உங்களை ஏளனமாய் பார்த்தவர்கள் உதாசீனப்படுத்தியவர்கள் முன் தலை நிமிர்ந்து வாழ இன்று இரவுக்குள் இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லிய பிறகு இதை செய்தால் போதும்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பல பேரை நாம் பார்த்திருப்போம் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள் பிறர் துன்பத்தை தன் துன்பமாக பார்ப்பார்கள். ஆனால் அவர்களை மற்றவர் ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். இது ஒரு புறம் இருக்க, வேலை செய்யும் இடங்களில் தன் சகப் பணியாளர்கள் கூட தங்களை உதாசீனப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இப்படி வீடு அலுவலகம் என பல்வேறு இடங்களில் இது போன்ற அவமானங்களை சிலர் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்தப் பிரச்சனை பெரும்பாலோர் ஊருக்கு உண்டு. இதற்கு காரணம் என்னவென்று அவர்களுக்கும் தெரியாது ஏன் அவர்களை உதாசீனப்படுத்துகிறோம் என்று மற்றவர்களுக்கும் புரியாது. ஒரு சில இடங்களில் காரணத்துடன் சில நிகழ்வுகள் நேரும். இப்படி வாழ்க்கையில் தோல்வி அவமானம் கஷ்டம் இவைகளை சந்தித்து நிம்மதி இல்லாமல் துன்பப்படுபவர்கள் வாயில்லா ஜீவன்களுக்கு இந்த ஒரு தானத்தை செய்யும் பொழுது இது போன்ற நிலை மாறக் கூடிய வாய்ப்பு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. அதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செல்லும் இடமெல்லாம் பேரும் புகழும் பெற்று வாழ
இந்த பரிகாரத்தை இன்றைய தினம் அதாவது 15.9.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணிக்கு பிறகு செய்ய வேண்டும். ஒரு சில பரிகாரங்களை அதற்கான திதி நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் தான் செய்ய வேண்டும் அதே போலத் தான் இந்த பரிகாரமும். ஆவணி அமாவாசையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை நாளில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு.

இந்த பரிகாரத்திற்கென பெரிதாக நாம் ஒன்றும் செய்து விடப் போவதில்லை. இன்று இரவுக்குள் வாயில்லா ஜீவன்களுக்கு உண்ண ஏதேனும் உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும். அது பெரும்பாலும் பழம், பால், பிஸ்கட் போன்றவையாக இருப்பின் நல்லது. இந்த தானத்தை கொடுப்பதற்கு முன்பாக நீங்கள் ஆகாயத்தை பார்த்து ஓம் என்ற வார்த்தையை மூன்று முறை சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் உங்களுக்கான இந்த நிலை மாற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அதன் பிறகு இந்த ஜீவராசிகளுக்கு தானம் செய்ய வேண்டும். இதே தானத்தை தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஜீவராசிகளுக்கும் கொடுக்கலாம் தவறில்லை.

- Advertisement -

இந்த தானத்தை செய்த பிறகு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி தெய்வத்தை வணங்கி விட்டு வாருங்கள். அது பைரவராக இருப்பின் மேலும் விசேஷமாக இருக்கும் ஏனெனில் இது போன்ற துன்பங்களிலிருந்தும் மற்றவர்களின் ஏளன பார்வையிலிருந்தும் எதிரிகளின் தாக்கத்திலிருந்து விடுவிக்க கூடியவர் இந்த பைரவர்.

இதையும் படிக்கலாமே: இந்த முறையில் சிவன் பார்வதியை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். எப்பேர்ப்பட்ட களத்திர தோஷமாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.

இந்த பரிகாரம் மிக மிக எளிமையானது அனைவராலும் செய்யக்கூடியது தான். இது போன்ற பிரச்சனை இன்று வாழ்க்கையில் பெரும்பாலானோர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான அந்த நிலை மாற இந்த ஒரு எளிய பரிகாரம் பெரிய உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -