கொடிய ஜென்ம தோஷத்தையும், தீராத பண தோஷத்தையும் தீர்க்க கோமாதாவிற்கு உங்கள் கையால் இதை தந்தால் போதும். தோஷங்கள் நீங்கி மகாலட்சுமியின் அருளாசியுடன் வீட்டில் செல்வ கடாக்ஷம் நிறைய ஆரம்பிக்கும்.

mahalakshmi Ko matha
- Advertisement -

எவ்வளவு நல்லது செய்தும் நாம் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் கெடுதல் செய்வார்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். இந்த எண்ணம் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் இருக்கத் தான் செய்கிறது. நாம் படும் துன்பத்திற்கு காரணம் இந்த பிறவியில் நாம் செய்த தவறு கிடையாது. இதற்கு முன் பிறவியில் நாம் செய்ததற்கெல்லாம் சேர்த்து தான் இந்த பிறவியில் அனுபவித்து கொண்டிருக்கிறோம். இப்படியான ஜென்ம தோஷம் நம்மை தொடர்ந்தால் வாழ்க்கை எல்லாவற்றிலும் துன்பப்பட்டு கொண்டு தான் இருக்க வேண்டும். இந்த தோஷத்தை நீக்க ஒரு எளிய பரிகாரத்தை இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கர்ம வினைகளால் ஏற்படும் இந்த தோஷங்களால் நமக்கு பணம் சேரவே சேராது. அது வீண் விரயங்களாகவே சென்று கொண்டே இருக்கும். அதே போல் வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் உபாதைகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் நிம்மதியே இருக்காது. செலவுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த கர்ம வினைக்கான தோஷத்தை நீங்காமல் நீங்கள் எத்தனை பூஜை செய்தாலும் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்காது.

- Advertisement -

தரித்திரம், தோஷங்கள், கர்மா நீங்க கோ பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் எந்த கோவிலுக்கும் செல்ல வேண்டாம் எந்த பொருளையும் வாங்க வேண்டாம். தினமும் உங்கள் கண்களில் படும் பசு மாட்டிற்கு கீரைகள், பழங்கள் காய்கறிகள் இப்படி ஏதாவது ஒன்றை தினம் தோறும் வாங்கி கொடுக்க வேண்டும். வீட்டில் நாம் வாங்கி உண்டு மீதமானவற்றை கொடுக்கக் கூடாது. பசுவிற்கு என தனியாக வாங்கி கொடுக்க வேண்டும் வீட்டில் சப்பாத்தி செய்து அதையும் பசு மாட்டிற்கு தானமாக கொடுத்தால் நல்லது.

பசு மாடு வீட்டுக்கு அருகில் இல்லாதவர்கள் வீட்டில் ஒரு உண்டியலை வைத்து அதில் தினந்தோறும் உங்களால் முடிந்த அளவு பணத்தை போட்டுக் கொண்டு வர வேண்டும் ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட பரவாயில்லை தாராளமாக போடலாம். அது ஒரு குறிப்பிட்ட தொகையாக சேர்ந்த பிறகு கோ சாலைகளுக்கு சென்று அங்கு பசுவிற்கு என்ன தேவையோ அதை வாங்கி கொடுக்கலாம்.

- Advertisement -

இதை எத்தனை காலம் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் கணக்கு கிடையாது. உங்களால் எத்தனை காலம் கொடுக்க முடியுமோ அவ்வளவு நாட்கள் வாங்கி கொடுக்கலாம். உங்களுக்கு இப்பொழுது மனநிறைவான வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறதோ அன்று இந்த பரிகாரத்தை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீட்டில் வாழும் உங்களின் கனவு நிறைவேற வேண்டுமா? வாஸ்து பகவானுக்கு இதை மட்டும் தவறாமல் செய்து விடுங்கள். உங்களின் கனவு இல்லம் மிக விரைவில் கை கூடும்.

இது போன்ற பரிகாரங்களை தேடி செய்வதை காட்டிலும் நாம் வாழும் வாழ்க்கையை நல்ல முறையில் பிறரை காயப்படுத்தாமல் வாழ்ந்தாலே இது போன்ற கர்ம வினைகள் நம்மை சூழாமல் காத்து கொள்ளலாம். இன்று நாம் நன்றாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் வேண்டாத எல்லாம் செய்து நாமும் துன்பப்படுவதுடன் நம் சந்ததியினரையும் துன்பத்திற்கு ஆளாக்கி விடுகின்றோம். இந்த ஒரு கருத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டு பரிகாரத்தை செய்து இனி வாழும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வோம்.

- Advertisement -