இந்த முறையில் சிவன் பார்வதியை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். எப்பேர்ப்பட்ட களத்திர தோஷமாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.

sivan parvathy
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினங்களுக்கும் அதற்குரிய இணையை தேடி தங்கள் வம்சத்தை விருத்தி செய்யும் தன்மை இருக்கிறது. அதன் அடிப்படையில் மனிதர்களாக பிறந்தவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் துணையை பெற்றோர்கள் தேடி திருமணம் என்ற பந்தத்தில் இணைத்து வைப்பார்கள். ஆனால் சிலருக்கு திருமண வயதை தாண்டியும் திருமண யோகம் கிடைக்காமல் இருப்பார்கள். அவ்வாறு திருமணம் தடைப்பட்டு இருப்பவர்களுக்கு களத்திர தோஷம் இருக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எப்பேற்பட்ட களத்திர தோஷம் இருந்தாலும் சிவன் பார்வதியை எப்படி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

திருமண தடையை விலகவும், குறித்த நேரத்தில் திருமணம் நடைபெறவும், நல்ல வரன் அமையவும் செய்யக்கூடிய பரிகாரங்கள் பல இருக்கின்றன. அதேபோல் வழிபாட்டு முறைகளும் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக சிவன் பார்வதியை ஆண்களும் பெண்களும் எவ்வாறு வழிபட்டால் அவர்களுடைய திருமணம் விரைவில் நடைபெறும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பெண்களுக்கு உரிய வழிபாட்டு முறை:
இந்த வழிபாட்டு முறைக்கு நமக்கு சிவன் பார்வதி இணைந்த ஒரு படம் தேவைப்படும். பிறகு 7 விரலி மஞ்சள், 7 கொட்டைப்பாக்கு, 7 அச்சு வெல்லம், 7 மஞ்சள் தடவிய பூனல், 7 மஞ்சள் நிற பூ, 700 கிராம் கொண்டைக்கடலை, 7 ஒரு ரூபாய் நாணயங்கள், 70 மீட்டர் மஞ்சள் பட்டு துணி போன்றவை தேவைப்படும்.

வளர்பிறையில் வரக்கூடிய சுப முகூர்த்த நாள் அன்று காலை திருமணம் ஆக வேண்டிய பெண் குளித்து தங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் நிற துணியை விரித்து, அதில் அனைத்து பொருட்களையும் வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டியை சிவன் பார்வதி புகைப்படத்திற்கு முன்பாக அவர்களின் பாதத்திற்கு கீழ் வைத்து ஒரு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு மனதார தங்களுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள் அகலில் நெய் தீபம் ஏற்றி வைத்து தங்களுடைய வேண்டுதலை சிவன் பார்வதியிடம் கூற வேண்டும். 40வது நாள் வீட்டில் பூஜையை முடித்துவிட்டு அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு போக வேண்டும். இந்த மூட்டையை எடுத்துச் சென்று அந்த கோவிலின் தலவிருச்சத்தில் கட்டி விட மனதார பிரார்த்தனை செய்து விட்டு வர வேண்டும்.

- Advertisement -

ஆண்களுக்குரிய வழிபாட்டு முறை:
ஆண்களுக்கும் சிவன் பார்வதி படம் தேவைப்படும். மேலும் 7 சந்தன கட்டை, 7 ஒரு ரூபாய் நாணயங்கள், 7 கற்கண்டு, 7 அரிசி, 7 லவங்கப்பட்டை, 7 பூனல், 7 வெள்ளை நிற பூக்கள் மற்றும் 70 மீட்டர் வெள்ளை பட்டு துணி தேவைப்படும்.

இவர்களும் பெண்களுக்கு சொன்ன வழிமுறைப்படி. 40 நாட்கள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சிவாலயத்திற்கு சென்று அவர்கள் கையாலேயே அந்த மூட்டையை தலவிருச்சத்தில் கட்டிவிட்டு மனதார வேண்டிக் கொண்டு வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாமல் அனைத்தும் அடகு கடையில் இருக்கிறதா? அப்போ சிவபெருமானை நினைத்து இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். விரைவிலேயே அனைத்து நகைகளும் உங்கள் வீடு வந்து சேரும்.

இந்த முறைப்படி வழிபாட்டை ஆண்களும், பெண்களும் மேற்கொள்ளும் பொழுது அவர்களுக்கு இருக்கக்கூடிய எப்பேற்பட்ட களத்திர தோஷமாக இருந்தாலும், திருமண தடையை ஏற்படுத்தக் கூடிய தோஷமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி விரைவிலேயே சிவபெருமானும் பார்வதி தேவியும் அவர்களுக்கு திருமண யோகத்தை அருள்வார்கள்.

- Advertisement -