நீங்கள் செய்கின்ற வேலையில் வெற்றி கிடைக்கவில்லையா? எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தடை ஏற்படுகிறதோ? அப்பொழுது இந்த பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்துவிடுங்கள்

sabam
- Advertisement -

ஒரு சில வீடுகளில் தொடர்ந்து துன்பங்களும், கஷ்டங்களும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதைத் தொட்டாலும் அதில் தோல்வி வந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் பெரிதளவு ஈடுபாடும் இருக்காது. தொடர்ந்து பணக்கஷ்டம், மனக்கஷ்டம் மற்றும் உடல் உபாதைகளை சந்தித்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறான பிரச்சினைகள் ஏன் வருகிறது என்று யோசித்துப் பார்த்தால் அதற்கு விடை ஏதும் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் அவர்களின் பரம்பரையை தொடர்ந்து வரும் சாபமாக கூட இருக்கலாம். இவ்வாறு பல நூறு வருடங்களுக்கு முன்னரும் நமது குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபத்தை தீர்ப்பதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kannagi

நம்முடைய பரம்பரையைச் சேர்ந்த யாரோ ஒருவர் எப்போதோ செய்த பாவத்திற்கான பலனை அவர்களைத் தொடர்ந்து வரும் சந்ததிகளும் அனுபவிக்க வேண்டிய நிலைமை உண்டாகும். இவ்வாறு தலைமுறை சாபம் என்பது நமது தொப்புள் கொடியின் வழியாக தான் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. இவ்வாறு உடல் வழியே கடத்தப்படும் இந்த சாபத்தை நம்மை விட்டு அகற்றுவதற்க்கு வழிகள் எதுவும் கிடையாது. ஆனால் இவற்றால் ஏற்படும் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

- Advertisement -

இந்த சாபத்தின் பாதிப்பிலிருந்து விடுபட நாம் செய்யும் பரிகாரத்திற்கு தேவைப்படும் ஒரு பொருள் குன்றின்மணி. எந்த வகைக் குன்றின் மணியாக இருந்தாலும் அதை பயன்படுத்தி இந்த பரிகாரத்தை செய்யலாம். மிகவும் எளிதாக நாட்டு மருந்து கடைகளில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் இருக்கும் குன்றின் மணிகள் கிடைக்கின்றன இதனை வாங்கிக் கொண்டும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

mani

அதற்காக வீட்டின் பூஜை அறையில் கிழக்கு முகமாக சம்மணம் போட்டு அமர்ந்து சிறிதளவு கொன்றேன் மணிகளை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு இரு கைகளையும் பைரவ முத்திரை போல் வைத்து தொப்புளுக்கு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கண்களை மூடி அமைதியாக அமர்ந்து உங்களை தொடரும் பாவங்கள் மற்றும் சாபங்கள் உங்களை விட்டு அகல வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் கையில் இருக்கும் இந்த குன்றின் மணிகளை ஒரு வெள்ளை பேப்பரில் மடித்து அதனை சிறிது தூரம் சென்று கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும் அல்லது நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் ஓடும் நீர் இருந்தால் இதனை அதில் போட்டு விட வேண்டும்.

birava

இவ்வாறு தொடர்ந்து இருபத்தி ஏழு நாட்கள் செய்து வர நல்ல பலன் உண்டாகும் இருபத்தி ஏழு நாட்களுக்கு செய்துவிட்டு இதனை முடித்து விடாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் நூறு வருடங்களுக்கு முன் செய்த பாவமாக இருந்தாலும் அந்த பாதிப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். இந்த எளிய பரிகாரத்தை நீங்களும் உங்கள் வீட்டில் முறையாக செய்து பயன்பெற வேண்டுமென வாழ்த்தி பதிவினை இத்துடன் முடிவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -