலன்களை தரும். விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவை உண்டு, அன்றைய தினம் அசைவத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த பரிகாரத்தை செய்ய ஐந்து செம்பருத்திப் பூ, ஐந்து ரூபாய் நாணயம் தேவை. அன்னைக்கு பிரசாதமாக மாதுளை முத்துக்கள் நெல்லிக்கனி இவைகளை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் வாராகி அன்னை படம் வைத்திருந்தால் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். படம், விக்ரகம் இல்லாதவர்கள் விளக்கே வாராகி அன்னையாக பாவித்து இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்கு ஒரு தாம்பள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள்.

அதன் பிறகு தட்டி சுற்றி செம்பருத்தி மலரை வட்டமாக வைத்து விடுங்கள். இந்த செம்பருத்தி மலரின் மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வையுங்கள். இந்த நாணயத்திற்கு மேல் பச்சைக் கற்பூரத்தை கொஞ்சமாக வையுங்கள். இப்பொழுது இந்த தாம்பாள தட்டிற்கு நடுவில் ஐந்து முக விளக்கை வைக்க வேண்டும்.

- Advertisement -

ஐந்து முக விளக்கு இல்லை என்றால் ஒரு அகல் விளக்கை நெய் ஊற்றி அதை வைத்து தீபம் ஏற்றுங்கள். இந்த விளக்கு இல்லாமல் வாராகி அன்னைக்கு முன்பாக ஐந்து முக விளக்கு அல்லது ஐந்து அகல் விளக்கு தனியாக எரிய வேண்டும்.

இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து கையில் மஞ்சள் குங்குமத்தை எடுத்துக் கொண்டு அதை ஒவ்வொரு நாணயத்தின் மீதும் அர்ச்சனை செய்வது போல போடுங்கள். அந்த நேரத்தில் வாராகி அன்னையின் மந்திரங்கள் எது தெரிந்தாலும் சொல்லுங்கள். தெரியாதவர்கள் ஓம் ஐம் க்லௌம் பஞ்சமியை நமஹ இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

இப்போது இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து வழிபாட்டை முடித்த பிறகு கற்பூர தீபாராதனை செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு விரதம் இருப்பவர்கள் நெய்வேத்தியத்தை உண்டு விரதத்தை முடித்த பிறகு அசைவ சாப்பாடு சாப்பிடுங்கள். இந்த நாணயம் செம்பருத்தி இவையெல்லாம் பூஜை அறையில் வாராகி அன்னையின் படத்திற்கு முன்பாகவே வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் குளித்து முடித்த பிறகு இந்த செம்பருத்தி மலரின் உள்ள ஐந்து ரூபாய் நாணயத்தையும் செம்பருத்தி பூவையும் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் கொடுத்து விடுங்கள். அதே போல் நீங்கள் பரிசிலும் வைத்துக் கொள்ளலாம். வெளியில் யாருக்கும் இதை கொடுக்கக் கூடாது. மஞ்சள் குங்குமத்தை நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ளுங்கள்.

செம்பருத்திப்பூ வாடிய பிறகு கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எந்த செலவும் செய்யாமல் எப்போதும் உங்களுடனே வைத்திருங்கள். இந்த ஐந்து ரூபாய் உங்களுக்கு பல கோடிகளை சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

செம்பருத்திப்பூ பணவரவை ஏற்படுத்தும் அதே போல் பச்சைக் கற்பூரம் மகாலட்சுமி தாயாருக்கு உகந்தது. ஐந்து ரூபாய் நாணயம் குபேர சம்பத்து கொண்டது. இந்த பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து உங்களுடன் இருக்கும் பொழுது நிச்சயம் பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தொழிலில் வெற்றி பெறவும், ஜனவசியம் ஏற்படவும் பரிகாரம்

நீங்கள் எத்தகைய எளிமையான சூழ்நிலை இருந்தாலும் நிச்சயம் நல்ல பணவரவுடன் செல்வந்தராக வாழும் வாழ்க்கை இந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

- Advertisement -