எலுமிச்சம் பழத்தில் இந்த வார்த்தையை எழுதினாலே போதும். பணத்தை தேடி நீங்கள் போக வேண்டாம். அந்த பணமே உங்கள் வீடு தேடி வரும்.

cash2
- Advertisement -

பணத்தை வசியம் செய்வது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் தெரியாது. ஒருமுறை பணத்தை சேமிக்க கூடிய வித்தையை கற்றுக் கொண்டால் போதும். அந்த பணமே பல மடங்காக பெருகிவிடும். அதாவது, பத்தாயிரம் ரூபாய் சேர்ப்பதில்தான் நமக்கு சிரமம் இருக்கும். அந்த பத்தாயிரத்தை சேர்த்து வைத்து விட்டால், அது பல ஆயிரமாக சேமிப்பை பெருக்க தொடங்கிவிடும். இது உண்மைதாங்க. நீங்க வேணும்னா முயற்சி செய்து பாருங்கள்.

கையில் பத்து ரூபாய் கூட நிற்கவில்லை என்று எல்லா காசையும் செலவு செய்யாதீங்க. பத்து பத்து ரூபாயாக, ஆயிரம் ரூபாய் சேருங்கள். ஆயிரம் ஆயிரம் ரூபாயாக, பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வையுங்கள். பிறகு அடுத்தடுத்து 10,000, 10,000 ஆக பணம் உங்கள் கைகளில் சேர தொடங்கிவிடும். பணத்தை நேசித்து, யோசித்து, சேமித்து, வைப்பவர்கள் நிச்சயம் பணக்காரர்களாக தான் இருப்பார்கள். இது சூட்சம வித்தை. அடுத்தவர்கள் சொல்லிக் கொடுத்து நீங்கள் இதை கற்றுக் கொள்வது கொஞ்சம் கஷ்டம். நீங்களே ரொம்ப கஷ்டப்பட்டு, அனுபவப்பட்டு கற்றுக் கொண்டால் அந்த பணம் உங்களிடம் வசியமாகிவிடும். சரி போகட்டும்.

- Advertisement -

பணத்தை வசியம் செய்ய எலுமிச்சை பழ பரிகாரம்:
இந்த பணத்தை வசியம் செய்ய ஏதாவது ஒரு வித்தை இருக்கிறதா. அதை கொஞ்சம் சொல்லித் தாருங்கள். நாங்களும் முயற்சி செய்து பார்க்கின்றோம் என்பவர்களுக்காக இந்த அழகான ஆன்மீக குறிப்பு. இதற்கு நமக்கு தேவையான பொருள் என்ன தெரியுமா. கரும்புள்ளிகள் இல்லாத கொஞ்சம் பெரிய சைஸ் இருக்கும் எலுமிச்சம்பழம். ஏனென்றால், அதில் நாம் ஒரு வார்த்தையை எழுத போகின்றோம். அதனால் கொஞ்சம் பெரிய சைஸ் பழமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு பச்சை நிற பேனா ரொம்ப ரொம்ப முக்கியம். பச்சை நிற பேனா, ஸ்கெட்ச், மார்க்கர் எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். இந்த எலுமிச்சம் பழத்தில் எழுதக்கூடிய நேரம் அதைவிட ரொம்ப ரொம்ப முக்கியம். பிரம்ம முகூர்த்தமாக அந்த நேரம் இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது.

- Advertisement -

அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பல் தேய்த்து முகம் கை கால்களை கழுவிக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் எந்த தீட்டும் இல்லாத பட்சத்தில். பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து, இந்த எலுமிச்சம்பழத்தை கையில் வைத்துக்கொண்டு உங்களுக்கு பணம் வசியமாக வேண்டும் என்று குலதெய்வத்தையும், இந்த பிரபஞ்சத்தையும் வேண்டிக் கொண்டு, ‘பணம் வசி வசி’ என்ற வார்த்தையை இந்த எலுமிச்சம் பழத்தில் எழுதி பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே கொண்டு போய் இதை பீரோவில் பணப் பெட்டியில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான்.

ஒரு நாள் இதை எலுமிச்சம் பழத்தில் பச்சை நிற பேனாவில் எழுதிட்டீங்க. அதை பணம் வைக்கும் பெட்டியில் வெச்சிட்டீங்க. ஒரு சில நாட்களில் அந்த பழம் காய்ந்து போய்விடும். வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வெள்ளிக்கிழமை வரை அந்த பழம் அங்கேயே இருக்கட்டும். மீண்டும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பழைய பழத்தை எடுத்து செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு மீண்டும் புது எலுமிச்சம் பழத்தில் இதே போல வார்த்தையை எழுதி பணப்பெட்டியில் வைக்கவும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இதே போல தொடர்ந்து செய்து வர உங்களுக்கு பணம் வசியம் ஆகும். நீங்கள் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்த இடத்தில் நிறைய பணம் தங்க தொடங்கிவிடும். அந்த பணப்பெட்டியில் வைத்த பணம் வீண்விரயமாகாது. பண வசியத்தை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -