காரிய தடை விலக பரிகாரம்

pillaiyar2
- Advertisement -

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் காரிய தடை என்பது, அவனுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருக்கும். எந்த ஒரு வேலையை தொட்டாலும் துலங்காது. திரும்பத் திரும்ப ஒரு வேலையை செய்து கொண்டே இருந்தாலும் இழுபறியாக இருக்குமே தவிர, இந்த வேலையை செய்தோமா முடித்துவோமா என்று இருக்கவே முடியாது.

இதுவே அவனுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக வந்து நிற்கும். காரியதடையை தகர்த்தெறிய ஒரு அருமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

காரிய தடை விலக பரிகாரம்

ஒருவருக்கு காரிய தடை அகல வேண்டும் என்றால், அந்த சூரிய பகவானின் அனுகிரகம் முதலில் கிடைக்க வேண்டும். நாளைக்கு முக்கியமான வேலைக்காக வெளியே போறீங்க அப்படி என்றால், நீங்க முதல்ல காலை சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து குளித்து விட வேண்டும். சூரிய உதயத்தின் போது அந்த சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்து, சூரிய பகவானின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். இதுதான் முதல் விஷயம்.

சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, ஒரு சின்ன துண்டு வெல்லத்தை நீங்கள் சாப்பிட்டு விடுங்கள். வெல்லம் சூரிய பகவானின் அனுகிரகத்தை உங்களுக்கு முழுமையாக கொடுக்கும். அடுத்தபடியாக நமக்கு தேவையான பொருள் கிராம்பு. 5 கிராம்பை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு நீங்க என்ன முயற்சிகள் எடுக்கப் போகிறீர்களோ, அந்த முயற்சி வெற்றி அடைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு வேலைக்கு இன்டர்வியூக்கு போறீங்க. அந்த வேலை உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச வேலை, அந்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து, இந்த கிராம்பை அப்படியே ஒரு வெள்ளை பேப்பரில் வைத்து மடித்து உங்க பேக்கெட்டிலோ, பர்சிலோ வைத்துக் கொள்ளலாம்.

இன்டர்வியூ அட்டென்ட் பண்ணும் போது, இந்த கிராம்பு உங்களோடு இருக்க வேண்டும், அந்த மாதிரி பாத்துக்கோங்க. அடுத்தபடியாக பிள்ளையாரை கும்பிட்டு, வீட்டிலிருந்து கிளம்புங்கள். ‘ஓம் கம் கணபதியே நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு, செல்லும் காரியம்,  வெற்றி அடைய வேண்டும் என்று மனதாரப் பிள்ளையாரிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும். மேல் சொன்ன இந்த மூன்று விஷயங்களை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு காரியத்தடை இருக்காது.

- Advertisement -

வேலைக்கு இன்டர்வியூக்கு போகும்போதுதான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமா? மற்ற நல்ல காரியங்கள், காரிய தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு திருமணத்திற்கு பொண்ணு பாக்க போறீங்க, பையன் பார்க்க போறீங்க, அந்த காரியம் சக்சஸ் ஆக வேண்டும் என்றாலும் இதை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

காலேஜில் குறிப்பிட்ட படிப்புக்கு சீட் கிடைக்க வேண்டும் அல்லது லோன் வாங்க போகும்போது, இந்த பரிகாரம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு எந்த நல்ல காரியம் நடக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செஞ்சுக்கோங்க. அந்த இறைவனின் அனுகிரகம் முழுமையாக கிடைக்கும் நல்லதே நடக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

- Advertisement -