முருகனை 19 முறை இப்படி சுற்றி வந்தால் மனதிற்கு பிடித்த வேலை, கை நிறைய சம்பளத்தில் உடனே கிடைக்கும்.

murugan
- Advertisement -

படித்த படிப்புக்கு ஏற்ற, நாம் விரும்பிய வேலையை அடைவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. கை நிறைய சம்பளத்தோடு கௌரவத்தோடு, வேலை பார்க்க வேண்டும் என்றால், அதற்கு வழி காட்டக்கூடிய கடவுள் இந்த முருகப்பெருமான்தான். முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்தால் மனதிற்கு பிடித்த வேலையை கைநிறைய சம்பளத்தோடு உடனடியாக பெற முடியும், இந்த கேள்விக்கு உண்டான பதிலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேலை கிடைக்க முருகப்பெருமான் வழிபாடு

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தோறும் செய்ய வேண்டும். யாருக்கு வேலை தேவை என்று நினைக்கிறீர்களோ, அவர்களே தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பையனுக்காக அம்மா செய்வது, அப்பா செய்வது என்பது பரிகாரத்திற்கு அத்தனை பவர் கொடுக்காது. அதேபோல உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகர் கோவிலில் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது.

- Advertisement -

ஆனால் பழமையான முருகன் கோவில்களில் இந்த பரிகாரத்தை செய்யும் போது அதற்கான பலன் இன்னும் கொஞ்சம் விரைவாக கிடைக்கும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை ஒரு முறை செய்யுங்கள். புதுசாக கல் உப்பு வாங்கிக்கோங்க.

முருகன் கோவில் வாசலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து அந்த கல்லுப்பை உங்களுடைய இரண்டு உள்ளம் கைகளிலும் மொத்தமாக அள்ளிக் கொள்ளுங்கள். முருகன் கோவிலுக்குள் நுழையும் போதே உங்கள் இரண்டு கைகளிலும் கல் உப்பு இருக்க வேண்டும். உள்ளங்கைகளில் இருக்கும் கல் உப்பை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முருக பெருமானை தரிசனம் செய்யுங்கள். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டும். அதற்கு உண்டான வழியை முருகா நீ தான் காட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு முருகன் கோவிலை 19 முறை சுற்றி வலம் வர வேண்டும். 19 முறை சரியாக கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

கையில் இருக்கும் கல்லுப்பு நல்ல அழுத்தத்தோடு இருக்க வேண்டும். கல்லுப்பின் அந்த அச்சு உங்கள் கையில் பதிய வேண்டும். அந்த அளவுக்கு இருக்கம் கொடுத்துக்கோங்க. அதற்காக ரத்தம் வரும்படி செஞ்சுராதீங்க. 19 முறை வலம் வந்த பிறகு கொடி மரத்திற்கு முன்பு முருகப் பெருமானை நமஸ்காரம் செய்து கொண்டு, கோவிலை விட்டு வெளியே வந்து விடுங்கள்.

- Advertisement -

கோவிலுக்கு பக்கத்திலேயே ஓரமாக ஒரு இடத்தில் கையில் இருக்கும் கல்லுப்பை கீழே கொட்டி விடுங்கள். கால் படாத இடமாக பார்த்து இந்த கல்லுப்பை கொட்டிடுங்க. பிறகு கொஞ்சம் வாட்டர் கேனில் தண்ணீரை எடுத்து கையை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். பிறகு நேராக வீட்டிற்கு வந்து வீட்டில் இருக்கும் பூஜை அறையில் சுவாமியை ஒருமுறை பார்த்து வேண்டிக்கணும். அவ்வளவுதான்.

இதே போல செவ்வாய்க்கிழமை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவில் சூப்பரான வேலை உங்களுக்கு கிடைக்கும். இப்படி கோவிலை வலம் வரும்போது கூடுமானவரை உங்களுடைய கையில் செல்போன், வாட்ச், ஹெட் போன் போன்ற பொருட்கள் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த அக்டோபர் மாதத்தில் சுக்கிர பெயர்ச்சியால் சுக்கிர திசை அடிக்க போகும் 3 அதிஷ்ட ராசிகள்.

இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை நீங்களே பரிகாரத்தை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெரலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -