வெளியே செல்வதற்கு முன் இப்படி செய்தால், நீங்கள் போற காரியம் 100% சக்சஸ். வெற்றியை உங்கள் பின்னால் தேடி வர வைக்கும் பரிகாரம்.

pillaiyar-prayer
- Advertisement -

ஒரு விஷயத்தை புதியதாக தொடங்குவதற்கு முன்பு மனதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நாளைக்கு இந்த முக்கியமான வேலையை செய்ய தொடங்க போகின்றோம். நிச்சயமாக இதில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்ப வேண்டும். ஆரம்பிக்கும் போதே சந்தேகம். இது நமக்கு செட்டாகுமா. இந்த வேலை நல்லபடியாக முடியுமா, ஏதாவது பிரச்சனை வந்து விடுமா, என்று இழுப்பறியாக ஆரம்பிக்கும் வேலை இழுபறியாகத்தான் செல்லும்.

முதலில் ஒரு வேலையை செய்வதற்கு முன்பு அந்த வேலை நமக்கு செட் ஆகும் என்று முதலில் நம்பிக்கை வையுங்கள். அதன் பின்பு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். முழு நம்பிக்கையுடன் நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்வதாக இருந்தாலும் சரி இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

உதாரணத்திற்கு ஒரு வேலைக்கு இன்டர்வியூக்கு போறீங்க, அல்லது வாழ்க்கை துணையை பார்க்க போறீங்க, குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போறீங்க. நீங்களே புதியதாக ஏதாவது தொழில் தொடங்க போறீங்க. இல்ல தங்கம் வாங்க போறீங்க. தாலி வாங்கப் போறீங்க முகூர்த்தப்பட்டு வாங்க போறீங்க, வெள்ளி வாங்க போறீங்க, இப்படி ஏதோ ஒரு நல்ல காரியத்துக்கு போறீங்க. அது உங்களுக்கு சாதகமாக நடக்க வேண்டும். நல்லபடியாக நடக்க வேண்டும் என்று நினைத்து இதை செய்யலாம்.

காரிய வெற்றி பெற விநாயகர் வழிபாடு:
வெற்றி என்றாலே அது விநாயகர் தான். தடைகளை தகர்க்க வழிபட வேண்டிய தெய்வம் என்றால் அது விநாயகர் தான். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு அந்த ஒரு நிமிடத்திற்கு முன்பு, இந்த வழிபாடு செய்ய வேண்டும். பூஜையறைக்கு சென்று விநாயகரை மனதார நினைத்துக் கொண்டு, குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, செல்லும் காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து உங்களை நீங்களே ஒரு முறை சுற்றி, நமஸ்காரம் செய்து வீட்டில் இருந்து உடனடியாக வெளியே கிளம்பி விடுங்கள். அவ்வளவுதாங்க. வேற என்ன உங்கள் பயணத்தில் எந்த தடையும் இல்லை. வெற்றி நிச்சயம் உங்களுக்குத்தான்.

- Advertisement -

சுலபமாக செய்ய வேண்டும் என்றால் இதை செய்துவிட்டு வெளியே கிளம்பி விடலாம். நீங்க போக போற காரியம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். இதுதான் உங்களுடைய வாழ்க்கையின் டர்னிங் பாயிண்ட். இதை சரியாக நடத்தினால் வாழ்க்கையில் நீங்கள் டாப்ல போயிருவீங்க. கோவிலுக்கு போலாம்னு நினைக்கிறீங்க. பக்கத்துல பிள்ளையார் கோவில் இருக்கு.

பிள்ளையாருக்கு ஒரு சிவப்பு நிற பூவை வாங்கிக் கொண்டு செல்லுங்கள். பிள்ளையாருக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மூன்று தோப்புக்கரணம், மூன்று பிள்ளையார் கொட்டு, பிள்ளையாரை ஒரே ஒரு முறை வலம் வந்து, அந்த கோவிலில் ஒரு நிமடம் அமர்ந்தாலும் போதும். கோயில் பிரகாரத்தில் மனதார பிரார்த்தனை செய்து உங்களுடைய வேலைக்கு நீங்கள் செல்லலாம். போகும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் எப்போதும் சண்டை, தொழிலில் முடக்கம் பண தடை போன்றவைகளால் நீங்கள் பெரிதும் துன்பப்படுகிறீர்களா? அதற்கு காரணம் நீங்கள் அணியும் இந்த ஆடையாக இருக்கலாம்.

பலமுறை தவறவிட்ட ஒரு வேலையை, ஒரு முறை பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டு முறைகளை செய்துவிட்டு உங்களுடைய முயற்சிகளையும் மேற்கொண்டு பாருங்கள். 10 முறை முயற்சி செய்தும் கிடைக்காத ஒன்று 11 வது முறை பிள்ளையாரை வணங்கி விட்டு சென்றால் நிச்சயம் கிடைக்கும். அதுதான் விநாயகருக்கு இருக்கும் பவர். முழு நம்பிக்கையோடு இதை செய்தால் விநாயகர் உங்களுடனே துணைக்கு நிற்பார் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -