கடுமையான கஷ்டத்தை கொடுக்கும் கர்ம வினை, பித்ரு தோஷம் போக வெறும் 2 கற்பூரம் இருந்தால் போதுமே! அடுத்தடுத்த கஷ்டத்தில் சிக்கி சின்னாபின்னம் ஆனவங்க இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.

sudam
- Advertisement -

கடவுள் சில பேருக்கு அடுத்தடுத்து அடிகளை கொடுத்துக் கொண்டே இருப்பான். கஷ்டத்தில் நஷ்டத்தில் சிக்கி சின்னாபின்னமானாலும், விடமாட்டான். ஆனாலும், நாம் துயரங்களையும், துன்பங்களையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். இந்த கஷ்டங்களுகெல்லாம், என்ன காரணம் கேட்டால் கர்ம வினை என்பார்கள், பித்ரு தோஷம் என்பார்கள், என்ன ஏது என்று நமக்கு புரிவதற்குள் வாழ்க்கையே முடிந்து விடும்.

திரும்பிப் பார்த்தால் வாழ்க்கையின் முடிவில் நின்று கொண்டு இருப்போம். இப்படி கஷ்டங்களையே அனுபவித்து வாழ்வதில் என்ன சுகம் இருக்கிறது. வாழ்க்கை என்றாலே, வாழ்வதற்கு தானே. அதிலும் சந்தோஷமாக வாழ தானே வாழ்க்கையை இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்றான். இப்படி கஷ்டப்படக் கூடிய வாழ்க்கையை அவன் கொடுக்காமலேயே இருக்கலாம் என்று துன்பப்படுபவர்களுக்காக, ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு எளிமையான பரிகாரம் இது.

- Advertisement -

உங்களுக்கு கர்ம வினை இருக்கோ, பித்ரு தோஷம் இருக்கோ, இல்லையோ, அதையெல்லாம் விட்டுவிடுங்கள். தீராத கஷ்டத்தில் அவதிப்படுகிறீர்களா. தினமும் இதை செய்யுங்கள் போதும். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, 7 மணிக்கு முன்பாக இந்த 2 கற்பூரத்தை உங்கள் வீட்டில் ஏற்றி விட்டால், கற்பூரம் எரிந்து புகையாக பிரபஞ்சத்தோடு பிரபஞ்சம் எப்படி கலக்கிறதோ, அதேபோல உங்கள் கஷ்டங்களும் கண்ணுக்குத் தெரியாமல் எரிந்து காணாமல் போய்விடும். அவ்வளவு தான்.

கர்ம வினைகளும் பித்ரு தோஷமும் நீங்க பரிகாரம்:
முடிந்தால் மெழுகு கற்பூரம் அல்லாமல், கட்டி கற்பூரம் கிடைக்கும் அல்லவா. நாட்டு மருந்து கடைகளில் அதை வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்த பாருங்கள். பசு நெய் உங்களுக்கு கிடைத்தால் நல்லது. மலிவான நெய் வாங்கி பயன்படுத்தாதீங்க. நீங்கள் சாப்பிட பயன்படுத்தும் நெய்யை தனியாக வாங்கி ஒரு பாட்டிலில் ஊற்றி பூஜையறையில் வைத்து விடுங்கள். எச்சில் பட்ட நெய் பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. சாப்பிட முடியாமல் இருக்கும் தரம் குறைந்த நெய்யை பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. இதற்கு ரூல்ஸ் இவ்வளவுதான்.

- Advertisement -

ஒரு மண் அகல் விளக்கு நமக்கு தேவை. அதில் 2 கற்பூரத்தை வைத்து, 2 ஸ்பூன் நெய் விட்டு, கற்பூரத்தை ஏற்றி விடுங்கள். பூஜையறையிலே இதை செய்யலாம். விளக்கு ஏற்றி வைத்து, சாமி கும்பிட்டு, குல தெய்வத்தை நினைத்து விட்டு, இந்த இரண்டு கற்பூரத்தை நெய் ஊற்றி ஏற்றி வைத்துவிட்டு, இந்த கற்பூரம் அணையும் வரை நீங்கள் அந்த சூடத்தின் முன்பு அமர்ந்து செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.

மறைந்த முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். குலதெய்வத்தை நினைத்து வழிபட வேண்டும். குடும்ப கஷ்டம் தீர பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கற்பூரம் எரியும் வரைக்கும் அமைதியாக உட்கார வேண்டும். மனதை இங்கும் அங்கும் அலைபாய விடக்கூடாது. அடுத்தடுத்த வேறு வேலைகளை யோசித்து சிந்தனையை மாற்றக்கூடாது.

இதையும் படிக்கலாமே: ஐந்து புதன்கிழமைகள் இந்த விளக்கை ஏற்றினால், அடுத்த ஐந்து தலைமுறைக்கு உங்கள் குடும்பத்தில் கடன் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது.

உங்களுடைய நினைவு முழுவதும் உங்கள் வழிபாட்டில் தான் ஆழமாக இருக்க வேண்டும். கற்பூரம் அனைத்தும் எரிந்து முடிந்ததும் நமஸ்காரம் செய்து கொண்டு, உங்களுடைய வேலையை செய்ய தொடங்குங்கள். இதை எத்தனை நாட்கள் செய்வது. வாழ்நாள் முழுவதும் செய்யலாம். தினம் தினம் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த கற்பூரம் எரிந்து காணாமல் போக போக கஷ்டங்கள் ஒவ்வொன்றாக எரிந்து காணாமல் போகும். இதில் மறைந்திருக்கும் சூட்சம ரகசியம் உங்களுக்கு தெரியாது. பரிகாரத்தை செய்து பாருங்கள். 48 நாட்களில் பலனை உங்களால் அனுபவிக்க முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -