கர்ப்பப்பை பிரச்சனையை தீர்க்கும் முருகன் கோவில் வழிபாடு

murugan6
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை பிரச்சனையானது பெரிய விளைவுகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. சில பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனையால் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகிறது. சில பெண்களுக்கு குழந்தைகள் இருந்தும் கர்ப்பப்பையில் கட்டி, மாதவிடாய் நாட்கள் சரியாக வரவில்லை, சில பேருக்கு நீர் கட்டி பிரச்சனை இருக்கும்.

இப்படி நிறைய வகையான பிரச்சனைகள் கர்ப்பப்பையில் இருக்கிறது. உங்கள் கர்ப்பப்பைக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அதை சரி செய்ய நீங்கள் மருத்துவரை நாடி இருப்பீர்கள். மருத்துவத்தை நிறுத்தாதீங்க. கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்க. நிச்சயமாக உங்கள் கர்ப்பப்பை பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை அந்த முருகப்பெருமான் காண்பித்துக் கொடுப்பான்.

- Advertisement -

கர்ப்பப்பை பிரச்சனையை தீர்க்கும் முருகன் கோவில்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வத்தலகுண்டு எனும் ஊரில், தாண்டிக்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு சென்றால் பெண்களுக்கு திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கர்ப்பப்பையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோவில் என்று சொல்லுவார்கள். ஒரு மலையின் மேல் தான் இந்த பாலமுருகன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாவிக்கின்றார். இந்த கோவிலுக்கு எளிதாக எல்லோராலும் சென்றுவிட முடியாது. உங்களுடைய பிரச்சனை தீர வேண்டும் என்று இருந்தால் மட்டும் தான் இப்படிப்பட்ட விஷயங்கள் உங்கள் காதில் விழும்.

- Advertisement -

அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைப்பீர்கள் நீங்கள் இந்த பதிவை படித்துவிட்டு உங்களுக்கும் இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கிறது எனும் பட்சத்தில் இந்த கோவிலுக்கு கொஞ்சம் முயற்சிகள் எடுத்து சென்று வர பாருங்கள். தடைகள் வரும். கோவிலுக்கு செல்ல விடாமல் தடுக்கும்.

அந்த தடைகளை எல்லாம் தவிர்த்து ஒரு முறை இந்த முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு அந்த கோவிலில் சுனை நீர் சுரக்கின்றது. அந்த சுனை நீரை உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இந்த நீர் கெட்டுப் போகக்கூடிய தன்மை கொண்டது அல்ல. ஒரு வருடத்திற்கு நம் வீட்டில் பத்திரப்படுத்தி குடிக்கலாம்.

- Advertisement -

எடுத்த சுனை நீரை வெள்ளை துணியில் வடிகட்டி முருகப்பெருமானிடம் வைத்து அர்ச்சனை செய்து அந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி சேகரித்து பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு ஒரு சின்ன டம்ளர் அளவு இந்த சுனை நீரை பருகி வர கர்ப்பப்பை பிரச்சனை தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கோவிலுக்கு கிருத்திகை அன்று செல்வது ரொம்ப ரொம்ப விசேஷம். அப்படி இல்லை என்றால் உத்திரம் நட்சத்திரத்தன்று இந்த கோவிலுக்கு சென்று அந்த தண்ணீரை எடுப்பது சிறப்பு. நல்லா புரிஞ்சுக்கோங்க. நீங்க கர்ப்பப்பை பிரச்சனைக்காக மருந்து மாத்திரை சாப்பிட்டு வருபவர்களாக இருந்தாலும் சரி, குழந்தைக்காக முயற்சி செய்து கொண்டு மருத்துவரை பார்த்து வருபவர்களாக இருந்தாலும் சரி, மருத்துவம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இருந்தாலும் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான வழிபாட்டு முறையை ஒரு முறை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரச்சனைக்கு அந்த முருகப்பெருமான் ஒரு வழியை காட்டிக் கொடுப்பார்.

இதையும் படிக்கலாமே: தொழில் சிறக்க சக்கரத்தாழ்வார் வழிபாடு.

தாண்டிக்குடி கிராமத்தில் இருந்து முருகனை சென்றடைவதற்கு மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ளது. மலைப்பாதையில் தான் இவரை சென்று தரிசனம் செய்ய வேண்டும். ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. அந்த தாண்டிக்கொடி முருகன் கோவிலில் இருக்கும் சுனை நீரை பருகுங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -