திருமண தடை விலக கருப்பு உப்பு பரிகாரம்

karuppu uppu
- Advertisement -

அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் இன்னொருவர் துணையாக வருவது தான் திருமணம் என்றாலும் அந்த திருமணத்தால் இரண்டு குடும்பங்களும் அவர்களின் சொந்த பந்தங்கள் என்று அனைவருமே ஒன்று சேர்கிறார்கள். அந்த திருமணம் காலத்தில் நடக்கவில்லை என்றால் அதனால் சம்பந்தப்பட்டவர்களும், பெற்றவர்களும் வருத்தப்படுவார்கள். அந்த வருத்தத்தை தீர்ப்பதற்குரிய எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம் ‌.

பெண்ணை பெற்றவர்களும், பிள்ளையை பெற்றவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம் என்பதை செய்து முடித்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக பல வரன்களையும் ஏற்பாடு செய்வார்கள். என்னதான் வரன்களை பார்க்க ஆரம்பித்தாலும், ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவை அனைத்தும் தட்டிக் கழித்துக் கொண்டே போய்க்கொண்டு இருக்கும்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் எந்த பொதுவான நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் இன்னும் திருமணம் நடக்கவில்லையா ஏன் என்ன பிரச்சனை என்று நண்பர்களும், உறவினர்களும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். இந்த திருமண தடைகள் அது எதுவாக இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு மிகவும் எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். யாருக்கு திருமண தடை ஏற்பட்டு இருக்கிறதோ அவர்கள் கையால் இந்த பரிகாரத்தை செய்தாலே போதும். இந்த பரிகாரத்தை வீட்டிற்குள் செய்யக்கூடாது. மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டிற்கு வெளியில் என்று நாம் கூறும் பொழுது அது கடற்கரையாக இருந்தால் அது மிகவும் நன்றாக இருக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது கருப்பு உப்பு. இந்த கருப்பு உப்பு அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இந்த கருப்பு உப்பை தங்களுடைய கையில் எடுத்து முதலில் உச்சந்தலையில் வைக்க வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து நெஞ்சின் நடுப்பகுதியில் வைக்க வேண்டும். அதாவது நெஞ்சுக்குழி என்று சொல்வோம் அல்லவா அதில் வைக்க வேண்டும். மூன்றாவதாக அந்த கருப்பு உப்பை எடுத்து தொப்புளின் மேல் வைக்க வேண்டும்.

இந்த ஒவ்வொரு இடத்திலும் இரண்டு நிமிடம் வைத்துவிட்டு பிறகு இந்த உப்பை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். கடற்கரையில் அமர்ந்து செய்பவர்கள் கடலில் சேர்த்து விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடம்பில் இருக்கக்கூடிய சக்ராக்கள் செயல்பட ஆரம்பித்து திருமண தடை என்பது விலக ஆரம்பிக்கும்.

- Advertisement -

சம்பந்தப்பட்டவர்கள் இல்லாத பட்சத்தில் வெளியூரிலோ அல்லது அவர்களுக்கு இந்த மாதிரி பரிகாரம் செய்ய விருப்பமில்லாத சூழ்நிலையிலோ அவர்களுடைய புகைப்படத்தை வைத்து அவர்களின் பெற்றோர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்கு ஒரு பிளாஸ்டிக் டப்பா ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அவர்களுடைய புகைப்படத்தை வைத்து அதற்குள் கருப்பு உப்பை போட்டுவிட்டு அதை மூடி விட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அந்த கருப்பு உப்பை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டமான வாழ்வை அள்ளி தரும் கரு மஞ்சள்

இந்த எளிமையான பரிகாரத்தை திருமண தடை இருப்பவர்கள் தங்கள் கைகளாலேயே செய்து விரைவிலேயே திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

- Advertisement -