எடுத்த காரியத்தில் முழுமையான வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும்.

astrology
- Advertisement -

நாம் எந்த ஒரு காரியங்களில் ஈடுபடுவதென்றாலும், அவை நமக்கு நன்மை தருமாறு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்கால உலகில் நமக்கும், நமது சந்ததியினருக்கும் நன்மை ஏற்படும் வகையிலான காரியங்களில் ஈடுபடும் பொழுது, அது வெற்றி பெற வேண்டும் என்பது தான் நம் அனைவரின் தீவிர எண்ணமாக இருக்கும். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி 12 ராசியில் பிறந்தவர்களும், தாங்கள் புதிதாக ஈடுபடும் காரியங்களில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் புதிதாக தொடங்க இருக்கின்ற எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றியை அடைய கோயிலுக்கோ அல்லது ஏழை மக்களுக்கோ துவரம் பருப்பை தானம் தந்து விட்டு, சுப்ரமணியர் வழிபாடு செய்து பிறகு தொடங்க வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை பயிரை ஏழைகளுக்கோ அல்லது கோயிலுக்கோ தானம் செய்த பிறகு புதிய முயற்சி மற்றும் காரியங்களில் ஈடுபட்டால், அந்த ராசியினர் எண்ணிய பலன்கள் கிடைக்க பெறுவார்கள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டுகளை தானம் செய்து, பெருமாள் வழிபாடு செய்த பிறகு புதிய காரியங்களை தொடங்குவதால், அது அந்த ராசியினர் எதிர்பார்த்த பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்கள் புதிதாக ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு செய்த பிறகு காரியங்களில் ஈடுபட்டால் அவை சிறப்பான வெற்றிகளை பெறும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் அளித்துவிட்டு, சிவபெருமான் வழிபாடு செய்த பிறகு புதிதாக எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக தேன் தானம் அளித்து, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்ட பிறகு தொடங்கினால் சிறப்பான பலன்களை பெறலாம்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் புதிதாக எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கும் முன்பாக சர்க்கரை தானம் கொடுத்து, சாந்தரூபத்தில் இருக்கும் அம்பாளை வழிபாடு செய்த பிறகு தொடங்கினால் சிறப்பான வெற்றிகளை பெறலாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் துவரம் பருப்பை தானம் செய்து,விட்டு, அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானை வழிபட்ட பிறகு தாங்கள் எந்த ஒரு புதிய காரியங்களில் ஈடுபட்டாலும், அவை சிறப்பான வெற்றிகளை பெறும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழங்களை தானம் செய்துவிட்டு, நவக்கிரகங்களில் குரு பகவானை வழிபாடு செய்த பிறகு புதிய காரியங்களை தொடங்கினால் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

மகரம்:
எந்த ஒரு புதிய காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவும் மகர ராசியினர் கருப்பு எள் தானியங்களை தானம் அளித்த பிறகு ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபாடு செய்த பிறகு அக்காரியங்களில் ஈடுபட்டால் எதிர்பார்த்த பலன்களை பெறலாம்.

கும்பம்:
மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரு ராசிகளுக்கும் அதிபதியாக சனி பகவான் இருப்பதால், மகர ராசிக்கு கூறப்பட்ட அதே பரிகாரம் கும்ப ராசிக்கும் பொருந்தும். எனவே கும்ப ராசியினரும் கருப்பு எள் தானம் செய்து ஆஞ்சநேயரை வழிபாடு செய்த பிறகு காரியங்களை தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே: நீங்க கல்யாணம் பண்ணிக்க போறவங்க கிட்ட இந்த 5 குணங்கள் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாருமே இருக்க முடியாது தெரியுமா?

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்கள் கற்கண்டுகளை தானம் செய்த பிறகு, பைரவ மூர்த்தியை வழிபாடு செய்து புதிய காரியங்களை தொடங்குவதால் அவை மிக சிறப்பான பணங்களை பெற்றுத்தரும்.

- Advertisement -