சொந்த வீட்டில் வாழும் உங்களின் கனவு நிறைவேற வேண்டுமா? வாஸ்து பகவானுக்கு இதை மட்டும் தவறாமல் செய்து விடுங்கள். உங்களின் கனவு இல்லம் மிக விரைவில் கை கூடும்.

- Advertisement -

சொந்தமாக வீடு, நிலம் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாகவே இருக்கும். ஒரு சிலர் சொந்தமாக வீடு, நிலம் எல்லாம் இருந்தும் ஒன்று அதில் வீடு கட்ட முடியாது அல்லது சொந்த வீட்டில் வாழும் யோகம் இருக்காது. இப்படி வீடு சம்பந்தமான எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கு வாஸ்து தோஷம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வாஸ்து தோஷத்தை சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகாரத்தை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

புதிதாக வீடு கட்ட தொடங்கும் போது வாஸ்து பகவானுக்கு பூமி பூஜை போட்ட பிறகு தொடங்குவது நல்லது. ஆனால் இதை பெரும்பாலானோர் செய்வது கிடையாது. பூமி பூஜை என்பது நிலத்தின் அடியில் இருக்கும் வாஸ்து பகவானுக்கு நான் இந்த இடத்தில் வீடு கட்டி வாழப் போகிறேன். நீங்கள் இங்கிருந்து நாங்கள் நல்ல படியாக வாழ அருள் புரியுங்கள் என்று வேண்டிக் கொண்டு வீடு கட்டும் பணியை தொடங்குவது தான். எப்படி செய்த பின் அந்த நிலத்தில் வீடு கட்ட தொடங்குவது மிகவும் நல்லது.

- Advertisement -

ஒரு வேளை நீங்கள் வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்றாலும், சொந்தமாக நிலம் உள்ளது அதில் வீடு கட்டுவதற்கான யோகம் வரவில்லை என்றாலும் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம்.

வாஸ்து தோஷத்தை நீக்கும் எளிய பரிகாரம்:
வீடு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுள் முருகப்பெருமான். காலண்டரில் வாஸ்து நாட்கள் என்று வாஸ்து பகவானுக்கு தனியாக நாள் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த நாளில் புதிதாக வீடு கட்டுபவர்கள் பூஜை போட்டு ஆரம்பிப்பார்கள். நாம் இந்த பரிகாரத்தையும் அந்த நாளில் தான் ஆரம்பிக்க வேண்டும்.

- Advertisement -

இது போன்றதொரு வாஸ்து நாளில் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபம் ஏற்றி வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் எல்லாம் நெய்வேத்தியமாக வைத்து முருக பெருமானிடம் வேண்டி மனதார வேண்டி வாஸ்து பகவானையும் நினைத்துக் கொண்டு உங்களின் நிலம் சம்பந்தமான பிரச்சனை எதுவோ அது தீர்வு வேண்டும் என வேண்டிக் கொண்டு கற்பூர தீபாராதனை காட்டி பூஜை செய்ய வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் நெய்வேத்தியமாக படைத்த வெற்றிலை, பாக்கு, பழங்களை எல்லாம் உங்கள் வீட்டு வாசலில் மண் தோண்டி மண்ணுக்குள்ளாக அதை புதைத்து மூடி விட வேண்டும். இது வாஸ்து பகவானுக்கு நீங்கள் அளிக்கும் நெய்வேதியம். இப்படி வாஸ்து நாளில் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் நீங்கள் சீக்கிரம் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்லவும், சொந்த வீடு கட்டுவதற்கான யோகமும் சொந்த வீட்டில் மகிழ்ச்சியான வாழ்வதற்கான அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணத்துடன் இந்த குச்சியை வைத்து பாருங்கள், கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கட்டுக்கடங்காமல் சேரும்!

நீங்கள் உங்கள் சொந்த வீட்டில் கனவை நினைவாக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியோடும் இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்து முருகப் பெருமானின் அருளோடு வாஸ்து பகவானுக்கு இந்த ஒரு தீபத்தையும் நெய்வேத்தியம் படைத்து சொந்த வீட்டில் வாழும் யோகத்தை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -