ஐந்து புதன்கிழமைகள் இந்த விளக்கை ஏற்றினால், அடுத்த ஐந்து தலைமுறைக்கு உங்கள் குடும்பத்தில் கடன் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது.

lakshmi-narasimar
- Advertisement -

தலைமுறை தலைமுறையாக சில குடும்பங்கள் கடலில் மூழ்கி கஷ்டப்பட்டு வரும். செய்யாத பரிகாரம் இருக்காது. யார் என்ன சொன்னாலும் அதை செய்து பார்ப்பார்கள். ஆனால் கடன் பிரச்சனையில் இருந்து வெளிவர முடியாத சூழ்நிலையில் சிக்கி இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான பரிகாரம் தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. முழு சரணாகதியோடு, உன்னை மட்டும்தான் நம்பி வந்திருக்கிறேன் என்று, இந்த விளக்கை ஏற்றுபவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் கடன் இருக்காது. பல பேர் முயற்சி செய்து பார்த்து பலன் கொடுத்த பரிகாரம். நீங்களும் செய்து பாருங்கள். வெறும் விளக்கு ஏற்ற போகிறீர்கள். அவ்வளவுதான். விளக்கு, வெறும் விளக்கு தான். உங்களுடைய நம்பிக்கை சேரும் போது தான் அந்த விளக்குக்கு மகா சக்தி கிடைக்கும்.

கடன் தீர நரசிம்மர் தீப வழிபாடு:
ஐந்து வாரம் புதன்கிழமை தொடர்ந்து இந்த விளக்கை ஏற்ற வேண்டும். கடன் பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ, குறிப்பிட்ட அந்த நபரின் கையால் ஏற்றுவது மிக மிக சிறந்த பலனை தரும். கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவர், அல்லது பிள்ளைகளுக்காக தாய் தந்தை என்று இந்த விளக்கை ஏற்றலாம். தவறு கிடையாது. வாய்ப்பு உள்ளவர்கள் கடன் இருப்பவர்கள், கையாலேயே இந்த விளக்கை ஏற்றுங்கள்.

- Advertisement -

லட்சுமி நரசிம்மர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி லட்சுமி நரசிம்மர் கோவில் இல்லை என்றால், சாதாரணமாக நரசிம்மர் சன்னிதானம் இருந்தாலும் அங்கு சென்று ஏற்றலாம். நரசிம்மர் கோவிலுக்கு புதன்கிழமை அன்று காலை அல்லது மாலை உங்கள் சவுகரியம் போல சென்று 21 மண் அகல் விளக்குகளில், சுத்தமான நெய்யை வாங்கி ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். முடிந்தவரை கடைகளில் நல்ல பசு நெய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். மண் அகல் விளக்குகளை தனியாக வாங்கிக் கொள்ளுங்கள். திரி வாங்கிக் கொள்ளுங்கள்.

ஒரு நாள் முன்னாடியே விளக்குகளை வாங்கி தண்ணீரில் போட்டு ஊற வைத்து சுத்தம் செய்து அதன் பிறகு அந்த விளக்குகளை கோவிலில் கொண்டு போய் ஏற்றுவது சிறப்பு. நாம் வாங்கிய நெய் சுத்தமான நெய் என்ற திருப்தி நமக்கு மனநிறைவை கொடுக்க வேண்டும். இப்படி சுத்தமான நெய்யில் விளக்கு ஏற்றும் போது கிடைக்கக்கூடிய பலன் என்பது இரட்டிப்பாக இருக்கும்.

- Advertisement -

விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு நரசிம்மரின் சன்னிதானத்திற்கு முன்பு அமர்ந்து, நரசிம்மரை கண்கள் குளிர தரிசனம் செய்து, உன்னை மட்டும்தான் நம்பி இருக்கிறேன், என்று மனது உறுதி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தாலும் தவறு கிடையாது. உங்களுடைய பிரார்த்தனையில் உண்மை இருக்க வேண்டும். பக்தி இருக்க வேண்டும். அவ்வளவுதான் நம்பிக்கை இல்லாமல் 21 விளக்கு அல்ல 2000 விளக்கு ஏற்றினாலும் நமக்கு பலன் கிடைக்காது.

இதையும் படிக்கலாமே: கடன் அடையவும், வாரா கடன் திரும்ப கிடைக்கவும் பைரவருக்கு இப்படி வழிபாடு செய்தால் போதும். எவ்வளவு பெரிய கடனும் விரைவில் அடைவதுடன், இழந்த பணத்தையும் திரும்ப பெறலாம்.

ஐந்து வாரம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்ல மாற்றங்கள் எல்லாம் உண்மையா என்பதிலே சந்தேகம் வந்துவிடும். அத்தனை துன்பங்களுக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வை அந்த நரசிம்மர் காட்டிக் கொடுப்பார். பார்ப்பதற்கு தானே நரசிம்மர் உக்கிர தெய்வமாக காட்சியளிக்கிறார். நரசிம்மா! நரசிம்மா! நரசிம்மா! என்று உருகி கூப்பிட்டு பாருங்கள், கூப்பிட்ட குரலுக்கு கண்முன்னே வந்து நின்று உதவி செய்பவர், அவர்தான் நரசிம்மர் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -